கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

SHARE

உண்மையான ஐரோப்பியத் தமிழறிஞரின் நினைவுநாள் பகிர்வோம்!.

தமிழ் என்பது தனி மொழி, அது சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்தது அல்ல. தெலுங்கு, துளு உள்ளிட்ட மொழிகள் தமிழில் இருந்து பிறந்தன – என்று முதன் முதலில் சொன்ன அறிஞர் கால்டுவெல் அல்ல எல்லீஸ் அவர்கள்!.

பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் தமிழ்ப் பற்றின் காரணமாகத் தனது பெயரை தமிழ் இலக்கணப்படி எல்லீசன் என்று மாற்றிப் பயன்படுத்தினார்.

திருவள்ளுவருக்கு தங்கக் காசு வெளியிட்டார். திருக்குறளுக்கு மிக அதிக மேற்கோள் நூல்களுடன் உரை எழுதினார். பரிமேலழகரின் உரை ஆரியச் சார்பானது என்பதைத் தனது உரையில் சான்றுகளுடன் சுட்டிக் காட்டினார். தன் கல்வெட்டுகளில் கூட திருக்குறள் வரிகளை மேற்கோள் காட்டினார்.

தமிழ்த் தாகம் தணியாமல் பதிப்பிக்க, படிக்க தமிழ்ச் சுவடிகளைத் தேடி அலைந்தார். அந்தப் பயணத்தில் ஒருநாள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டபோது அவருக்கு 42 வயது. அவர் கொல்லப்பட்ட பின்பு அவர் பல அறைகள் நிறைய சேகரித்த சுவடிகள் பதிப்பிக்கப்படாமல் அழிந்தன. தன் தத்துப் பிள்ளையை தமிழ்த்தாய் இழந்த அந்த நாள் மார்ச் 9, 1819.

தமிழ்மொழிக் குடும்பத்தை திராவிடமாக்கிய கால்டுவெல்லை அறிந்த தமிழர்களுக்கு இவரைத் தெரியாது, இவரது நினைவுநாள் தெரியாது. சென்னையில் உள்ள எல்லீஸ் சாலை இவர் நினைவாக பெயர் சூட்டப்பட்டது என்பதுகூடத் தெரியாது. அதுதான் திராவிடத்தின் சாதனை.

மானமும் அறமும் உள்ள தமிழர்கள் எல்லீசனை நினைவு கூர்வோம்.

– இரா.மன்னர் மன்னன்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

‘’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போல் மறந்துட்டு பேசாதீங்க ’’ – எடப்பாடிக்கு பதில் கொடுத்த ஸ்டாலின் !

Admin

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நீடிக்க வேண்டும்- அற்புதம்மாள் கோரிக்கை

Admin

”எங்கள் நாடு இந்தியாதான்… நான் மலாலா அல்ல” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை

Pamban Mu Prasanth

தமிழக முதல்வருக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி..!!

Admin

’எய்ம்ஸ் போல இருக்காது’ வானதி ஸ்ரீனிவாசனை சட்டப்பேரவையிலேயே கலாய்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Pamban Mu Prasanth

இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களை ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ள வேண்டாம் …!

Admin

எம்ஜிஆரை தவறாக சித்தரிப்பதா..? கோபமானமுன்னாள் அமைச்சர்

Admin

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்..!!

Admin

’காற்றோட கலந்தாலும் அதுதான் நம் அடையாளம்…’ – பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சங்ககாலக் கால்வாய் கண்டுபிடிப்பு

Admin

கொரோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: வழிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

Leave a Comment