நடிகைக்கு பாலியல் தொல்லை.. முன்னாள் அமைச்சரின் பாதுகாவலர், டிரைவருக்கு சம்மன்

SHARE

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பாதுகாவலர், கார் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோர் நாளை நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை கடந்த 5 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி மூன்று முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி, கடந்த 28 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் நோக்கில் தனிப்படை காவல்துறையினர் ராமநாதபுரம் சென்று முன்னாள் அமைச்சரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மணிகண்டனின் பாதுகாப்புப் காவலர், கார் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை அடையாறு அனைத்து மகளிர் கவல்நிலையம் சம்மன் அனுப்பியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

தி ஃபேமிலி மேன் 2 தொடரை உடனே தூக்குங்க: அமேசானுக்கு கடிதம் எழுதிய சீமான்

Admin

தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு : மு.க.ஸ்டாலின்!

Admin

அதிமுகவின் மகளிரணி செயலாளராக பா. வளர்மதி நியமனம்

Admin

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Admin

சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி காலமானார்

குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி இடமாற்றம்…!

Admin

போதை ஏறிபோச்சு.. ஊரடங்கில் ஒயின் குடித்த எலிகள்

Admin

இன்று ஒரே நாளில் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

வாட்ஸ் அப் மூலம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு

கீழடியில் கிடைத்த சிற்பம் – ஆணா? பெண்ணா?

Admin

இன்று அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம்..!!

Admin

Leave a Comment