CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

SHARE

அறிவுள்ள மக்களிடம் யாரும் மோசமான பொய்களைப் பரப்பி ஆட்சி செய்ய முடியாது. ஆனால், உண்மையை சரிபார்ப்பதற்காக அரசுத் தரப்பில் உருவாக்கப்பட்ட அமைப்பும் கூட கடமைக்கு பதில் சொல்லும் நிலைமைதான் தமிழ்நாட்டில் மேலும் வருத்தமளிக்கிறது.

“சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியைக் காணச் சென்றவர்களுக்கு இலவச பேருந்து வசதியை திமுக அரசு செய்துள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சமயத்தில் ஒரு தனியார் அமைப்பின் நிகழ்ச்சிக்கு அரசு இலவச பேருந்து ஏற்பாடு செய்வது விதிமீறலாகும்.”

எனவே திராவிட முன்னேற்ற கழக அரசின் மீது விதிமீறல் புகாரளிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அந்த தகவல் பொய்யானது என்று விளக்கும் விதமாக “ஐபிஎல் போட்டிகளுக்கு இலவச பேருந்து டிக்கெட் – அரசு செலவல்ல” என்று அரசின் உண்மை சரிபார்ர்பு குழு தரப்பில் ஒரு உண்மை சரிபார்ப்பு வெளியிடப்பட்டது.

அதில், “சிஎஸ்கே அணியே அதற்கான பணத்தை நிர்வாகத்திடம் செலுத்தி விட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எந்த ஆதார ரசீதுகளும் இணைக்கப்படவில்லை. ஐபிஎல் தரப்பிலிருந்து பெறவில்லை என்றாலும் போக்குவரத்து கழக தரப்பிலிருந்து பணம் பெறப்பட்ட ரசீதையாவது இணைத்திருக்கலாம். அரசாலேயே பெற முடியாத அளவுக்கு அது ரகசியமான ரசீதா என்ன?

ஏதோ அரசியல்வாதிகளின் குறிப்பு போல அதன்போக்கில் வெறும் வார்த்தைகளால் பதிலளித்தால் போதும் என்ற எண்ணத்தைதான் வெளிப்படுத்துகிறது அச்செய்தி. ஆதாரங்களற்ற இந்த ‘உண்மை சரிபார்ப்பு’ செய்தியை அவர்கள் வெளியிடுவதன் நோக்கம் உண்மையை வெளியிடுவதா அல்லது அரசுக்கு துணைபோவதா என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது.

பரவி வரும் பொய்ச்செய்திகளுக்கு மத்தியில், எந்த ஒரு பொய்யையும் ஆதாரத்தோடு பொய் என்று நிரூபிக்கும் பொறுப்பு இந்தக் குழுவுடையது. அதற்காகவே பிரத்யேகமாக தமிழ்நாடு அரசால் இந்தக் குழு கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டு நவம்பர் மாதம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெகாசஸ் விவகாரம் ..பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் !

Admin

எங்கள் திட்டத்தில் தமிழக கிராமங்கள் கிடையாது: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

Admin

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

’ஜெய்பீம்’ படத்தில் வரும் ராஜாக்கண்ணு கொலை வழக்கு – உண்மையில் நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு… ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது

Admin

காமத்தை விட அழகானது கண்ணியம் – ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் தொகுப்பு.

தடை விதித்த பிறகும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள்… எவ்வளவு தெரியுமா?

Pamban Mu Prasanth

மழையால் ரத்தான டிஎன்பிஎல் முதல் ஆட்டம்: ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

Admin

ஒரு காலத்தில் இந்து மகா சபா என்றால்..தேவாரமும் திருவாசகமும் தான்ஆனால் இப்போது?? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!

Admin

இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

Admin

கீழடி அகழாய்வை நீட்டிக்க வேண்டும் : பா.ம.க ராமதாஸ் கோரிக்கை

Admin

Leave a Comment