Author: Admin

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், , ஷாம்பு பாக்கெட்டுகள் உட்பட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தவும், எடுத்துச் செல்லவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி, பக்தர்கள் இன்று முதல் நெகிழிப் பொருட்கள் எடுத்து செல்லக் கூடாது. இந்த உத்தரவை திருப்பதி தேவஸ்தானம் பிறப்பித்துள்ளது. முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை என்ன செய்வது? திருப்பதி தேவஸ்தானம் பதில்..!!இதனை தீவிரமாக செயல்படுத்தும் வகையில் திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்கள், தனிநபர்கள் அலிபிரி சோதனைச் சாவடியில் முழுமையாக தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல திருமலையில் உள்ள கடைகளில் இனி பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மட்கும் அல்லது காகித அட்டைகள் பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் ஈரமான மற்றும் உலர் கழிவுகளை தனித்தனி குப்பைத் தொட்டிகளில் போடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அல்லாத கவர்கள் வழங்குவதற்காக பக்தர்களிடம் வியாபாரிகள் கூடுதல் கட்டணம்…

Read More

யாழ்ப்பாணம் பொது மக்கள் நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் நேன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது மக்கள் நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொது மக்கள் நூலகத்தை உருவாக்க காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா அவர்களுக்கும், யாழ்ப்பாண பொது நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தலின்போது யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன், யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன், யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், யாழ்ப்பாணப் பொது மக்கள் நூலக பிரதம நூலகர், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இது தவிர வாசகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். யாழ்ப்பாண பொது நூலகம்1981ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி வன்முறைக் குழு ஒன்றினால் தீயிட்டு எரிக்கப்பட்டது. நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு…

Read More

குஜராத் மாநிலத்தில் 2 நாட்கள் நடைபெறும் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். குஜராத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நாடு முழுவதும் நடைபெற உள்ளகல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழ்நாடு புறக்கணித்துள்ளது. இந்த மாநாட்டில், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்பட அதிகாரிகள், ம் கல்வித்துறை செயலாளர்கள் உள்ளிட்ட யாரும் பங்கேற்கவில்லை. இந்த மாநாட்டில் தேசிய கல்வி கொள்கை குறித்தும், தேசிய அளவில் பாடத்திட்ட மாற்றம் குறித்தும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு எதிர்த்து வரும் நிலையில் குஜராத்தில் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு புறக்கணித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ,…

Read More

சென்னையில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் செயல்பட புதிய நிபந்தனைகளை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. விதிகளை மீறி செயல்படும் நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும், ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இதை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள்,. ஸ்பா போன்றவைகள் செயல்பட லைசென்ஸ் பெறுவதற்கு புதிய நிபந்தனைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கிறது. அதன்படி, கதவுகளை பூட்டிய நிலையில் மசாஜ் சென்டர்கள் செயல்படக் கூடாது. அவை செயல்படும் நேரத்திலும் வெளிப்புற கதவு திறந்தே இருக்க வேண்டும். உட்புறம் மற்றும் நுழைவு பகுதிகளில் CCTV கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இயங்கக் கூடாது. வாடிக்கையாளர்களுக்கு என தனி வருகை பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும்.…

Read More

கொரோனா பரவல் துவங்கி 3 வருடங்கள் ஆகிய நிலையில் இப்போதும் விட்டு ஒழியாமல் கொரோனா பரவல் மக்களிடையே இருந்து வருகிறது. தினசரி லட்சக்கணக்கானோருக்கு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தற்போது சற்று குறைந்து ஆயிரக்கணக்கானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குணமடைந்தோர் எண்ணிக்கை தினசரி கூடிவரும் நிலையிலும், புதிய பாதிப்புகள் இருக்கத்தான் செய்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மட்டும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி 22 ஆக இருந்த தமிழக தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 100 ஐ தாண்டி இருப்பது சற்று கவனிக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதே போல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 32 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும்…

Read More

மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில், சில்லறை விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தியும், இன்று ஒருநாள் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படுவதாக டெல்லி பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து இதுவரை கமிஷன் தொகை உயர்த்தப்படவில்லை எனவும், அதை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய போராட்டத்தில் தமிழகம் கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்பட 24 மாநிலங்களில் உள்ள பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகத்தில் இன்று பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று வெளியான தகவலை அம்மாநில பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது. எண்ணெய் கிடங்குகளில் இருந்து எரிபொருள் கொள்முதல் ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாகவும், ஆனால் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல்…

Read More

தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கத் தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருச்சி, திண்டுக்கல்‌, தஞ்சாவூர்‌ உள்ளிட்ட மாவட்டங்களில்‌ நடைபெற்ற கழக செயல்வீரர்கள்‌ கூட்டங்களில்‌ எனக்கு அமைச்சர்‌ பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும்‌ என தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்பட்டு தலைமைக்‌ கழகத்திற்கு அனுப்பி வைத்திருப்பது குறித்து அறிந்தேன்‌. என்‌ தொடர்‌ பணிகள்‌ மீதும்‌, முன்னெடுப்புகள்‌ மீதும்‌ நீங்கள்‌ வைத்திருக்கும்‌ நம்பிக்கைக்கும்‌, அன்பிற்கும்‌ நான்‌ என்றென்றும்‌ நன்றிக்குரியவனாக இருப்பேன்‌. கழகம்‌ வழங்கிய வாய்ப்பில்‌, சேப்பாக்கம்‌- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகத்‌ தொகுதி மக்களின்‌ தேவைகளைக்‌ கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள்‌ பணியையும்‌, கழகத்‌ தலைவர்மற்றும்‌ கழக முன்னோடிகளின்‌ வழிகாட்டுதலில்‌ கழக இளைஞர்‌ அணியின்‌ செயலாளராக தமிழகம்‌ முழுவதும்‌ பயணித்து, கழகப்‌ பணியையும்‌ என்னால்‌ இயன்றவரைச்‌ சிறப்பாக ஆற்றி வருகிறேன்‌. கழகத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன்‌ பாசறைக்…

Read More

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் வெளிநாடுகள் பலவற்றில் ‘மங்கி பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் நோய் பரவி வருகிறது. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கானப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் மற்றவர்களுக்கு குரங்கு அம்மை பரவ காரணமாக இருக்கிறார்களா? என்பது இதுவரை உறுதியாகவில்லை. மே மாதத்தில் இதுவரை 300-க்கும் அதிகமானோர் இந்த குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் குரங்கு அம்மை பரவுவதற்கான அறிகுறி சிறிய அளவிலான காய்ச்சல் மற்றும் உடலில் சிகப்பு புள்ளிகள் தோன்றுவது என்ற அளவிலேயே இருந்துள்ளது. குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்காவில் மட்டுமே அதிக அளவில் இருந்து வந்த நிலையில், தற்போது ஐரோப்பாவின் பல நாடுகளிலும் அதிக…

Read More

இவர்களுக்கு பொது விநியோகம் கிடையாது. இவர்களில் பலருக்கு ரேஷன் கார்டு கிடையாது. முதன்மையான விடயம் வீடு கிடையாது. ஆனால் குடும்பம் உண்டு. அதே போல ஆதார் கார்டு உண்டு. 

Read More

இந்த தூய்மை திட்டங்கள் எல்லாம் மற்றவர்கள் பார்வைக்கு நாம் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதா இல்லை என்றால் உண்மையாகவே பாரதத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதா? 

Read More