ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

SHARE

கொரோனா நிவாரணத் தொகையாக குடும்பங்களுக்கு தலா ரூ.4000 தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முதல் தவணை ரூ.2000 வழங்கும் பணிகள் இன்று தொடங்குகின்றன.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது கொரோனா நிவாரண நிதியாக பொதுமக்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்று திமுக அறிவித்து இருந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் அந்த வாக்குறுதியை திட்டமாக்கினார்.

அதன் அடிப்படையில் தமிழக மக்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணையாக ரூ.2000 வழங்கும் பணிகளை இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார். இதன்படி குடும்ப அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு முதலில் டோக்கன்கள் வழங்கப்படும். அந்த டோக்கன்களை நியாயவிலைக் கடைகளில் கொடுத்து ரூ.2000 பெற்றுக் கொள்ளலாம். 

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இந்த டோக்கன்களில் நிவாரணம் தொகை வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்தத் தொகை 500 ரூபாய் நோட்டுகளாகவோ 2000 ரூபாய் நோட்டாகவோ வழங்கப்படும். தமிழகத்தில் குடும்ப அட்டைகள் வைத்துள்ள 2 கோடியே 7 லட்சம் பேர் இதனால் பயனடைய உள்ளார்கள்.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சைக்கிள் திருட்டு குறித்து முதல்வருக்கு பறந்த புகார் – உடனடியாக மீட்பு

Admin

பேரவை அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் – சரியான நடவடிக்கையா?.

இன்று முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!!

Admin

பேரணிலாம் போக வேண்டாம்… ஊருக்கு போங்க – பிரதமருக்கு அனுமதி மறுத்த மாநகரக் காவல்துறை

Admin

11 மாவட்டங்களில்மாணவர் சேர்க்கை நடைபெறாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

Admin

சேலத்தில் கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

எலான் மஸ்க் செய்த வேலையால் தமிழக நிறுவனத்திற்கு ரூ. 7 கோடி லாபம்?

Admin

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களும் பணியைத் தொடங்கலாம்: தமிழக அரசு

ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு வரலாம்!: சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை!.

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது: கமல்ஹாசன்

Admin

பூமி பூஜையில் செருப்பு காலுடன் உதயநிதி – கிளம்பும் எதிர்ப்பு

Admin

பாலியல் வன்கொடுமை குற்றவாளியை சுட்டுப்பிடித்த சென்னை போலிஸ் – நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

Leave a Comment