சி.வை. தாமோதரம் பிள்ளை: தமிழுக்கு கிடைத்த கொடை – இலக்கிய வீதி நிகச்சியில் பெருமிதம்

SHARE

சென்னையைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான ‘இலக்கிய வீதி’ சார்பில் பதிப்புலகின் பேரொளிகள் என்ற தலைப்பில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்று வருகின்றன. இந்த நிலையில், நிகழ்ழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் நிகழ்ச்சி குறித்து பகிர்ந்து கொண்ட செய்திகள் இவை.

நேற்றைய மாலைப் பொழுது இனிமையானது இலக்கிய வீதியின் நிகழ்வால்! நம்மில் பலர் உ.வே.சாவை அறிந்த அளவிற்கு அவரது சமகாலத்தவரும் , அவருக்கு இணையானவருமான சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களை அறிந்திருக்கவில்லை என்பதே யதார்த்தம். அதற்கு அன்றே ஆனந்த விகடன் அவரிடம் என் சரிதை என்ற காலத்தால் அழியாத கட்டுரை தொடரை வாங்கி பிரசுரித்து இன்றளவும் அது பல பதிப்புகளை கண்ட நூலாகும்.

சி.வை.தாமோதரம்பிள்ளை இல்லாவிடில் நமக்கு கலித் தொகை கிடைத்திருக்காது. நீதி நெறி நூலை வெளிக் கொண்டு வந்தவரும் இவர் தான். தொல்காப்பிய பொருள் அதிகாரத்தையும் கொண்டு வந்துள்ளார். இப்படி பல சங்க நூல்கள் தமிழுக்கு இவரது கொடைகள்.

இவரது பதிப்புல போராட்டங்களையும், வாழ்வையும் குறித்து முனைவர் ப.சரவணன் மிக அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார். அவ்வளவு நுட்பமான பார்வையுடன், ஈடுபாட்டுடன் அவரது உரை இருந்தது! இந்த உரைக்கு மேலும் நேரம் தந்திருக்கலாம் எனத் தோன்றியது.

ஒரு இலக்கிய அமைப்பு ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் – அதை நிறுவியவரே மறைந்த பின்னும் தொடர முடிகிறதென்றால் – அது நானறிந்த வரை இலக்கிய வீதியாகத் தான் இருக்க முடியும். பெயருக்கேற்றார் போலவே இனியவனாகத் திகழ்ந்த பெரியவர் இனியவன் தமிழ் படைப்பாளுமைகளுடன் கொண்ட நெருக்கமும், பிணைப்பும் அலாதியானது.

அவருக்கு பிறகு அவரது மகள் வாசுகி பத்ரி நாராயணன் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார். நேற்றைய தினம் அவர இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம் அதன் துணை செயலாளர் துரை.லட்சுமிபதி நிகழ்வை சிறப்பாக நடத்தினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

Admin

எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியிலும் பயமில்லை: முன்னாள் அமைச்சர் தங்கமணி !

Admin

அரசு ஊழியர்களுக்கு கொரோனா உதவி வழங்க தடை – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Admin

ஏன் பாஜகவில் சேர்ந்தேன்? காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

Pamban Mu Prasanth

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

சிவசங்கர் பாபாவின் இ-மெயில் முடக்கம்… சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை…

Admin

இந்தியாவில் கொரோனாபலி 42 லட்சம் ? சர்சைக்குள்ளான அமெரிக்க பத்திரிகை

Admin

மீண்டும் மீண்டும் சர்ச்சை: என்னதான் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி?

Pamban Mu Prasanth

கர்நாடக பழங்குடியினரை நடுவழியில் இறக்கி விட்ட லாரி ஓட்டுநர்… கைகொடுத்த தமிழக மக்கள்…

Admin

ஆத்தாவுக்கே இந்த நிலைமையா.. கோயில்களை திறக்க சாணிப்பவுடர் குடித்த பெண் !

Admin

ரூ.900-ஐ தாண்டிய சிலிண்டர் விலை .. இல்லத்தரசிகள் அதிர்ச்சி !

Admin

நாளை முதல் அருங்காட்சியகங்கள் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம்… தொல்லியல் துறை அறிவிப்பு!

Admin

Leave a Comment