பேரவை அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் – சரியான நடவடிக்கையா?.

SHARE

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதலாவது சட்டப் பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குவதால் கலைவாணர் அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இட நெருக்கடி காரணமாக தமிழக அரசின் சட்டப் பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குகின்றது. அதனால் நேற்றே கலைவாணர் அரங்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்ற அவரது முழக்கத்தோடு வைக்கப்பட்டது.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் அரசியல் நாகரிகம் வளர்ந்து வருவதாக மக்கள் பாராட்டி வருகின்றனர். அதே சமயம் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவாரின் புகைப்படத்தை பேரவையில் வைப்பதா? – என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாகக் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலிதாவின் உருவப்படம் முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. இதனை அப்போதைய பேரவைத் தலைவர் தனபால் திறந்து வைத்தார். தமிழக சட்டப் பேரவையில் 1948ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் படம் திறந்து வைக்கப்பட்டது, பின்னர் மறைந்த முதல்வர்களின் புகைப்படங்கள் திறக்கப்பட்டன. இந்த வரிசையில் ஜெயலலிதாவின் படம் 11ஆவது படம் ஆகும். இந்நிலையில் சட்டப் பேரவையில் வைக்கப்பட்ட படம் சட்ட மன்றக் கூட்டத் தொடரில் அவரது புகைப்படம் இடம்பெறுவது முறையானது ஆகும். இதனை அறிந்தே ஆளும் திமுக அரசு இந்த மரியாதையை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கி உள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது திமுகவை சேர்ந்த இருவர் அம்மா உணவகத்தின் பெயரை நீக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பின்னர் அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து நீக்கவும் பட்டனர். இந்நிலையில் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்ததன் மூலம் ஜெயலலிதா குறித்த தங்கள் நிலைப்பாட்டை திமுக பொதுவெளியில் தெளிவுபடுத்தியுள்ளது.

– பிரியா வேலு


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுகவின் மகளிரணி செயலாளராக பா. வளர்மதி நியமனம்

Admin

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலி : வேலூர் இப்ராஹிம்

Admin

தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் தான் உள்ளது – அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

Admin

’இதெல்லாம் தேவையில்லாத ஆணி’: திருமாவை எதிர்க்கும் முகநூல் வாசிகள்

Admin

அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகும்.. ஓபிஎஸ் அறிக்கை

Admin

நாளை முதல் அருங்காட்சியகங்கள் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம்… தொல்லியல் துறை அறிவிப்பு!

Admin

ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

பெட்ரோல், டீசல் வரி குறைப்பது தற்போது சாத்தியம் இல்லை: பி.டி.ஆர்

Admin

ஐபிஎல்-லில் தனது முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே. வெற்றியைத் தவறவிட்டது!

சே.கஸ்தூரிபாய்

நீட் தேர்வு பாதிப்பு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

Admin

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

Leave a Comment