ராஜேந்திர பாலாஜி கம்பி எண்ணுவது உறுதி- அமைச்சர் நாசர்

SHARE

கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கம்பி எண்ணுவது உறுதி என்று பால்வள துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

ஆவடி அருகே திருமுல்லைவாலில் செயல்பட்டு வரும் விதையின் உதயம் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என கூறினார்.

மேலும் எஸ்.பி.வேலுமணி பல ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக, அதே கூட்டணியில் உள்ள அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் ஆகியோர் கவர்னரிடம் சென்று மனு கொடுத்திருந்தனர். தற்போது அரசியல் உள்நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது என்று கூறுகிறவர்கள் இவர்களின் செயலை என்ன சொல்லுவார்கள்.

தவறு செய்தவர்கள் அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவார்கள் என்று தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு உறுதியளித்திருந்தார். அதன்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடுக்கை எடுக்கப்படும். அவர்கள் கம்பி எண்ணப்போவது நிச்சயம். குறிப்பாக ஊழல் செய்தவர்களில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவார். சொல்லப்போனால் ஊழலின் ஊற்றுக் கண்ணே அவர்தான் என சா.மு.நாசர் கடுமையாக விமர்சித்தார்.

அவர்மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும். ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடைபெற்றுள்ளது.

தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். உப்பு சாப்பிட்டவர்கள் நிச்சயம் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

திராவிடியன் ஸ்டிக் பிடித்து நடந்த திராவிடியன் ஸ்டாக் ஸ்டாலின் : முதல்வரை புகழ்ந்த நடிகர் சத்யராஜ்!

Admin

சிக்கிய முன்னாள் அமைச்சர்.. வங்கிக் கணக்கு முடக்கப்படுமா?

Admin

அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.. நல்ல வேளை நான் பிழைத்தேன்.. செல்லூர் ராஜூ கிண்டல்!

Admin

கடவுள் ஸ்ரீ ராம் பெயரில் ஏமாற்றுவது அநீதி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Admin

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் படங்களில் நடிக்க ஆசை… திருமாவளவனின் சினிமா காதல்…

Admin

ராஜீவ்காந்தி விருதை மாற்றியது அரசியல் காழ்ப்புணர்ச்சி: காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு!

Admin

“தெய்வம் நின்று கொல்லும்” – கே.டி.ராகவன் விவகாரத்தில் கடுப்பான காயத்ரி ரகுராம்

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

இஸ்ரேலில் முடிவுக்கு வந்தது 12 வருட நெதன்யாகு ஆட்சி ..புதிய பிரதமராக பதவியேற்றார் நப்தாலி பென்னட்!

Admin

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

Leave a Comment