குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு… ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது

SHARE

கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலையில் சிக்கி தவிக்கின்றனர். 3 ஆம் அலை 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் முன்றாம் அலையை எதிர்கொள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உடல் நிலையை சுயபரிசோதனை செய்து கொள்ள, விரல்களில் ஆக்சிமீட்டரை பொறுத்தி 6 நிமிடங்கள் நடை பயிற்சி மேற்கொள்ள வைக்க வேண்டும்.

இதில் குழந்தைகளின் ஆக்சிஜன் அளவு அதீதமாக குறையும் பட்சத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்க கூடாது என்றும் கொரோனா தொற்றால் கடுமையான மற்றும் மோசமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே ஸ்டெராய்டு மருந்துகளை சிகிச்சைக்காக பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி… ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி!.

சே.கஸ்தூரிபாய்

வருமானவரி செலுத்த முடியவில்லை… வட்டிமேல் வட்டி போடுகிறார்கள் – கங்கனா ரனாவத் வேதனை

Admin

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

கொரோனா வந்தாலும் மகிழ்ச்சி போகாது: 95 வயது பாட்டியின் வைரல் நடனம்!.

கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா..? மத்திய அரசு விளக்கம்

Admin

டீசல் விலை ரூ.100 ஆக உயர்வு… வாகன ஓட்டிகள் அதிருப்தி…

Admin

நீச்சல் உடையில் எங்கள் கொடியா ? அத்துமீறிய அமேசான் .. கொந்தளித்த கர்நாடக அரசு!

Admin

இந்தியாவுக்கு தேசிய மொழியே இல்லை… அதிர வைத்த மத்திய அரசு

Admin

தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Pamban Mu Prasanth

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

மார்ச் 31 – ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

Admin

குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

Leave a Comment