தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

SHARE

தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கத் தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருச்சி, திண்டுக்கல்‌, தஞ்சாவூர்‌ உள்ளிட்ட மாவட்டங்களில்‌ நடைபெற்ற கழக செயல்வீரர்கள்‌ கூட்டங்களில்‌ எனக்கு அமைச்சர்‌ பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும்‌ என தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்பட்டு தலைமைக்‌ கழகத்திற்கு அனுப்பி வைத்திருப்பது குறித்து அறிந்தேன்‌. என்‌ தொடர்‌ பணிகள்‌ மீதும்‌, முன்னெடுப்புகள்‌ மீதும்‌ நீங்கள்‌ வைத்திருக்கும்‌ நம்பிக்கைக்கும்‌, அன்பிற்கும்‌ நான்‌ என்றென்றும்‌ நன்றிக்குரியவனாக இருப்பேன்‌.

கழகம்‌ வழங்கிய வாய்ப்பில்‌, சேப்பாக்கம்‌- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகத்‌ தொகுதி மக்களின்‌ தேவைகளைக்‌ கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள்‌ பணியையும்‌, கழகத்‌ தலைவர்மற்றும்‌ கழக முன்னோடிகளின்‌ வழிகாட்டுதலில்‌ கழக இளைஞர்‌ அணியின்‌ செயலாளராக தமிழகம்‌ முழுவதும்‌ பயணித்து, கழகப்‌ பணியையும்‌ என்னால்‌ இயன்றவரைச்‌ சிறப்பாக ஆற்றி வருகிறேன்‌.

கழகத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன்‌ பாசறைக் கூட்டங்கள்‌ நடத்துவது, நலத்திட்டடணிகளில்‌ ஈடுபடுவதென பலவற்றுக்குமான பயணங்களுக்குத்‌ தயாராகி வருகிறேன்‌. இந்தச்‌ சூழலில்‌, என்மீதுள்ள அன்பின்‌ காரணமாக, “எனக்கு அமைச்சர்‌ பொறுப்பு அளிக்க தீர்மானம்‌ நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும்‌ தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள்‌ அனைவரையும்‌ அன்போடு கேட்டுக்கொள்கிறேன்‌.

எந்தச்‌ சூழலில்‌ எந்த முடிவை எடுக்க வேண்டும்‌ என்பதை கழகமும்‌ தலைமையும்‌ நன்கறியும்‌ என்பதை கழக உடன்பிறப்புகள்‌ நாம்‌ அனைவரும்‌ அறிவோம்‌. எனவே, பெரியார்‌, அண்ணா, கலைஞர்‌, பேராசிரியர்‌ அவர்களின்‌ வழியில்‌ வந்த நம்‌ கழகத்‌ தலைவர்‌ அவர்கள்‌ வழங்கும்‌ கட்டளையின்‌ வழியில்‌ நின்று கழகத்தை வளர்த்தெடுக்க நாளும்‌ தொடர்ந்து உழைத்திடுவோம்‌ என கூறியுள்ளார்.

talin


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பழனிசாமி தலைமையில் கூட்டம்… சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்

Admin

காமத்தை விட அழகானது கண்ணியம் – ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் தொகுப்பு.

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு அமைச்சர் – அன்பில் மகேஷ் புறக்கணிப்பு

Admin

உற்சாக வாக்கிங்… திறக்கப்பட்ட டீக்கடைகள்… இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…

Admin

வன்னியர், சீர்மரபினர் பிரிவினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு…அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Admin

ஒரு காலத்தில் இந்து மகா சபா என்றால்..தேவாரமும் திருவாசகமும் தான்ஆனால் இப்போது?? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!

Admin

கோடநாடு: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு: இன்று முடிவு?

Admin

திமுகவில் டாக்டர் மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு….!

Admin

இளைஞர்களின் எனர்ஜி டானிக்..வீரப்பனுக்கு சிம்மசொப்பனம் … யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்?

Admin

தனது கணக்கில் இருந்து டுவிட் போட்டது யார்?: ஹெச்.ராஜா சொல்லவில்லை, மாஃபா பாண்டியராஜனாவது சொல்வாரா?

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

1 comment

தமிழ்நாடு பட்ஜெட் 2024 -25 என்னதான் சொல்கிறது? 116 குறிப்புகளில் முழு பட்ஜெட் – Mei Ezhuththu February 19, 2024 at 9:17 pm

[…] பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உ…விஜய் இந்த ஜாதி தான்… கோபத்தில் […]

Reply

Leave a Comment