இவை அனைத்தும் திருப்பதிக்கு எடுத்து செல்லத் தடை

SHARE

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், , ஷாம்பு பாக்கெட்டுகள் உட்பட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தவும், எடுத்துச் செல்லவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி, பக்தர்கள் இன்று முதல் நெகிழிப் பொருட்கள் எடுத்து செல்லக் கூடாது. இந்த உத்தரவை திருப்பதி தேவஸ்தானம் பிறப்பித்துள்ளது.

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை என்ன செய்வது? திருப்பதி தேவஸ்தானம் பதில்..!!
இதனை தீவிரமாக செயல்படுத்தும் வகையில் திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்கள், தனிநபர்கள் அலிபிரி சோதனைச் சாவடியில் முழுமையாக தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல திருமலையில் உள்ள கடைகளில் இனி பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மட்கும் அல்லது காகித அட்டைகள் பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் ஈரமான மற்றும் உலர் கழிவுகளை தனித்தனி குப்பைத் தொட்டிகளில் போடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அல்லாத கவர்கள் வழங்குவதற்காக பக்தர்களிடம் வியாபாரிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இருக்க, கடைகளின் முன் கட்டண அறிவிப்பு பலகைகளை நிறுவப்பட்டு வருகின்றன. மேலும் திருப்பதியில் கடை வைத்திருப்பவர்கள் விற்க உரிமம் பெற்ற பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை குறிப்பிட்ட இடைவெளியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மூலம் பரிசோதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விஜிலென்ஸ் மற்றும் சுகாதார அதிகாரிகள் மூலம் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் தடை அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் கவலை தருகிறது: தலைமை நீதிபதி பேச்சு!

Admin

கர்ணன் – என்ற பெயர் எப்படி வந்தது?

இராமாயணத்தின் இப்படி ஒரு காண்டம் இருக்கிறதா? தியாகக் காண்டம் தெரியுமா?

Admin

கொரோனா தொற்றால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்.. நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

இந்தியாவில் அதிக மொழி பேசும் மாவட்டம் இதுதான்.. ஆய்வில் வெளியான சூப்பர் தகவல்…

Admin

மகாராஷ்ட்ராவில் தொடங்கியது கொரோனா 3வது அலை… அரசின் அறிவிப்பால் மக்கள் பீதி

Admin

வருகிறது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் அனுமதி!

உணவு எடுத்துக் கொள்ளுதலின் 4 வகைகள்: கீதை சொல்வது என்ன?

Admin

தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Pamban Mu Prasanth

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

Leave a Comment