சென்னையில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் செயல்பட புதிய நிபந்தனை

SHARE

சென்னையில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் செயல்பட புதிய நிபந்தனைகளை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. விதிகளை மீறி செயல்படும் நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும், ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இதை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள்,. ஸ்பா போன்றவைகள் செயல்பட லைசென்ஸ் பெறுவதற்கு புதிய நிபந்தனைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கிறது. அதன்படி,

கதவுகளை பூட்டிய நிலையில் மசாஜ் சென்டர்கள் செயல்படக் கூடாது.

அவை செயல்படும் நேரத்திலும் வெளிப்புற கதவு திறந்தே இருக்க வேண்டும்.

உட்புறம் மற்றும் நுழைவு பகுதிகளில் CCTV கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இயங்கக் கூடாது.

வாடிக்கையாளர்களுக்கு என தனி வருகை பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும்.

எந்த வகையிலும் பாலியல் தொழில் தொடர்பான சேவைகள் வழங்குவதற்கு தடை.

நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு சேவை வழங்கக் கூடாது.

பக்க விளைவுகள் ஏற்படுத்த கூடிய அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது.

காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் புகார்கள் அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு மேற்கொள்வார்கள். பாலியல் சேவைகள் வழங்கப்படுவது கண்டறியப்பட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..

ஒருவருக்கு சேவை வழங்கிய பின்னர் பணியாளர் தனது கையினை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். அதன் பின்னர் தான் அடுத்தவருக்கு சேவை வழங்கவேண்டும்.

ஒருவருக்கு சேவை வழங்கிய பின் அடுத்தவருக்கு சேவை வழங்குவதற்கு முன் கருவிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.

உரிமம் விண்ணப்பிக்கும் நபர் உரிய படிப்பு படித்திருக்க வேண்டும்.

விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும்”

இவ்வாறு பல்வேறு நிபந்தனைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஓ.பி.எஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்.!!

Admin

திருநங்கைகளுக்கு நிவாரணம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

Admin

சார் அது டைப்பிங் மிஸ்டேக் .. கொங்குநாடு விவகாரம் விளக்கம் கொடுத்த அண்ணாமலை!

Admin

எம்ஜிஆரை தவறாக சித்தரிப்பதா..? கோபமானமுன்னாள் அமைச்சர்

Admin

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது – ஆவேசமான ஜெயக்குமார்.

Admin

இ-பாஸ் ரத்து..பஸ்கள் இயக்கம்… புதிய தளர்வுகளால் மக்கள் மகிழ்ச்சி…

Admin

‘‘1000 ரூபாய்” யார் யாருக்கு தெரியுமா? விளக்கம் கொடுத்த நிதியமைச்சர்

Admin

போலி மதுவை தடுக்கவே டாஸ்மாக் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Admin

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவச உணவு – அமைச்சர் அறிவிப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை டுவிட்டரில் புகழ்ந்த பவன் கல்யாண்.!!

Admin

பாலியல் வன்கொடுமை குற்றவாளியை சுட்டுப்பிடித்த சென்னை போலிஸ் – நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

செல்லூர் ராஜூ கேள்விக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Admin

Leave a Comment