பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்… பாஜக சார்பில் போலீசில் புகார்

SHARE

இந்து கலாச்சாரத்துக்கு எதிரான பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என மயிலாடுதுறை பாஜக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வழக்கம்போல எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. அந்த வகையில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாஜக நகர தலைவர் மோடி கண்ணன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி இந்து கலாச்சாரத்துக்கு எதிராகவும், நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும், பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா 3வது அலை தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்களை திறக்கவும், விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தேவையற்றது.இதற்காக 500க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடுகின்றனர்.

கொரோனா காலத்தில் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: நாளை முக்கிய ஆலோசனை

பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார் : கடுப்பான கே.எஸ். அழகிரி!

Admin

சவுக்கு சங்கர் விபத்தில் இறந்தாரா?…கடைசியா என்னையே கண்டெண்ட் ஆக்கீட்டீங்களேடா!

Admin

பப்ஜி மதன் வழக்கு நாளை மீண்டும் விசாரணை!

Admin

ஏசி வசதியோடு இயங்கும் அரசு பள்ளி… தலைமை ஆசிரியையின் முயற்சிக்கு குவியும் பாராட்டு

Admin

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

விவிபேட் வேண்டாம்… ஒரே கட்டமாக தேர்தல் நடத்துங்கள்: தமிழக அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

Pamban Mu Prasanth

சேலத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Admin

தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

Admin

Leave a Comment