தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

SHARE

தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கத் தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருச்சி, திண்டுக்கல்‌, தஞ்சாவூர்‌ உள்ளிட்ட மாவட்டங்களில்‌ நடைபெற்ற கழக செயல்வீரர்கள்‌ கூட்டங்களில்‌ எனக்கு அமைச்சர்‌ பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும்‌ என தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்பட்டு தலைமைக்‌ கழகத்திற்கு அனுப்பி வைத்திருப்பது குறித்து அறிந்தேன்‌. என்‌ தொடர்‌ பணிகள்‌ மீதும்‌, முன்னெடுப்புகள்‌ மீதும்‌ நீங்கள்‌ வைத்திருக்கும்‌ நம்பிக்கைக்கும்‌, அன்பிற்கும்‌ நான்‌ என்றென்றும்‌ நன்றிக்குரியவனாக இருப்பேன்‌.

கழகம்‌ வழங்கிய வாய்ப்பில்‌, சேப்பாக்கம்‌- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகத்‌ தொகுதி மக்களின்‌ தேவைகளைக்‌ கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள்‌ பணியையும்‌, கழகத்‌ தலைவர்மற்றும்‌ கழக முன்னோடிகளின்‌ வழிகாட்டுதலில்‌ கழக இளைஞர்‌ அணியின்‌ செயலாளராக தமிழகம்‌ முழுவதும்‌ பயணித்து, கழகப்‌ பணியையும்‌ என்னால்‌ இயன்றவரைச்‌ சிறப்பாக ஆற்றி வருகிறேன்‌.

கழகத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன்‌ பாசறைக் கூட்டங்கள்‌ நடத்துவது, நலத்திட்டடணிகளில்‌ ஈடுபடுவதென பலவற்றுக்குமான பயணங்களுக்குத்‌ தயாராகி வருகிறேன்‌. இந்தச்‌ சூழலில்‌, என்மீதுள்ள அன்பின்‌ காரணமாக, “எனக்கு அமைச்சர்‌ பொறுப்பு அளிக்க தீர்மானம்‌ நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும்‌ தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள்‌ அனைவரையும்‌ அன்போடு கேட்டுக்கொள்கிறேன்‌.

எந்தச்‌ சூழலில்‌ எந்த முடிவை எடுக்க வேண்டும்‌ என்பதை கழகமும்‌ தலைமையும்‌ நன்கறியும்‌ என்பதை கழக உடன்பிறப்புகள்‌ நாம்‌ அனைவரும்‌ அறிவோம்‌. எனவே, பெரியார்‌, அண்ணா, கலைஞர்‌, பேராசிரியர்‌ அவர்களின்‌ வழியில்‌ வந்த நம்‌ கழகத்‌ தலைவர்‌ அவர்கள்‌ வழங்கும்‌ கட்டளையின்‌ வழியில்‌ நின்று கழகத்தை வளர்த்தெடுக்க நாளும்‌ தொடர்ந்து உழைத்திடுவோம்‌ என கூறியுள்ளார்.

talin


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு!

Admin

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

நடிகைக்கு பாலியல் தொல்லை.. முன்னாள் அமைச்சரின் பாதுகாவலர், டிரைவருக்கு சம்மன்

Admin

கீழடியில் கிடைத்த சிற்பம் – ஆணா? பெண்ணா?

Admin

சாதியை ஒழிக்க உதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ 10 லட்சம் : முதல்வர் அதிரடி அறிவிப்பு

Admin

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி பாலியல் தொல்லை விவகாரம்… தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போடப்படுமா?.

11 மாவட்டங்களில்மாணவர் சேர்க்கை நடைபெறாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

Admin

“தமிழ் மொழி இனிமையான மொழி”.. சட்டப் பேரவையில் ஆளுநர் புகழாரம்

Admin

வயிறு எரிவதால் அகழாய்வினை எதிர்த்து எழுதுகிறார்கள் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Admin

நிதிக்காக இணையவில்லை, உதயநிதிக்காக திமுகவில் இணைந்துள்ளேன்… தோப்பு வெங்கடாச்சலம்!

Admin

“தெய்வம் நின்று கொல்லும்” – கே.டி.ராகவன் விவகாரத்தில் கடுப்பான காயத்ரி ரகுராம்

Admin

போஸ்ட் போட்டது நீங்கதானே! எச்.ராஜவை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்

Admin

1 comment

தமிழ்நாடு பட்ஜெட் 2024 -25 என்னதான் சொல்கிறது? 116 குறிப்புகளில் முழு பட்ஜெட் – Mei Ezhuththu February 19, 2024 at 9:17 pm

[…] பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உ…விஜய் இந்த ஜாதி தான்… கோபத்தில் […]

Reply

Leave a Comment