கமலா ஹாரீஸுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

SHARE

இந்தியாவுக்கு முதற்கட்டமாக இரண்டரை கோடி தடுப்பூசிகளை வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது இதையடுத்து நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி. 

அமெரிக்காவில், பெரும்பான்மையானோருக்கு தடுப்பூசி போட்டாகிவிட்ட நிலையில் மிகுதியாக இருக்கும் தடுப்பூசிகளை தேவை உள்ள உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க போவதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்திருந்தார். அதன்படி, தங்கள் வசம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை, தடுப்பூசி கிடைக்காமல் திணறி வரும் நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. 

இதையடுத்து அமெரிக்காவில் தடுப்பூசி தொகுப்பில் இருந்து குறிப்பிட்ட பகுதியை பெறுவதற்காக இந்தியா முயற்சி மேற்கொண்டது. சமீபத்தில் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக அமெரிக்க அரசை வலியுறுத்தியிருந்தார். 

இந்நிலையில் முதல் கட்டமாக 6 கோடி கொரோனா தடுப்பூசிகளை தேவை உள்ள நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க போவதாக அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார். இதில் ஒரு பகுதியாக இரண்டரை கோடி தடுப்பூசிகளை இந்தியாவுக்கு வழங்க போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து, பிரதமர் மோடியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியாவுக்கு தடுப்பூசி விநியோகம் செய்வதாக உறுதி அளித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் பரவலை ஒழிக்க, அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொது சுகாதார தேவைகள் குறித்தும் மோடியிடம், கமலா ஹாரிஸ் எடுத்துரைத்தார்.

இதேபோல் மெக்ஸிகோ அதிபர்,  குவாத்தமாலா அதிபர், கரீபியன் சமூகத்தின் தலைவர் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய துணை அதிபர் கமலா ஹாரீஸ் தடுப்பூசி பகிர்வு குறித்து உறுதியளித்துள்ளார்.   

அமெரிக்காவின் உதவிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர் மோடியை சந்திக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

Admin

துணை ஜனாதிபதி கணக்கில் ப்ளூ டிக்கினை நீக்கிய டுவிட்டர்.. காரணம் என்ன?

Admin

மார்ச் 31 – ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

Admin

ஊக்கமருந்து சோதனையில் சீனா வீராங்கனை :மீராபாய் சானுக்கு தங்கம் கிடைக்குமா?

Admin

பொழுதுபோக்குக்காக பறப்பவர்களை விண்வெளி வீரர்கள் என கூறமுடியாது :கடுப்பான அமெரிக்கா!

Admin

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகின்றாரா ஜாக்கி சான்?

Admin

கர்நாடக பழங்குடியினரை நடுவழியில் இறக்கி விட்ட லாரி ஓட்டுநர்… கைகொடுத்த தமிழக மக்கள்…

Admin

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

அங்கு கிருஷ்ணன் கோயிலே கிடையாது… கடலுக்கடியில் மோடி செய்தவை எல்லாம் தேர்தல் ஸ்டண்ட்டா?

Pamban Mu Prasanth

சமூக ஊடகங்களை வைத்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்க கூடாது- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Admin

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா : பதட்டத்தில் ஒலிம்பிக் போட்டி!

Admin

Leave a Comment