கீழடி ஆராய்ச்சி வெட்டி வேலை… வெறுப்பைக் கக்கும் துக்ளக்… சரஸ்வதியை தேடுவது என்ன வேலை? கேள்வி கேட்கும் ஆய்வாளர்கள்…

SHARE

இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை 2013-14 ஆம் ஆண்டில் வைகை நதிக்கரையில் ஓர் ஆய்வை மேற்கொண்டது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் வழியே 250 கி.மீ தூரம் ஓடும் வைகை நதியின் இருகரைகளிலும் உள்ள 400 கிராமங்களில் இந்த ஆய்வு மேற்கொண்டது

ஓர் ஆண்டு முழுவதும் இந்த 400 கிராமங்களில் அலைந்து திரிந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அவர்கள் 263 புதை மேடுகளையும் 90 வாழ்விடங்களையும் இனம் கண்டார்கள்.

இதில் கீழடியில் கிடைத்த பழங்கால தமிழர்களின் பொருட்கள் நாணயங்கள், முதுமக்கள் தாழிகள் போன்றவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்குடி சிறப்பாக வாழ்ந்துள்ளனர் என்பதை உலகிற்கு பறை சாற்றி வருகின்றது.

கீழடி தமிழர்களின் தாய் மடி என்ற சொல்லுக்கு ஏற்ப தினமும் பல பொருட்களை அகழாய்வில் கொடுத்து நம்மை பெருமைபடுத்தி வருகிறது கீழடி .

இந்த நிலையில் கீழடி நாகரிகத்தினையும் அகழ்வாராய்ச்சியினையும் கொச்சை படுத்தும் வகையில் துக்ளக் எழுதிய கட்டுரை தமிழ் ஆர்வளர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது கட்டுரைக்கு தொல்பொருள் ஆய்வு வெட்டி வேலை என தலைப்பிட்டு எங்கு தோண்டினாலும் வெறும் மண்டை ஒடுகளும் ஆயுதங்களும்தான் கிடைகின்றன.

இதை வைத்துக்கொண்டு என்ன செய்வது ஆஸ்திரேலிய மண்ணில் தோண்டினால் கூட இதுதான் கிடைக்கும்.தமிழக அரசின் கீழடி அகழாய்வு ஒரு வெட்டி வேலை என தெரிவித்துள்ளது.

ஆதிகாலம் முதற்கொண்டே உலகம் முழுக்க தமிழர்கள் பரவியிருந்தனர் என ஆராய்ச்சியாளர்கள் கூறும் நிலையில் துகளக்கின் இந்த கட்டுரைக்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

“இந்தியாவில் ஓடவே இல்லை – என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட சரஸ்வதி ஆற்றைத் தேட, இந்திய அரசு ஒன்றிய பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாயை ஒதுக்கியது, ஆனால் ஆறும் கிடைக்கவில்லை, அதன் நீரும் கிடைக்கவில்லை. மொத்த தொகையும் வீண் செலவாகிறது. ஆனால் அதை எதிர்க்காதவர்கள், ஆய்வில் ஆதாரங்களை அள்ளிக் கொடுக்கும் கீழடி ஆய்வை வெட்டி வேலை என்பதா?” – என்றும்,

“கொரோனா பரவலைத் தடுக்க மணியடித்து கைத்தட்டியவர்கள், ஆக்கபூர்வ வேலைகள் பற்றி தமிழர்களுக்கு பாடம் எடுப்பதா?” – என்றும்,

“ஆரியர்களின் தடங்கள் தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கவில்லை என்பதால், அவர்கள் தொல்லியல் ஆய்வுகளுக்கு எதிரிகளாகிவிட்டார்கள்” – என்றும் சமூக வலைத்தளங்களில் பல வகையிலும் இந்த செய்தி விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சர்க்கரை ஏன் அஸ்கா என்று அழைக்கப்படுகிறது?

Admin

ஒன்றிய அரசு என அழைக்கத் தடையில்லை.!! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Admin

மதுபானங்களுக்கு இன்று முதல் 20% சிறப்பு வரி – மது பிரியர்கள் அதிர்ச்சி

Admin

தமிழகத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம்!

Admin

அமைச்சர் சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுத தயாரா? – அண்ணாமலை கேள்வி

Admin

ஏன் பாஜகவில் சேர்ந்தேன்? காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

Pamban Mu Prasanth

தற்குறி – என்றால் என்ன?

கோ பேக் ராமர்… நாடகமாடினாரா பெண் துறவி? நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் – நூல் மதிப்புரை

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

வாழும் பென்னிகுவிக் – யார் இந்த ககன் தீப் சிங் பேடி?

விஜய்யை நீதிபதிகள் விமர்சித்தது தேவையில்லாதது: முன்னாள் நீதிபதி சந்துரு அதிருப்தி

Admin

Leave a Comment