கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

SHARE

உண்மையான ஐரோப்பியத் தமிழறிஞரின் நினைவுநாள் பகிர்வோம்!.

தமிழ் என்பது தனி மொழி, அது சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்தது அல்ல. தெலுங்கு, துளு உள்ளிட்ட மொழிகள் தமிழில் இருந்து பிறந்தன – என்று முதன் முதலில் சொன்ன அறிஞர் கால்டுவெல் அல்ல எல்லீஸ் அவர்கள்!.

பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் தமிழ்ப் பற்றின் காரணமாகத் தனது பெயரை தமிழ் இலக்கணப்படி எல்லீசன் என்று மாற்றிப் பயன்படுத்தினார்.

திருவள்ளுவருக்கு தங்கக் காசு வெளியிட்டார். திருக்குறளுக்கு மிக அதிக மேற்கோள் நூல்களுடன் உரை எழுதினார். பரிமேலழகரின் உரை ஆரியச் சார்பானது என்பதைத் தனது உரையில் சான்றுகளுடன் சுட்டிக் காட்டினார். தன் கல்வெட்டுகளில் கூட திருக்குறள் வரிகளை மேற்கோள் காட்டினார்.

தமிழ்த் தாகம் தணியாமல் பதிப்பிக்க, படிக்க தமிழ்ச் சுவடிகளைத் தேடி அலைந்தார். அந்தப் பயணத்தில் ஒருநாள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டபோது அவருக்கு 42 வயது. அவர் கொல்லப்பட்ட பின்பு அவர் பல அறைகள் நிறைய சேகரித்த சுவடிகள் பதிப்பிக்கப்படாமல் அழிந்தன. தன் தத்துப் பிள்ளையை தமிழ்த்தாய் இழந்த அந்த நாள் மார்ச் 9, 1819.

தமிழ்மொழிக் குடும்பத்தை திராவிடமாக்கிய கால்டுவெல்லை அறிந்த தமிழர்களுக்கு இவரைத் தெரியாது, இவரது நினைவுநாள் தெரியாது. சென்னையில் உள்ள எல்லீஸ் சாலை இவர் நினைவாக பெயர் சூட்டப்பட்டது என்பதுகூடத் தெரியாது. அதுதான் திராவிடத்தின் சாதனை.

மானமும் அறமும் உள்ள தமிழர்கள் எல்லீசனை நினைவு கூர்வோம்.

– இரா.மன்னர் மன்னன்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு? இதையும் சொல்வாங்களா?

Admin

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

அரசுப்பேருந்து கவிழ்ந்து மாணவன் பலி – நிவாரணம் அறிவித்த முதல்வர்

Pamban Mu Prasanth

அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா 3ஆம் அலை தீவிரமடையும் : எச்சரிக்கும் நிபுணர்கள்

Admin

பெற்றோரை இழந்த குழந்தைகள்.. வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி

Admin

ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

இ-பாஸ் ரத்து..பஸ்கள் இயக்கம்… புதிய தளர்வுகளால் மக்கள் மகிழ்ச்சி…

Admin

நாளை முதல் அருங்காட்சியகங்கள் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம்… தொல்லியல் துறை அறிவிப்பு!

Admin

ராஜேந்திர பாலாஜி கம்பி எண்ணுவது உறுதி- அமைச்சர் நாசர்

Admin

நான் தான் அப்பவே சொன்னேனே.. சீனாவை வம்பிழுக்கும் டிரம்ப்!

Admin

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… 4 மாவட்டங்களுக்கு மட்டும் போக்குவரத்து சேவை அனுமதி

Admin

”சங்கரய்யாவின் தியாகத்தையும் எளிமையையும் போற்றுகிறேன்” மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Admin

Leave a Comment