மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

SHARE

ஐபிஎல் லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் சன்ரைசர்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இண்டியன்ஸ். 

சேப்பாக்கம், சென்னை

டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  மும்பை ஆரம்பத்தில் இருந்தே நன்றாக அடித்து ஆடியது. அதனால் பவர் பிளே ஓவர்களிலேயே அந்த அணியால் 53 ரன்களை எடுக்க முடிந்தது. சன்ரைசர்ஸ் அணியும் சற்று போராடி விக்கெட்டுகளை எடுத்தது. சன்ரைசர்ஸ் அணியின் விஜய் சங்கர் ரோஷித் ஷர்மா மற்றும் சூர்யகுமார் யாதவின் முக்கியத்துவம் வாய்ந்த விக்கெட்டுகளை எடுத்தார்.  ஓரளவுக்கு நல்ல ஃபீல்டிங் செய்து மும்பை அணியின் ரன்ரேட்டை குறைத்தது சன்ரைசர்ஸ் அணி. இறுதியில் பொலார்ட்  35 ரன்கள் எடுக்க மும்பை இண்டியன்ஸ் அணியின் ஸ்கோர் 150 ஆனது. 

அடுத்து ஆட வந்த சன்ரைசர்ஸ் அணி ஆரம்பத்தில் நன்றாக ஆடியது. அதுவும் பேர்ஸ்டோ-வின் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் ஆட்டம் கண்டுவிட்டது.  போல்ட்டின் ஓவரில் 18 ரன்களும், மில்னேவின் ஓவரில் 19 ரன்களும், க்ருணாலின் ஓவரில்  13 ரன்களும் எடுத்து சன்ரைசர்ஸ் அணியின் ரன்ரேட்டை உயர்த்தினார் பேர்ஸ்டோ.  அவர் திடீரென அடுத்த ஓவரிலேயே அவுட்டும் ஆனார். சற்று தாக்குபிடித்து ஆடிய வார்னரும் சொற்ப ரன்களில் அவுட்டாகினார். சன்ரைசர்ஸ் அணியினர் விருப்பமே இல்லாமல் ஆடுவது போல் இருந்தது. அடுத்தடுத்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்கள் மற்றும் டக் அவுட்டில் சென்றனர். இறுதியில் 137 ரன்களுக்கே சன்ரைசர்ஸ் அணிகள் ஆல் அவுட்டாகினர். சன்ரைசர்ஸ் அணி போராடாமல் தழுவிய தோல்வி என்றே இது கிரிக்கெட் ரசிகர்களால் பார்க்கப்படுகின்றது. இது இந்த ஐ.பி.எல். தொடரில் சன்ரைசார்ஸ் அணியின் ஹாட்ரிக் தோல்வி என்பது குறிப்பிடத் தக்கது.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

பூசாரி உரிமையாளராக முடியாது .. கோவில் சொத்து விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு

Admin

பெண்கள் தின வாழ்த்தெல்லாம் நாடகமா? இதுதான் திராவிட மாடலா?

Admin

கொரோனா தொற்றால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்.. நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

டவ்-தே புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா 3ஆம் அலை தீவிரமடையும் : எச்சரிக்கும் நிபுணர்கள்

Admin

இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர் திடீர் ஒத்திவைப்பு

Admin

பயந்தவங்க காங்கிரஸிலிருந்து வெளியேறலாம் – ராகுல் காந்தி

Admin

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்!

Admin

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு… ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது

Admin

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் எத்தனை பேர்.? விவரம் கேட்கும் மத்திய அரசு

Admin

Leave a Comment