சி.வை. தாமோதரம் பிள்ளை: தமிழுக்கு கிடைத்த கொடை – இலக்கிய வீதி நிகச்சியில் பெருமிதம்

SHARE

சென்னையைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான ‘இலக்கிய வீதி’ சார்பில் பதிப்புலகின் பேரொளிகள் என்ற தலைப்பில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்று வருகின்றன. இந்த நிலையில், நிகழ்ழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் நிகழ்ச்சி குறித்து பகிர்ந்து கொண்ட செய்திகள் இவை.

நேற்றைய மாலைப் பொழுது இனிமையானது இலக்கிய வீதியின் நிகழ்வால்! நம்மில் பலர் உ.வே.சாவை அறிந்த அளவிற்கு அவரது சமகாலத்தவரும் , அவருக்கு இணையானவருமான சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களை அறிந்திருக்கவில்லை என்பதே யதார்த்தம். அதற்கு அன்றே ஆனந்த விகடன் அவரிடம் என் சரிதை என்ற காலத்தால் அழியாத கட்டுரை தொடரை வாங்கி பிரசுரித்து இன்றளவும் அது பல பதிப்புகளை கண்ட நூலாகும்.

சி.வை.தாமோதரம்பிள்ளை இல்லாவிடில் நமக்கு கலித் தொகை கிடைத்திருக்காது. நீதி நெறி நூலை வெளிக் கொண்டு வந்தவரும் இவர் தான். தொல்காப்பிய பொருள் அதிகாரத்தையும் கொண்டு வந்துள்ளார். இப்படி பல சங்க நூல்கள் தமிழுக்கு இவரது கொடைகள்.

இவரது பதிப்புல போராட்டங்களையும், வாழ்வையும் குறித்து முனைவர் ப.சரவணன் மிக அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார். அவ்வளவு நுட்பமான பார்வையுடன், ஈடுபாட்டுடன் அவரது உரை இருந்தது! இந்த உரைக்கு மேலும் நேரம் தந்திருக்கலாம் எனத் தோன்றியது.

ஒரு இலக்கிய அமைப்பு ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் – அதை நிறுவியவரே மறைந்த பின்னும் தொடர முடிகிறதென்றால் – அது நானறிந்த வரை இலக்கிய வீதியாகத் தான் இருக்க முடியும். பெயருக்கேற்றார் போலவே இனியவனாகத் திகழ்ந்த பெரியவர் இனியவன் தமிழ் படைப்பாளுமைகளுடன் கொண்ட நெருக்கமும், பிணைப்பும் அலாதியானது.

அவருக்கு பிறகு அவரது மகள் வாசுகி பத்ரி நாராயணன் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார். நேற்றைய தினம் அவர இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம் அதன் துணை செயலாளர் துரை.லட்சுமிபதி நிகழ்வை சிறப்பாக நடத்தினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

செப்டம்பர் 15- வரை ஊரடங்கு நீட்டிப்பு : எவற்றுக்கெல்லாம் தடை

Admin

கர்நாடக பழங்குடியினரை நடுவழியில் இறக்கி விட்ட லாரி ஓட்டுநர்… கைகொடுத்த தமிழக மக்கள்…

Admin

இ-பாஸ் ரத்து..பஸ்கள் இயக்கம்… புதிய தளர்வுகளால் மக்கள் மகிழ்ச்சி…

Admin

கீழடி ஆராய்ச்சி வெட்டி வேலை… வெறுப்பைக் கக்கும் துக்ளக்… சரஸ்வதியை தேடுவது என்ன வேலை? கேள்வி கேட்கும் ஆய்வாளர்கள்…

Admin

பொதுச் செயலாளரும் விலகினார்!… கலகலத்தது மக்கள் நீதி மய்யம்.

அற்புதம் அம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்? கமல்ஹாசன்!

Admin

மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி… ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு ஆறுதல்

Admin

நிதிக்காக இணையவில்லை, உதயநிதிக்காக திமுகவில் இணைந்துள்ளேன்… தோப்பு வெங்கடாச்சலம்!

Admin

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவு கொடுக்க தயார்: பிரான்ஸ் அறிவிப்பு

Admin

தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று – 236 பேர் உயிரிழப்பு

Admin

வேளாண் பட்ஜெட் நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் – கமலஹாசன்

Admin

ஒரு லட்சத்தை அபராதமா கட்ட விருப்பமில்லை : சொகுசு கார் வழக்கில் விஜய் தரப்பு வாதம்

Admin

Leave a Comment