நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

SHARE

பட்டாணி குடும்பத்தைச் சேர்ந்த நிலத்தடியில் காய்க்கும் தாவரமான நிலக்கடலையை ஆதி இந்தியர்கள் உண்டது இல்லை. தென்னமெரிக்க நாடான பெரு-வில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே உணவாகப் பயன்படுத்தப்பட்ட இந்த நிலக் கடலையானது தமிழகத்திற்குள் பிலிப்பைன்ஸ் நாட்டினரின் தாக்கத்தால் நுழைந்தது!.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவில் விளைந்து தமிழகத்திற்குள் வந்த நிலக் கடலைகளை மக்கள் மணிலா அல்லது மணிலா கொட்டை என்ற பெயர்களில் அழைத்தனர். மணிலா கொட்டை என்ற சொற்கள்தான் திரிந்து இப்போது மல்லாட்டை என வழங்குகின்றது.

மணிலா என்ற சொல் பிலிப்பைன்ஸ் தலைநகரமான மணிலாவுடன் தொடர்புடையதுதான் என்று காட்டக் கூடிய இன்னொரு சான்று ‘மணிலா கயிறு’ ஆகும். ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் தூக்கு தண்டனைக்கான கயிறுகள் பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது இந்தக் கயிறுகள் பிஹாரின் பக்ஸர் சிறையில் தயாரிக்கப்பட்டாலும் தூக்குக் கயிறை ‘மணிலா கயிறு’ என்று அழைக்கும் வழக்கம் மட்டும் இந்தியாவில் இன்னும் மாறவில்லை.

இன்னொரு பக்கம் உலகில் வேர்கடலை உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவின் பல இடங்களில் வேர்க்கடலையும் மணிலாவின் பெயரால்தான் நினைவு கூரப்படுகின்றது!. வரலாற்றின் தடங்கள் எவ்வளவு வலிமையானவை என்பதற்கு இதை ஒரு உதாரணமாக நாம் கொள்ளலாம்!.

இரா.மன்னர் மன்னன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சி.வை. தாமோதரம் பிள்ளை: தமிழுக்கு கிடைத்த கொடை – இலக்கிய வீதி நிகச்சியில் பெருமிதம்

Admin

கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 7: தொழிற் கை முத்திரையின் வகைகள் (17 – 20)

காளைகளைக் காப்பாற்றினோம்… யானைகளை?: அழிவின் விளிம்பில் தமிழர் செல்வம்!.

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 6: தொழிற் கை முத்திரையின் வகைகள் (13 – 16)

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 8: தொழிற் கை முத்திரையின் வகைகள் (20 – 24)

சாக்லேட் குறித்த ரகசியங்கள்..! – உலக சாக்லேட் தின சிறப்புக் கட்டுரை.

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட சிவப்பு நிற பானைகள்

Admin

தமிழ்நாடு நாள் சர்ச்சை – என்ன வரலாறு? எது தீர்வு?:

இரா.மன்னர் மன்னன்

கி.ரா. எனும் கதை கேட்பவர்!.

சிற்ப இலக்கணம் தொடர் – நாளை முதல் வெளியாகின்றது.

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

Leave a Comment