CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

SHARE

அறிவுள்ள மக்களிடம் யாரும் மோசமான பொய்களைப் பரப்பி ஆட்சி செய்ய முடியாது. ஆனால், உண்மையை சரிபார்ப்பதற்காக அரசுத் தரப்பில் உருவாக்கப்பட்ட அமைப்பும் கூட கடமைக்கு பதில் சொல்லும் நிலைமைதான் தமிழ்நாட்டில் மேலும் வருத்தமளிக்கிறது.

“சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியைக் காணச் சென்றவர்களுக்கு இலவச பேருந்து வசதியை திமுக அரசு செய்துள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சமயத்தில் ஒரு தனியார் அமைப்பின் நிகழ்ச்சிக்கு அரசு இலவச பேருந்து ஏற்பாடு செய்வது விதிமீறலாகும்.”

எனவே திராவிட முன்னேற்ற கழக அரசின் மீது விதிமீறல் புகாரளிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அந்த தகவல் பொய்யானது என்று விளக்கும் விதமாக “ஐபிஎல் போட்டிகளுக்கு இலவச பேருந்து டிக்கெட் – அரசு செலவல்ல” என்று அரசின் உண்மை சரிபார்ர்பு குழு தரப்பில் ஒரு உண்மை சரிபார்ப்பு வெளியிடப்பட்டது.

அதில், “சிஎஸ்கே அணியே அதற்கான பணத்தை நிர்வாகத்திடம் செலுத்தி விட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எந்த ஆதார ரசீதுகளும் இணைக்கப்படவில்லை. ஐபிஎல் தரப்பிலிருந்து பெறவில்லை என்றாலும் போக்குவரத்து கழக தரப்பிலிருந்து பணம் பெறப்பட்ட ரசீதையாவது இணைத்திருக்கலாம். அரசாலேயே பெற முடியாத அளவுக்கு அது ரகசியமான ரசீதா என்ன?

ஏதோ அரசியல்வாதிகளின் குறிப்பு போல அதன்போக்கில் வெறும் வார்த்தைகளால் பதிலளித்தால் போதும் என்ற எண்ணத்தைதான் வெளிப்படுத்துகிறது அச்செய்தி. ஆதாரங்களற்ற இந்த ‘உண்மை சரிபார்ப்பு’ செய்தியை அவர்கள் வெளியிடுவதன் நோக்கம் உண்மையை வெளியிடுவதா அல்லது அரசுக்கு துணைபோவதா என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது.

பரவி வரும் பொய்ச்செய்திகளுக்கு மத்தியில், எந்த ஒரு பொய்யையும் ஆதாரத்தோடு பொய் என்று நிரூபிக்கும் பொறுப்பு இந்தக் குழுவுடையது. அதற்காகவே பிரத்யேகமாக தமிழ்நாடு அரசால் இந்தக் குழு கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டு நவம்பர் மாதம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மதுரை எய்ம்ஸ் பணிகளை தொடங்குக – பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம்..!

Admin

மேற்குவங்க இடைத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் – மம்தா வலியுறுத்தல்

Admin

இன்று ஒரே நாளில் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

போட்ட வேஷம் மாறியதோ..? இதுதான் விடியலா? ஸ்டாலினை விமர்சித்த வானதி

Admin

கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் :பாதிப்பு எண்ணிக்கை15ஆக உயர்வு!

Admin

ராபியாவைக் கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் : கொதித்தெழுந்த ஜோதிமணி

Admin

சென்னையில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் செயல்பட புதிய நிபந்தனை

Admin

முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனி இணையதளம் தொடக்கம்!

Admin

இந்தியா – இலங்கை மோதும் ஒருநாள்,டி20 தொடர்: தேதி அறிவிப்பு

Admin

என்னது ஜூலை மாதத்திலே கொரோனா மூன்றாம் அலை ஆரம்பிச்சுட்டா ? ஹைதராபாத் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்

Admin

சீக்கிரமே பசுவை தேசிய விலங்காக அறிவிக்கணும்: அலாகாபாத் உயர்நீதிமன்றம்

Admin

சிகரெட் கொடுக்க தாமதம்…கடையை அடித்து நொறுக்கிய திமுகவினரை வெளுத்த பொதுமக்கள்…

Admin

Leave a Comment