மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

SHARE

தனது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக டுவிட்டரில் நடிகர் மாதவன் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்திய ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தழுவி ’ராக்கெட்ரி நம்பி விளைவு’ என்ற திரைப்படத்தை நடிகர் மாதவன் இயக்கி, நடித்து உள்ளார். இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்காகப் பலரும் நடிகர் மாதவனுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தனது டுவிட்டர் கணக்கில் ரசிகர்களுக்கு பதில் அளித்த மாதவன், வழக்கமாக தனிப்பட்டமுறையில் நன்றி சொல்லும் தன்னால் இப்போது அப்படிச் செய்ய இயலவில்லை என்றும், ஏப்ரல் 1ஆம் தேதி மாலை தனது குடும்பத்தில் உள்ள 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்.

இந்தியத் திரையுலகில் அமீர்கான், ரன்பீர்கபூர், சூர்யா உள்ளிட்ட பலரும் கொரோனாவுக்கு ஆளான நிலையில், மாதவனின் இந்தப் பதிவு திரைப்பட ரசிகர்களை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை… புதிய டிஜிபி சைலேந்திரபாபு

Admin

ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் இன்று முதல் மாற்றம்..!

Admin

கொரோனா மருத்துவக் கருவிகள்- ஐ.நா.வின் உதவியை நிராகரித்த இந்தியா!

1 லட்சம் முன் களப் பணியாளர்களை தயார் செய்ய பிரதமரின் புதிய திட்டம்

Admin

சிக்கிய முன்னாள் அமைச்சர்.. வங்கிக் கணக்கு முடக்கப்படுமா?

Admin

அனைத்து உலோகங்களிலும் காசுகள்! – இராஜராஜனின் சாதனை!. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு?

Admin

ஒரே சளி தொல்லை டாக்டர்… தனி ஆளாய் மருத்துவமனைக்கு சென்ற 3 வயது சிறுமி

Admin

கிரிக்கெட் விளையாடும் முதலமைச்சரின் புகைப்படம் வைரல்..!!

Admin

வீட்டிலிருந்து வெளிவர தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: சவுதி அரசு

Leave a Comment