பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

சர்வதேச தாய்மொழிகள் நாள்
SHARE

உலகம் பிறந்ததும் உடன்பிறந்த மற்றொன்று ஓசை என்பார்கள். இன்று வரைக்கும் குழந்தை பிறந்ததும் கூடவே பிறக்கிற ஓசைதான் இதற்குச் சான்று. அதன்பிறகு இடத்தையும், சூழலையும், காரணகாரியத் தேவைகளையும் முன்னிட்டு ஓசைகள் வளைந்தன. விளைவு, மொழிகள் பிறந்தன.

இப்படி பிறந்து,இருந்து,திரிந்து,அழிந்து என எல்லாம் போக ஏறக்குறைய 6000க்கும் மேற்பட்ட மொழிகள் உலகெங்கும் பேசப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 21) உலகெங்கும் இருக்கும் ஒவ்வொரு மொழிக்குமான பொதுதினமான உலகத் தாய்மொழிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

எப்படித் தோன்றியது:
பெரும்பாலும் உலகளாவிய தினங்கள் எல்லாம் ஏதாவது பெயர் தெரியாத நாட்டின் அடையாளம் தெரியாத மூலையில் நடைபெற்ற கிளர்ச்சியின் விளைவாகவோ, அதிர்ச்சியின் விளைவாகவோ உருவானவையாக இருக்கும். ஆனால், இந்த தாய்மொழிகள் தினம் உருவாகக் காரணம் இந்தியாதான்.

அது 1952 ஆம் ஆண்டு. பிப்ரவரி 21. அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகரான டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது சலாம், பர்கட், ரபீக், ஜபார் மற்றும் ஷபியூர் ஆகிய நான்கு மாணவர்கள் உயிர் நீத்தனர்.
அந்த மாணவர்களின் நினைவாகத்தான் இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 21ஆம் தேதியை உலகத் தாய்மொழிகள் தினமாக, ஐ.நா.வின் பண்பாடு சார் அமைப்பான யுனெஸ்கோ அமைப்பு 1999ஆம் ஆண்டு அறிவித்தது. அதற்கு அடுத்த ஆண்டான, 2000ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 21 ஆம் தேதி சர்வதேசத் தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

ஆனால், ஐ.நா.பொது சபையால் 2007ஆம் ஆண்டுதான் அதிகாரப்பூர்வமாகத் தீர்மானம் இயற்றப்பட்டது என்பது இதில் தனிக்கதை.

எல்லோருக்கும் தத்தமது தாய்மொழிகளைக் கொண்டாட இருக்கும் உரிமையை இந்த நாள் நினைவூட்டுகிறது. அதே சமயம் அதை முன்னிட்டு இன்னொரு மொழியை இழிவு செய்வதற்கான உரிமை இல்லை என்பதையும் நாம் நினைவு கொள்ள வேண்டும்.


மொழிகளுக்கு முடிவே இல்லை:

மொழிக்கு மொழி மாறும் நெழிவு சுழிவுகளை இழிவாகக் கிண்டல் செய்யும் மலினமான போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், புதிய புதிய மொழிகள் உருவாவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் திருப்பூர் அருகே உள்ள ஆனைகட்டி என்னும் ஊரில் வாழ்ந்த தாசனூரு நாராயணன் என்பவர் ஆதன் என்ற புதிய மொழியை உருவாக்கி அதில் ஒரு நாவலையும் எழுதி உள்ளார். ஏறக்குறைய 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அந்த மொழியை பயிற்றுவித்தும் உள்ளார்.

அதே போல, அந்தமான் தீவுகளில் கடைசி மனுஷி ஒருத்தி பேசிக்கொண்டிருந்த ’போஅ’ எனும் மொழியை, ஆராய்ச்சி என்ற பெயரில் அழைத்து வந்து கவனக்குறைவால் கண்முன்பாகவே இல்லாமல் ஆக்கியதும் நடந்திருக்கிறது.

அவரவர் தாய்மொழியைக் கொண்டாடுதல் என்பதற்குப் பின்னே, அடுத்த தலைமுறைக்கு மொழியைக் கொண்டாடுவதில் இருக்கும் மகிழ்ச்சியை உணரவைத்தல் என்ற நோக்கம் உறைந்திருப்பது இந்த நாளில் உணர வேண்டிய அம்சம்.

உலகெங்கும் இருக்கும் 6000க்கும் மேற்பட்ட மொழிகளில் 43% மொழிகளில் அழியும் நிலையில் உள்ளன என்பதும், இந்த 6000 இல் 2000க்கும் அதிகமான மொழிகள் 100க்கும் குறைவான பேரால் மட்டுமே பேசப்படுகின்றன என்பதும் இந்த நாளில் கவனிக்கப்பட வேண்டியது. இன்னும் எண்ணிக்கைக்குள்ளும் வராத மொழிகள் உட்பட, உலகெங்கும் உள்ள எல்லா மொழிக் குடும்பங்களுக்கும் மெய்யெழுத்து சார்பாக உலகத் தாய்மொழிகள் தின வாழ்த்துகள்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

“தெய்வம் நின்று கொல்லும்” – கே.டி.ராகவன் விவகாரத்தில் கடுப்பான காயத்ரி ரகுராம்

Admin

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு லட்சம் நிவாரண நிதி: அமெரிக்கா அளிக்க உள்ளது

Admin

என்ன மத்திய அமைச்சரவையில் 42% அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

எங்கே செல்லும் இந்தப் பாதை? – அக்னிபாத் கிளப்பும் கேள்விகள்…

மீண்டும் சைக்கிளிங் தொடங்கிய ஸ்டாலின்!

Admin

ஒரு நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா!: உச்சபட்ச பாதிப்பில் இந்தியா!

கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் :பாதிப்பு எண்ணிக்கை15ஆக உயர்வு!

Admin

தோல்வியும் இல்லை… விக்கெட்டும் இல்லை… தொடர் வெற்றியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

Leave a Comment