கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

SHARE

உண்மையான ஐரோப்பியத் தமிழறிஞரின் நினைவுநாள் பகிர்வோம்!.

தமிழ் என்பது தனி மொழி, அது சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்தது அல்ல. தெலுங்கு, துளு உள்ளிட்ட மொழிகள் தமிழில் இருந்து பிறந்தன – என்று முதன் முதலில் சொன்ன அறிஞர் கால்டுவெல் அல்ல எல்லீஸ் அவர்கள்!.

பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் தமிழ்ப் பற்றின் காரணமாகத் தனது பெயரை தமிழ் இலக்கணப்படி எல்லீசன் என்று மாற்றிப் பயன்படுத்தினார்.

திருவள்ளுவருக்கு தங்கக் காசு வெளியிட்டார். திருக்குறளுக்கு மிக அதிக மேற்கோள் நூல்களுடன் உரை எழுதினார். பரிமேலழகரின் உரை ஆரியச் சார்பானது என்பதைத் தனது உரையில் சான்றுகளுடன் சுட்டிக் காட்டினார். தன் கல்வெட்டுகளில் கூட திருக்குறள் வரிகளை மேற்கோள் காட்டினார்.

தமிழ்த் தாகம் தணியாமல் பதிப்பிக்க, படிக்க தமிழ்ச் சுவடிகளைத் தேடி அலைந்தார். அந்தப் பயணத்தில் ஒருநாள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டபோது அவருக்கு 42 வயது. அவர் கொல்லப்பட்ட பின்பு அவர் பல அறைகள் நிறைய சேகரித்த சுவடிகள் பதிப்பிக்கப்படாமல் அழிந்தன. தன் தத்துப் பிள்ளையை தமிழ்த்தாய் இழந்த அந்த நாள் மார்ச் 9, 1819.

தமிழ்மொழிக் குடும்பத்தை திராவிடமாக்கிய கால்டுவெல்லை அறிந்த தமிழர்களுக்கு இவரைத் தெரியாது, இவரது நினைவுநாள் தெரியாது. சென்னையில் உள்ள எல்லீஸ் சாலை இவர் நினைவாக பெயர் சூட்டப்பட்டது என்பதுகூடத் தெரியாது. அதுதான் திராவிடத்தின் சாதனை.

மானமும் அறமும் உள்ள தமிழர்கள் எல்லீசனை நினைவு கூர்வோம்.

– இரா.மன்னர் மன்னன்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி..மத்திய அரசு முடிவு!

Admin

வாரிசுக்கு மாறிய HCL சேர்மன் பதவியில் இருந்து விலகினார் ஷிவ் நாடார்!

Admin

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தம்: ஸ்டெர்லைட் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

Admin

குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா?: ரிசர்வ் வங்கி சொல்வதைக் கேளுங்கள்…

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

உங்கள் தகவலை பேஸ்புக்கிடம் கொடுக்கமாட்டோம் இறங்கிவந்த வாட்ஸ்அப் !நிறுவனம்

Admin

RSS மதவாதிக்கு அரசு செலவில் வரவேற்பா?! திமுக அரசிடம் கொந்தளிக்கும் எம்பிக்கள்!

Admin

கரும்பூஞ்சை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை!: தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஒரே சளி தொல்லை டாக்டர்… தனி ஆளாய் மருத்துவமனைக்கு சென்ற 3 வயது சிறுமி

Admin

Leave a Comment