கால்நடை என்ற சொல் ஏன் மனிதர்களுக்குப் பொருந்தாது?.

SHARE

தமிழில் விலங்குகளைக் குறிக்கும் சொற்களில் ஒன்று கால்நடை. இது பொதுவாக வீட்டு விலங்குகளான ஆடு, மாடுகளைக் குறிக்கப் பயன்படுகிறது.

இந்த சொல்லைப் பயன்படுத்தும் சிலருக்கு ஒரு ஐயம் வரக் கூடும், ‘ஆடு மாடுகள் மட்டுமா காலால் நடக்கின்றன? மனிதனும் காலால்தானே நடக்கிறான்… மனிதனை ஏன் கால்நடை என்று சொல்வதில்லை?’ – என்று.

 இத்தனைக்கும் ஒருவர் நடந்து பயணம் செய்வதை ‘அவர் கால்நடையாக பயணித்தார்’ என்று சொல்வது உண்டு. ஆனால் ஏன் மனிதர்களைக் கால்நடைகள் பட்டியலில் சேர்ப்பது இல்லை?.

இதற்கான விளக்கத்தை கிருபானந்த வாரியார் அவர்கள் ஒரு மேடையில் அளித்தார். அவரது விளக்கத்தின்படி, ஆடு, மாடுகளைப் போலவே மனிதனும் கால்நடையாக பயணிக்கக் கூடியவன். ஆனால் அவனுக்கு மேலும் இரண்டு வகையான நடைகள் உள்ளன.

முதலாவது ‘நா நடை’ அதாவது பேச்சு நடை. இப்போதும் ஒருவர் பேசும்போது ‘உங்கள் நடை நன்றாக இருந்தது’ என்று பாராட்டப்படுவதைப் பார்க்கிறோம் அல்லவா, அந்த நடைதான் இது.

இரண்டாவது மன நடை. அதாவது எண்ணத்தால் பயணிப்பது. இப்போது யாராவது இமய மலை குறித்து உங்களிடம் பேசினால், இமய மலையை நேரில் பார்த்த காட்சியோ அல்லது இமய மலை குறித்த புகைப்படமோ உங்கள் மனதிற்குள் வந்து நீங்கள் அங்கு மனதால் பயணிப்பீர்கள்

. இதுதான் மனநடை. மனம் எண்ணிய இடத்திற்கு உடனே சென்று சேரும் வேகத்துக்கு ‘மனோவேகம்’ என்று பெயர். உலகின் உச்சபட்ச வேகம் என்று இதனைச் சொல்லலாம்.

இந்த இரண்டு கூடுதல் நடைகளும் வீட்டு விலங்குகளுக்கு கிடையாது. அவை காலால் மட்டுமே நடக்கக் கூடியவை அதனால்தான் அவை கால்நடைகள். மனிதன் நாவாலும், மனதாலும் நடக்கக் கூடியவன், கூடுதலான அறிவும் ஆற்றலும் பெற்றவன் எனவே அவன் கால்நடை அல்ல. 

இரா.மன்னர் மன்னன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

Admin

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – பகுதி 3: அல்லல்பட்ட அரசர்கள்

Admin

கீழடியில் கிடைத்த சிற்பம் – ஆணா? பெண்ணா?

Admin

மா. இராசமாணிக்கம் என்னும் மாபெரும் தமிழ் ஆளுமை! – அழிக்கப்பட்ட தமிழ் ஆய்வாளர் குறித்த ஆவணப் பதிவு.

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் – நூல் மதிப்புரை

கொரோனா சான்றிதழில் பிழையா..? திருத்தம் செய்து கொள்ள புதிய வழிமுறை இதோ

Admin

தமிழ்நாடு நாள் சர்ச்சை – என்ன வரலாறு? எது தீர்வு?:

இரா.மன்னர் மன்னன்

சு.சேதுராமலிங்கம் எழுதிய பிரபாகரன் சட்டகம் – நூல் அறிமுகம்

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

Admin

உலகின் மிகச் சுவையான மாம்பழ வகை எது?

Leave a Comment