சி.வை. தாமோதரம் பிள்ளை: தமிழுக்கு கிடைத்த கொடை – இலக்கிய வீதி நிகச்சியில் பெருமிதம்

SHARE

சென்னையைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான ‘இலக்கிய வீதி’ சார்பில் பதிப்புலகின் பேரொளிகள் என்ற தலைப்பில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்று வருகின்றன. இந்த நிலையில், நிகழ்ழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் நிகழ்ச்சி குறித்து பகிர்ந்து கொண்ட செய்திகள் இவை.

நேற்றைய மாலைப் பொழுது இனிமையானது இலக்கிய வீதியின் நிகழ்வால்! நம்மில் பலர் உ.வே.சாவை அறிந்த அளவிற்கு அவரது சமகாலத்தவரும் , அவருக்கு இணையானவருமான சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களை அறிந்திருக்கவில்லை என்பதே யதார்த்தம். அதற்கு அன்றே ஆனந்த விகடன் அவரிடம் என் சரிதை என்ற காலத்தால் அழியாத கட்டுரை தொடரை வாங்கி பிரசுரித்து இன்றளவும் அது பல பதிப்புகளை கண்ட நூலாகும்.

சி.வை.தாமோதரம்பிள்ளை இல்லாவிடில் நமக்கு கலித் தொகை கிடைத்திருக்காது. நீதி நெறி நூலை வெளிக் கொண்டு வந்தவரும் இவர் தான். தொல்காப்பிய பொருள் அதிகாரத்தையும் கொண்டு வந்துள்ளார். இப்படி பல சங்க நூல்கள் தமிழுக்கு இவரது கொடைகள்.

இவரது பதிப்புல போராட்டங்களையும், வாழ்வையும் குறித்து முனைவர் ப.சரவணன் மிக அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார். அவ்வளவு நுட்பமான பார்வையுடன், ஈடுபாட்டுடன் அவரது உரை இருந்தது! இந்த உரைக்கு மேலும் நேரம் தந்திருக்கலாம் எனத் தோன்றியது.

ஒரு இலக்கிய அமைப்பு ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் – அதை நிறுவியவரே மறைந்த பின்னும் தொடர முடிகிறதென்றால் – அது நானறிந்த வரை இலக்கிய வீதியாகத் தான் இருக்க முடியும். பெயருக்கேற்றார் போலவே இனியவனாகத் திகழ்ந்த பெரியவர் இனியவன் தமிழ் படைப்பாளுமைகளுடன் கொண்ட நெருக்கமும், பிணைப்பும் அலாதியானது.

அவருக்கு பிறகு அவரது மகள் வாசுகி பத்ரி நாராயணன் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார். நேற்றைய தினம் அவர இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம் அதன் துணை செயலாளர் துரை.லட்சுமிபதி நிகழ்வை சிறப்பாக நடத்தினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு ரூ. 2,000 கோடி ஊழலா?

Admin

சார் அது டைப்பிங் மிஸ்டேக் .. கொங்குநாடு விவகாரம் விளக்கம் கொடுத்த அண்ணாமலை!

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

RSS மதவாதிக்கு அரசு செலவில் வரவேற்பா?! திமுக அரசிடம் கொந்தளிக்கும் எம்பிக்கள்!

Admin

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது காரணம் என்ன?

Admin

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Admin

தமிழக முதல்வருக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி..!!

Admin

சாதி பெருமை பேசினாரா சுரேஷ் ரெய்னா? சர்ச்சையாகும் வீடியோ!

Admin

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

செயற்கை பண்ணை குட்டை மூலம் விவசாயம் செய்து வரும் சகோதரர்கள்..!!

Admin

தடுப்பூசி இல்லை… மத்தபடி கொரோனா எங்க கண்ட்ரோல் தான்…!

Admin

Leave a Comment