ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

SHARE

நாடெங்கும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கேரளா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முன் நிற்கிறது. தற்போது கேரளத்தில் ‘ஆக்சிஜன் வார் ரூம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

கேரளா

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை அச்சுறுத்தி வரும் நிலையில் சில மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், நம் அண்டை மாநிலமான கேரளா போதுமான அளவு ஆக்ஸிஜனை முன்கூட்டியே திட்டமிட்டு கையிருப்பு வைத்து நாட்டுக்கே முன்மாதிரியாக உள்ளது.  கொரோனாவின் முதல் அலையிலேயே கேரளா கூடுதல் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்கி விட்டதாகவும் தேவையான அளவு கையிருப்பு இருப்பதை தொடர்ந்து உறுதி செய்து வந்ததாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. 

தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனாவின் இரண்டாம் அலையை எதிர்கொள்ள, தேவையான ஆக்ஸிஜன் கேரள மருத்துவமனைகளிலும் உள்ளதாகவும். மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து, தட்டுப்பாடு ஏற்பட்டால் ஆக்ஸிஜன் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் முன்கூட்டியே கேட்டு வைத்துள்ளதாகவும் கேரளி சுகாதாரத்துறை அதிகாரி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 

தற்போது ஆக்ஸிஜன் சப்ளையை ஒழுங்கு படுத்துவதற்காக, “வார் ரூம்” என்ற புதிய அமைப்பை கேரள அரசு பல்வேறு மாவட்டங்களில் திறந்து உள்ளது. கிட்டத்தட்ட 80 இடங்களில் இத்தகைய சிறப்பு வார் ரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆக்ஸிஜன் இருப்பு எவ்வளவு உள்ளது, எங்கு எவ்வளவு தேவை? – என்பதை கேரள அரசு வரையறுத்து திட்டமிட்டு செயல்படுத்த முடியும்.

முன்னதாக கர்நாடக அரசு ஆக்சிஜன் வார் ரூம்களை திறந்த நிலையில், அந்தத் திட்டத்தைக் கேரள அரசு தற்போது இன்னும் முழு வீச்சில் செயல்படுத்தி உள்ளது. இதனைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

  • பிரியாவேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

ஆம்புலன்ஸ் சைரன் வேண்டாம்!: மணிப்பூர் அரசு உத்தரவு.

மார்ச் 31 – ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

Admin

கட்சி தொடங்கிய ஆந்திர முதல்வரின் சகோதரி..!

Admin

கோமா… உடல்நலக் கோளாறு… ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த சாந்தன் இறப்பு

Pamban Mu Prasanth

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

அனுமதி பெறாமல் விளம்பரம்: செல்போன் செயலிக்கு எதிராக பொங்கிய சசி தரூர்

Admin

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு? இதையும் சொல்வாங்களா?

Admin

வீட்டிலிருந்து வெளிவர தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: சவுதி அரசு

தொல்லியல் அறிஞர்களை ஈர்க்கும் மீனவர் வீடு – யார் இந்த பிஸ்வஜித் சாஹு?

Pamban Mu Prasanth

புதிய டிஜிட்டல் கொள்கை… மத்திய அரசிடம் காலஅவகாசம் கேட்ட டுவிட்டர்!.

Admin

Leave a Comment