இவை அனைத்தும் திருப்பதிக்கு எடுத்து செல்லத் தடை

SHARE

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், , ஷாம்பு பாக்கெட்டுகள் உட்பட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தவும், எடுத்துச் செல்லவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி, பக்தர்கள் இன்று முதல் நெகிழிப் பொருட்கள் எடுத்து செல்லக் கூடாது. இந்த உத்தரவை திருப்பதி தேவஸ்தானம் பிறப்பித்துள்ளது.

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை என்ன செய்வது? திருப்பதி தேவஸ்தானம் பதில்..!!
இதனை தீவிரமாக செயல்படுத்தும் வகையில் திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்கள், தனிநபர்கள் அலிபிரி சோதனைச் சாவடியில் முழுமையாக தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல திருமலையில் உள்ள கடைகளில் இனி பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மட்கும் அல்லது காகித அட்டைகள் பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் ஈரமான மற்றும் உலர் கழிவுகளை தனித்தனி குப்பைத் தொட்டிகளில் போடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அல்லாத கவர்கள் வழங்குவதற்காக பக்தர்களிடம் வியாபாரிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இருக்க, கடைகளின் முன் கட்டண அறிவிப்பு பலகைகளை நிறுவப்பட்டு வருகின்றன. மேலும் திருப்பதியில் கடை வைத்திருப்பவர்கள் விற்க உரிமம் பெற்ற பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை குறிப்பிட்ட இடைவெளியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மூலம் பரிசோதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விஜிலென்ஸ் மற்றும் சுகாதார அதிகாரிகள் மூலம் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் தடை அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

Admin

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டத்திற்கு 4,000 ரசிகர்களுக்கு அனுமதி

புதுச்சேரி சபாநாயருக்கு திடீர் நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி.!!

Admin

கொரோனா தொற்றால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்.. நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

மக்கள் பத்திரிக்கையாளர் டேனிஷ் உடல் ஜாமியா பல்கலை.யில் அடக்கம்

Admin

விதிகளின்படி தான் கைது நடவடிக்கை…ஷில்பா ஷெட்டியின் கணவர் அனுப்பிய மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

Admin

8 சிங்கங்களுக்கு கொரோனா!

மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு? இதையும் சொல்வாங்களா?

Admin

கோமா… உடல்நலக் கோளாறு… ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த சாந்தன் இறப்பு

Pamban Mu Prasanth

தடுப்பூசியை மாற்றிப்போட்ட சுகாதாரத்துறை! – உ.பி.யில் இன்னொரு அவலம்.

தமிழகத்தை உளவு பார்க்க வந்துள்ளாரா..புதிய ஆளுநர்?

Admin

Leave a Comment