CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

SHARE

அறிவுள்ள மக்களிடம் யாரும் மோசமான பொய்களைப் பரப்பி ஆட்சி செய்ய முடியாது. ஆனால், உண்மையை சரிபார்ப்பதற்காக அரசுத் தரப்பில் உருவாக்கப்பட்ட அமைப்பும் கூட கடமைக்கு பதில் சொல்லும் நிலைமைதான் தமிழ்நாட்டில் மேலும் வருத்தமளிக்கிறது.

“சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியைக் காணச் சென்றவர்களுக்கு இலவச பேருந்து வசதியை திமுக அரசு செய்துள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சமயத்தில் ஒரு தனியார் அமைப்பின் நிகழ்ச்சிக்கு அரசு இலவச பேருந்து ஏற்பாடு செய்வது விதிமீறலாகும்.”

எனவே திராவிட முன்னேற்ற கழக அரசின் மீது விதிமீறல் புகாரளிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அந்த தகவல் பொய்யானது என்று விளக்கும் விதமாக “ஐபிஎல் போட்டிகளுக்கு இலவச பேருந்து டிக்கெட் – அரசு செலவல்ல” என்று அரசின் உண்மை சரிபார்ர்பு குழு தரப்பில் ஒரு உண்மை சரிபார்ப்பு வெளியிடப்பட்டது.

அதில், “சிஎஸ்கே அணியே அதற்கான பணத்தை நிர்வாகத்திடம் செலுத்தி விட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எந்த ஆதார ரசீதுகளும் இணைக்கப்படவில்லை. ஐபிஎல் தரப்பிலிருந்து பெறவில்லை என்றாலும் போக்குவரத்து கழக தரப்பிலிருந்து பணம் பெறப்பட்ட ரசீதையாவது இணைத்திருக்கலாம். அரசாலேயே பெற முடியாத அளவுக்கு அது ரகசியமான ரசீதா என்ன?

ஏதோ அரசியல்வாதிகளின் குறிப்பு போல அதன்போக்கில் வெறும் வார்த்தைகளால் பதிலளித்தால் போதும் என்ற எண்ணத்தைதான் வெளிப்படுத்துகிறது அச்செய்தி. ஆதாரங்களற்ற இந்த ‘உண்மை சரிபார்ப்பு’ செய்தியை அவர்கள் வெளியிடுவதன் நோக்கம் உண்மையை வெளியிடுவதா அல்லது அரசுக்கு துணைபோவதா என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது.

பரவி வரும் பொய்ச்செய்திகளுக்கு மத்தியில், எந்த ஒரு பொய்யையும் ஆதாரத்தோடு பொய் என்று நிரூபிக்கும் பொறுப்பு இந்தக் குழுவுடையது. அதற்காகவே பிரத்யேகமாக தமிழ்நாடு அரசால் இந்தக் குழு கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டு நவம்பர் மாதம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பாஜகவின் எந்த பெண்ணாவது பாலியல் புகார் கொடுத்துள்ளாரா? – குஷ்புவின் பேச்சால் சர்ச்சை

Admin

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

Admin

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

கீழடி ஆராய்ச்சி வெட்டி வேலை… வெறுப்பைக் கக்கும் துக்ளக்… சரஸ்வதியை தேடுவது என்ன வேலை? கேள்வி கேட்கும் ஆய்வாளர்கள்…

Admin

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் எதற்கு : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Admin

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

யெஸ்.பாலபாரதி நூலுக்கு பாலபுரஸ்கார் விருது… முதல்வர் வாழ்த்து

Admin

தற்கொலைக்கு முயன்ற நபர்… காப்பாற்றிய பேஸ்புக்…

Admin

ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் பயணம் தோல்வி…காரணம் என்ன?

Admin

போட்டி களத்துல மட்டும் தான்… மனசுல இல்ல.. ஒலிம்பிக்கில் தங்கத்தை தாண்டி மின்னிய நட்பு

Admin

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment