கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

கச்சத்தீவு
SHARE

கச்சத்தீவை எங்களிடம் கேட்காமல் கொடுத்துவிட்டது காங்கிரஸ் என்று திமுக நெடுநாளாக செய்து வந்த பிரசாரத்துக்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல்களை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை விண்ணப்பித்திருந்தார்.

அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே இலங்கை கச்சத்தீவுக்கான உரிமையை கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குட்டித் தீவான கச்சத்தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்று அப்போதைய பிரதமர் நேரு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு உரிமையை இலங்கைக்கு விட்டுத் தர தயாராக இருப்பதாக நேரு கூறியதாகவும் ஆர்.டி.ஐ. பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருணாநிதிக்கு தெரியும்:

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும் தகவலை, 1974-ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“1973ல்‌ கொழும்பில்‌ நடந்த வெளியுறவுச்‌.செயலர்‌ அளவிலான பேச்சுவார்த்தைக்குப் பின், கோரிக்கையை கைவிடுவதற்கான முடிவை, 1974 ஜூன்‌ மாதம்‌, வெளியுறவுச்‌ செயலர்‌ கேவல்‌ இங்கால்‌,தமிழக முதல்வர்‌ எம்‌.கருணாநிதியிடம்‌ தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில்‌ ராமநாதபுரம் ராஜாவின்‌ ஜமீன்தாரி உரிமைகள்‌ குறித்தும்‌, கச்சத்‌தீவில்‌ இலங்கையர்‌ உரிமை கொண்டாடி வருவதை நிரூபிக்கும்‌ விதமான ஆதாரங்களை இலங்கை தரவில்லை என்றும்‌ இங்‌கால் குறிப்பிட்டார்‌” என்றும் ஆர்.டி.ஐ. குறிப்பிட்டது.

அத்துடன் “எவ்வாறாயினும்‌ இலங்கை மிகவும்‌ உறுதியான நிலைப்பாட்டை” எடுத்துள்ளதாக வெளிவிவகார செயலாளர்‌ வலியுறுத்தினார் “ என்றும் தெரிவிக்கப்பட்டது.

முறையான ஆவணங்களைக் காட்டி அப்போது ராமநாதபுரம் ராஜா வசமிருந்த உரிமையை நிரூபித்து கச்சத்தீவை தக்கவைக்காமல் இழந்துவிட்டது இந்தியா என்று சொல்லப்பட்டு வந்த மேம்போக்கான காரணத்தைக் கடந்து, தகவல் தெரிவிக்கப்பட்டும் அதன் மீது கவனத்துடன் செயல்படாத திமுக தலைவரும் அப்போதைய முதலமைச்சருமான கருணாநிதியின் மீது வலுவான குற்றச்சாட்டை இந்த ஆர்.டி.ஐ பதிவு செய்யும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இதன் மூலம் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று இத்தனை காலம் மூடிமறைத்து வந்த திமுகவின் பிரசாரத்துக்கு ஆபத்து வந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா நோயாளிகளுக்காக பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை – போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு

சமூக வலைதளங்களில் திரும்பும் திசையெல்லாம் ரங்கன் வாத்தியார் மீம்ஸ் !

Admin

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

குதிரை உடல் முழுவதும் பிஜேபி விளம்பரம் .. புகார் கொடுத்த மேனகாகாந்தி

Admin

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பில் குளறுபடி? சிங்காரவேலருக்கு புறக்கணிப்பா?

Admin

ஜாதிவெறிக்கு சீட் கொடுக்கும் திமுக – சமுக நீதி எல்லாம் நடிப்புதானா?

Admin

திமுகவின் 550 வாக்குறுதிகளில் ஒன்றுகூட ஆளுநர் உரையில் இல்லை…எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Admin

உதவி கேட்ட பவானி…கரம் நீட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Admin

முதல் ஐ.பி.எல். போட்டி: வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

சே.கஸ்தூரிபாய்

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

ஆம்புலன்ஸ் சைரன் வேண்டாம்!: மணிப்பூர் அரசு உத்தரவு.

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

Pamban Mu Prasanth

Leave a Comment