பிறந்த குழந்தை “நான் வெளியே வந்துட்டேன்” எனக் கூறியது உண்மையா? – மருத்துவர்கள் விளக்கம்

SHARE

பிறந்த குழந்தை ஒன்று அழாமல் “நான் வெளியே வந்துட்டேன்” எனக் கூறியதாக பரவிய செய்தி இணையத்தில் வெளியானது. பெரிய செய்தி நிறுவனங்களும் இது குறித்து செய்தி வெளியிட, இணையம் முழுவதும் இந்த செய்தி தீயாகப் பரவியது.

பலரும் அதிசயக் குழந்தைக் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடக்க முடியுமா? பிறந்த குழந்தை எப்படிப் பேசும்? – என்ற சந்தேகம் நம் அனைவருக்குமே இருந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியிலுள்ள களியாம்பூண்டி என்ற கிராமத்தில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சந்திரன் – ரேவதி என்ற இணையருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைதான் பேசியதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் குழந்தையின் தாயும் அந்த மருத்துவமனையில் இருந்த ஊழியர்களும் குழந்தை பேசியதாக ஊடகங்களுக்கு கூறியது ஏன் எனத் தெரியவில்லை.

குழந்தையின் தாயுடன் இருந்த உதவியாளர் ஊர்மக்களிடம் குழந்தை பேசியதாக கூறியதும் அங்கு குழந்தையைக் காண பலர் கூடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஊடகங்களும் அந்த பகுதிக்கு விரைய இது பெரிய விஷயமாக வளர்ந்துள்ளது

இது குறித்து மருத்துவர்கள் கூறும் போது, ”குழந்தை பிறந்த போது இருந்த சத்தம் ஏதாவது அப்படித் தவறாக கேட்டிருக்கலாம் என்றும் தாயின் அதீத அன்பினால் அப்படி கேட்டிருக்கலாம்” என்றனர்.

மருத்துவர்கள் பல விளக்கங்கள் கூறினாலும் தங்கள் குழந்தை பிறந்தவுடன் பேசியாதாகவே கருதுகின்றனர் அதன் பெற்றோர்களும் உறவினர்களும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து… மதிப்பெண் இப்படித்தான் வழங்கப்படும்… முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

Admin

‘‘அவர்களுக்கு ஒன்றிய அரசு என்றால் எங்களுக்கு பாரத பேரரசு ’’- குஷ்பு

Admin

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

‘‘1000 ரூபாய்” யார் யாருக்கு தெரியுமா? விளக்கம் கொடுத்த நிதியமைச்சர்

Admin

மீண்டும் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

இன்று அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம்..!!

Admin

கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

Admin

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

Admin

இனி அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Admin

வெளிநாட்டு பெண் அளித்த பாலியல் புகாரில் கராத்தே மாஸ்டர் மீது அதிரடி நடவடிக்கை

Admin

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

Leave a Comment