மூக்கு வழியாக கொரோனா தடுப்பு ஊசி? – மோடி பேச்சின் சுருக்கம் இதோ…

SHARE

கொரோனா தொற்று நாட்டில் பரவ தொடங்கியது முதல் நாட்டு மக்களிடம் பலமுறை பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். தற்போது கொரனோ 2-வது அலை பாதிப்பு குறைந்து வரும் சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பிரதமர் கூறியது என்ன?

பிரதமரின் உரையாடல் சுருக்கம்:

கொரோனா பெருந்தொற்றால் நமக்கு பிரியமான பலரை இழந்துள்ளோம். கொரோனா 2ஆவது அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. இந்த நவீன உலகம், இது போன்ற கொரோனா பெருந்தொற்றை கண்டதில்லை

{நன்றி ani}

ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா பாதிப்பும் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தன. ரயில்கள், விமானங்கள், மூலம் ஆக்சிஜன் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. ஆக்சிஜன் தேவைக்காக பாதுகாப்புப் படையினரையும் பயன்படுத்தினோம்.

மனித குலத்தின் பெரும் எதிரி கொரோனா அதனை தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை எதிர்த்துப் போராட தடுப்பூசி தான் உதவியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில், இதுவரை 23 கோடி டோஸ்களுக்கு அதிகமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குவதில், நமது நாட்டு விஞ்ஞானிகளை முழுமையாக நம்பினோம். கொரோனா தடுப்பு ஊசியை மூக்கு வழியாக செலுத்தும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.

இந்தியாவில் மேலும் 2 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசியும் பரிசோதனையில் உள்ளது. தற்போது 7 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

ஊரடங்கில் மாநில அரசு தளர்வு கொடுக்கும் போது, மத்திய அரசு வழிகாட்டுதல்களை கொடுக்கிறது – இவ்வாறு இன்று மோடி உரையாற்றினார்.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் எத்தனை பேர்.? விவரம் கேட்கும் மத்திய அரசு

Admin

ஒரு நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா!: உச்சபட்ச பாதிப்பில் இந்தியா!

ராஜேந்திர பாலாஜி கம்பி எண்ணுவது உறுதி- அமைச்சர் நாசர்

Admin

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இது வரை ரூ.238 கோடி செலவு: மத்திய அரசு தகவல்!

Admin

தேர்தல் விளம்பரங்கள்: சமூக ஊடகங்களுக்கு என்ன நிபந்தனை?

Pamban Mu Prasanth

கொரோனா வார்டில் செவிலியரிடம் அத்துமீறிய வாலிபர் … ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

திமிருக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது.. ராகுல் காந்திக்கு ஹர்ஷவர்தன் ட்வீட்

Admin

அதிமுக பிரமுகர் வெற்றிவேலின் தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிம புதுப்பித்தலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

Admin

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடியுடன் முதல்வர் எயூரப்பா சந்திப்பு

Admin

Leave a Comment