கால்நடை என்ற சொல் ஏன் மனிதர்களுக்குப் பொருந்தாது?.

SHARE

தமிழில் விலங்குகளைக் குறிக்கும் சொற்களில் ஒன்று கால்நடை. இது பொதுவாக வீட்டு விலங்குகளான ஆடு, மாடுகளைக் குறிக்கப் பயன்படுகிறது.

இந்த சொல்லைப் பயன்படுத்தும் சிலருக்கு ஒரு ஐயம் வரக் கூடும், ‘ஆடு மாடுகள் மட்டுமா காலால் நடக்கின்றன? மனிதனும் காலால்தானே நடக்கிறான்… மனிதனை ஏன் கால்நடை என்று சொல்வதில்லை?’ – என்று.

 இத்தனைக்கும் ஒருவர் நடந்து பயணம் செய்வதை ‘அவர் கால்நடையாக பயணித்தார்’ என்று சொல்வது உண்டு. ஆனால் ஏன் மனிதர்களைக் கால்நடைகள் பட்டியலில் சேர்ப்பது இல்லை?.

இதற்கான விளக்கத்தை கிருபானந்த வாரியார் அவர்கள் ஒரு மேடையில் அளித்தார். அவரது விளக்கத்தின்படி, ஆடு, மாடுகளைப் போலவே மனிதனும் கால்நடையாக பயணிக்கக் கூடியவன். ஆனால் அவனுக்கு மேலும் இரண்டு வகையான நடைகள் உள்ளன.

முதலாவது ‘நா நடை’ அதாவது பேச்சு நடை. இப்போதும் ஒருவர் பேசும்போது ‘உங்கள் நடை நன்றாக இருந்தது’ என்று பாராட்டப்படுவதைப் பார்க்கிறோம் அல்லவா, அந்த நடைதான் இது.

இரண்டாவது மன நடை. அதாவது எண்ணத்தால் பயணிப்பது. இப்போது யாராவது இமய மலை குறித்து உங்களிடம் பேசினால், இமய மலையை நேரில் பார்த்த காட்சியோ அல்லது இமய மலை குறித்த புகைப்படமோ உங்கள் மனதிற்குள் வந்து நீங்கள் அங்கு மனதால் பயணிப்பீர்கள்

. இதுதான் மனநடை. மனம் எண்ணிய இடத்திற்கு உடனே சென்று சேரும் வேகத்துக்கு ‘மனோவேகம்’ என்று பெயர். உலகின் உச்சபட்ச வேகம் என்று இதனைச் சொல்லலாம்.

இந்த இரண்டு கூடுதல் நடைகளும் வீட்டு விலங்குகளுக்கு கிடையாது. அவை காலால் மட்டுமே நடக்கக் கூடியவை அதனால்தான் அவை கால்நடைகள். மனிதன் நாவாலும், மனதாலும் நடக்கக் கூடியவன், கூடுதலான அறிவும் ஆற்றலும் பெற்றவன் எனவே அவன் கால்நடை அல்ல. 

இரா.மன்னர் மன்னன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர் – நாளை முதல் வெளியாகின்றது.

காளைகளைக் காப்பாற்றினோம்… யானைகளை?: அழிவின் விளிம்பில் தமிழர் செல்வம்!.

Admin

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

உயிர் பெறும் தமிழ் நாகரிகம் : அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு

Admin

கொரோனா சான்றிதழில் பிழையா..? திருத்தம் செய்து கொள்ள புதிய வழிமுறை இதோ

Admin

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

Pamban Mu Prasanth

எனதருமை டாஸ்டாய் – உலக ஆளுமைகளுடன் உள்ளூர்மொழி பயணம் – புத்தக அறிமுகம்

Admin

வயிறு எரிவதால் அகழாய்வினை எதிர்த்து எழுதுகிறார்கள் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Admin

சி.வை. தாமோதரம் பிள்ளை: தமிழுக்கு கிடைத்த கொடை – இலக்கிய வீதி நிகச்சியில் பெருமிதம்

Admin

காஞ்ச அய்லய்யா எழுதிய ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ – நூல் அறிமுகம்!.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment