பிறந்த குழந்தை “நான் வெளியே வந்துட்டேன்” எனக் கூறியது உண்மையா? – மருத்துவர்கள் விளக்கம்

SHARE

பிறந்த குழந்தை ஒன்று அழாமல் “நான் வெளியே வந்துட்டேன்” எனக் கூறியதாக பரவிய செய்தி இணையத்தில் வெளியானது. பெரிய செய்தி நிறுவனங்களும் இது குறித்து செய்தி வெளியிட, இணையம் முழுவதும் இந்த செய்தி தீயாகப் பரவியது.

பலரும் அதிசயக் குழந்தைக் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடக்க முடியுமா? பிறந்த குழந்தை எப்படிப் பேசும்? – என்ற சந்தேகம் நம் அனைவருக்குமே இருந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியிலுள்ள களியாம்பூண்டி என்ற கிராமத்தில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சந்திரன் – ரேவதி என்ற இணையருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைதான் பேசியதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் குழந்தையின் தாயும் அந்த மருத்துவமனையில் இருந்த ஊழியர்களும் குழந்தை பேசியதாக ஊடகங்களுக்கு கூறியது ஏன் எனத் தெரியவில்லை.

குழந்தையின் தாயுடன் இருந்த உதவியாளர் ஊர்மக்களிடம் குழந்தை பேசியதாக கூறியதும் அங்கு குழந்தையைக் காண பலர் கூடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஊடகங்களும் அந்த பகுதிக்கு விரைய இது பெரிய விஷயமாக வளர்ந்துள்ளது

இது குறித்து மருத்துவர்கள் கூறும் போது, ”குழந்தை பிறந்த போது இருந்த சத்தம் ஏதாவது அப்படித் தவறாக கேட்டிருக்கலாம் என்றும் தாயின் அதீத அன்பினால் அப்படி கேட்டிருக்கலாம்” என்றனர்.

மருத்துவர்கள் பல விளக்கங்கள் கூறினாலும் தங்கள் குழந்தை பிறந்தவுடன் பேசியாதாகவே கருதுகின்றனர் அதன் பெற்றோர்களும் உறவினர்களும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தோண்டத்தோண்ட சோழதேசம்… கங்கைகொண்ட சோழபுர அரண்மனை 2ஆம் பாகம் கண்டுபிடிப்பு!

Admin

திடீரென்று முடங்கிய தமிழக அரசின் இ-பதிவு இணையதளம்!

Admin

தமிழகத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம்!

Admin

‘‘அணில் ஓடுறதால பவர் கட்டா என்ன விஞ்ஞானம்’’ – ராமதாஸ் கிண்டல்!

Admin

போலீசார் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கக்கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

தமிழகத்தில் இவ்வளவு பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பா? அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை

Admin

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நீடிக்க வேண்டும்- அற்புதம்மாள் கோரிக்கை

Admin

உற்சாக வாக்கிங்… திறக்கப்பட்ட டீக்கடைகள்… இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…

Admin

ஏசி வசதியோடு இயங்கும் அரசு பள்ளி… தலைமை ஆசிரியையின் முயற்சிக்கு குவியும் பாராட்டு

Admin

பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியலை தாங்க ஸ்டாலின்… வானதி சீனிவாசன் போராட்டம்

Admin

“கள்ளக்காதலன் மீதான கோபத்தில் தான் குழந்தையை அடித்தேன்’ – கொடூர தாய் பகீர் வாக்குமூலம்

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு: தமிழக அரசு அறிவிப்பு

Admin

Leave a Comment