தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

SHARE

தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கத் தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருச்சி, திண்டுக்கல்‌, தஞ்சாவூர்‌ உள்ளிட்ட மாவட்டங்களில்‌ நடைபெற்ற கழக செயல்வீரர்கள்‌ கூட்டங்களில்‌ எனக்கு அமைச்சர்‌ பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும்‌ என தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்பட்டு தலைமைக்‌ கழகத்திற்கு அனுப்பி வைத்திருப்பது குறித்து அறிந்தேன்‌. என்‌ தொடர்‌ பணிகள்‌ மீதும்‌, முன்னெடுப்புகள்‌ மீதும்‌ நீங்கள்‌ வைத்திருக்கும்‌ நம்பிக்கைக்கும்‌, அன்பிற்கும்‌ நான்‌ என்றென்றும்‌ நன்றிக்குரியவனாக இருப்பேன்‌.

கழகம்‌ வழங்கிய வாய்ப்பில்‌, சேப்பாக்கம்‌- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகத்‌ தொகுதி மக்களின்‌ தேவைகளைக்‌ கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள்‌ பணியையும்‌, கழகத்‌ தலைவர்மற்றும்‌ கழக முன்னோடிகளின்‌ வழிகாட்டுதலில்‌ கழக இளைஞர்‌ அணியின்‌ செயலாளராக தமிழகம்‌ முழுவதும்‌ பயணித்து, கழகப்‌ பணியையும்‌ என்னால்‌ இயன்றவரைச்‌ சிறப்பாக ஆற்றி வருகிறேன்‌.

கழகத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன்‌ பாசறைக் கூட்டங்கள்‌ நடத்துவது, நலத்திட்டடணிகளில்‌ ஈடுபடுவதென பலவற்றுக்குமான பயணங்களுக்குத்‌ தயாராகி வருகிறேன்‌. இந்தச்‌ சூழலில்‌, என்மீதுள்ள அன்பின்‌ காரணமாக, “எனக்கு அமைச்சர்‌ பொறுப்பு அளிக்க தீர்மானம்‌ நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும்‌ தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள்‌ அனைவரையும்‌ அன்போடு கேட்டுக்கொள்கிறேன்‌.

எந்தச்‌ சூழலில்‌ எந்த முடிவை எடுக்க வேண்டும்‌ என்பதை கழகமும்‌ தலைமையும்‌ நன்கறியும்‌ என்பதை கழக உடன்பிறப்புகள்‌ நாம்‌ அனைவரும்‌ அறிவோம்‌. எனவே, பெரியார்‌, அண்ணா, கலைஞர்‌, பேராசிரியர்‌ அவர்களின்‌ வழியில்‌ வந்த நம்‌ கழகத்‌ தலைவர்‌ அவர்கள்‌ வழங்கும்‌ கட்டளையின்‌ வழியில்‌ நின்று கழகத்தை வளர்த்தெடுக்க நாளும்‌ தொடர்ந்து உழைத்திடுவோம்‌ என கூறியுள்ளார்.

talin


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பாஜகவுக்கு இதே வேலை தான்..கே.டி.ராகவன் விவகாரத்தில் போலீசுக்கு போன ஜோதிமணி எம்.பி.

Admin

திமுகவின் 550 வாக்குறுதிகளில் ஒன்றுகூட ஆளுநர் உரையில் இல்லை…எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Admin

வெம்பக் கோட்டை அகழாய்வு – வெளிவரத் தொடங்கிய தமிழர் பொக்கிஷங்கள்!.

10 நிமிடம் தான் டைம்.. வங்கி மெசேஜ் குறித்து காவல்துறை எச்சரிக்கை

Admin

ஐ.பி. எல் விளையாட்டு போல நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் நடனம் ஆடினார்கள்- அண்ணாமலை விமர்சனம்

Admin

7 பேர் விடுதலையை காங்கிரஸ் ஆதரிக்காது – கே.எஸ்.அழகிரி

அப்புறம் ரெடியா ? மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

Admin

முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனி இணையதளம் தொடக்கம்!

Admin

போலீசாரை மிரட்டிய பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Admin

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

‘யாரும் செய்யாததையா செய்தார்’ – கே.டி.ராகவனுக்கு சீமான் ஆதரவால் சர்ச்சை

Admin

‘‘ஸ்டேன் சாமி மரணம்சட்டத்தின் துணையோடு நடந்த படுகொலை”

Admin

Leave a Comment