கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

SHARE

உண்மையான ஐரோப்பியத் தமிழறிஞரின் நினைவுநாள் பகிர்வோம்!.

தமிழ் என்பது தனி மொழி, அது சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்தது அல்ல. தெலுங்கு, துளு உள்ளிட்ட மொழிகள் தமிழில் இருந்து பிறந்தன – என்று முதன் முதலில் சொன்ன அறிஞர் கால்டுவெல் அல்ல எல்லீஸ் அவர்கள்!.

பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் தமிழ்ப் பற்றின் காரணமாகத் தனது பெயரை தமிழ் இலக்கணப்படி எல்லீசன் என்று மாற்றிப் பயன்படுத்தினார்.

திருவள்ளுவருக்கு தங்கக் காசு வெளியிட்டார். திருக்குறளுக்கு மிக அதிக மேற்கோள் நூல்களுடன் உரை எழுதினார். பரிமேலழகரின் உரை ஆரியச் சார்பானது என்பதைத் தனது உரையில் சான்றுகளுடன் சுட்டிக் காட்டினார். தன் கல்வெட்டுகளில் கூட திருக்குறள் வரிகளை மேற்கோள் காட்டினார்.

தமிழ்த் தாகம் தணியாமல் பதிப்பிக்க, படிக்க தமிழ்ச் சுவடிகளைத் தேடி அலைந்தார். அந்தப் பயணத்தில் ஒருநாள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டபோது அவருக்கு 42 வயது. அவர் கொல்லப்பட்ட பின்பு அவர் பல அறைகள் நிறைய சேகரித்த சுவடிகள் பதிப்பிக்கப்படாமல் அழிந்தன. தன் தத்துப் பிள்ளையை தமிழ்த்தாய் இழந்த அந்த நாள் மார்ச் 9, 1819.

தமிழ்மொழிக் குடும்பத்தை திராவிடமாக்கிய கால்டுவெல்லை அறிந்த தமிழர்களுக்கு இவரைத் தெரியாது, இவரது நினைவுநாள் தெரியாது. சென்னையில் உள்ள எல்லீஸ் சாலை இவர் நினைவாக பெயர் சூட்டப்பட்டது என்பதுகூடத் தெரியாது. அதுதான் திராவிடத்தின் சாதனை.

மானமும் அறமும் உள்ள தமிழர்கள் எல்லீசனை நினைவு கூர்வோம்.

– இரா.மன்னர் மன்னன்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ்நாடு பட்ஜெட் 2024: மதுரைக்கு மட்டும் 20 அறிவிப்புகளா! என்னென்ன அவை?

Pamban Mu Prasanth

சொன்னதை செய்தார் தங்கம் தென்னரசு!. நியாயமான விலையில் சிமெண்ட் விற்கப்படும் என உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு.

Admin

ஆன்லைனில் கேம் விளையாடுபவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Admin

மத்திய அமைச்சரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் தான் காரணம்..

Admin

அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

Admin

சாத்தான்குளம் வழக்கு…காவலர்களுக்கு ஜாமீன் தர உச்சநீதிமன்றம் மறுப்பு…

Admin

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்… குடியரசுத் தலைவர் அறிவிப்பு

Admin

துரோகம் என்பதை அன்றே குறிப்பிட்டிருந்தார் கமல்ஹாசன்: மகேந்திரன், பத்மபிரியாவை விளாசும் மக்கள் நீதி மய்யம்!

Admin

சிற்ப இலக்கணம் தொடர் – நாளை முதல் வெளியாகின்றது.

ஆடி அமாவாசையும் முன்னோர் வழிபாடும்…

2 ஆவது நாளாக போராட்டம்… ஆசிரியர்களை மிரட்டும் பெரியார் பல்கலைக்கழகம்… முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

ஆட்சி நடத்த முடியல அதான் வெள்ளை அறிக்கை: முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கருத்து

Admin

Leave a Comment