‘மு.க.ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்

SHARE

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த ஜர்னி ஆஃப் எ சிவிலிசேஷன் புத்தகம் இணையத்தில் இளைஞர்கள் மத்தியில் வைரலானது அப்படி அந்த புத்தகத்தில் என்ன உள்ளது ?காண்போம் இந்த தொகுப்பில்.

ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதிய ஜர்னி ஆஃப் எ சிவிலிசேஷன் புத்தகம் திராவிடத்தின் பல்வேறு சிறப்புகளை சொல்லும் புத்தகமாகும்.இந்த புத்தகம் 2019ம் ஆண்டு வெளியான போதே பெரும் வரவேற்பை பெற்றது. சோனியா காந்திக்கு , மு..க.ஸ்டாலின் பரிசளித்ததன் வாயிலாக மீண்டும் இந்த புத்தகம் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது.

வரலாற்று ஆய்வாளரான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் இப்போது ஒடிசா முதலமைச்சரின் தலைமை ஆலோசகராக இருக்கிறார்.

பல வருடங்கள் நீண்ட ஆய்வுக்குப்பிறகு இந்த புத்தகத்தை எழுதினார். புத்தகத்தின் முக்கிய கருத்து என்னவென்றால் இந்திய வரலாற்றில் சிந்து சமவெளி நாகரிகம் பற்றியும் அந்த மக்கள் தங்களின் கடைசி காலகட்டத்தில் எங்கு சென்றனர் என்பது குறித்து விவரிக்கிறது.

இரண்டாவதாக சங்க கால இலக்கிய தோற்றம் குறித்தும் அவற்றை எழுதிய ஆசிரியர்கள் பற்றியும் விவரிக்கும் இந்த புத்தகம் 17 அத்தியாயங்களுடன், மூன்று பிரிவுகளாக உள்ளன.

டிஎன்ஏவின் அடிப்படை, இடப்பெயர்வுகள், இடத்தின் பெயர் மற்றும் திராவிட மக்களின் வாழ்க்கை முறை குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது

தமிழரின் மரபினை மீண்டும் பறை சாற்றிய ஆதிச்ச நல்லூர் வரையில் வைகை வழியே பானை பாதை தொடர்புகளை இந்த புத்தகம் விளக்குகின்றது.

மொகஞ்சதோராவில் ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது கிடைத்த காளை மாடு முத்திரையும் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கும் தொடர்பு உள்ளதை பாலகிருஷ்ணன் தனது ஜர்னி ஆஃப் எ சிவிலிசேஷன் கூறியுள்ளார்.

திராவிடர்கள், அதாவது நம் தமிழர்களின்பூர்வ குடி சிறப்புகளை கூறும் இந்த புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் இப்போது சோனியா காந்திக்கு பரிசாகக் கொடுத்துள்ளார் .

பதவியேற்றதும் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘Belongs to the Dravidian stock’ என்று சேர்த்துக்கொண்ட மு.க.ஸ்டாலின், தற்போது புத்தகத்தை பரிசளித்தன் மூலம் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது ஜர்னி ஆஃப் எ சிவிலிசேஷன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டி.வி.இல்லாத வீட்டில் இருந்து கூகுளின் தலைமைப் பதவிக்கு… சுந்தர் பிச்சையின் தன்னம்பிக்கை வரலாறு!

Admin

தனித்தமிழர்நாடு: மண்மீட்புக்கான வரைப‌டங்கள், சான்றுகள் மற்றும் சிந்தனைகளின் தொகுப்பு – நூல் அறிமுகம்

இரா.மன்னர் மன்னன்

கபிலன் வைரமுத்து எழுதிய மெய் நிகரி நாவல் – மதிப்புரை

மனிதன் விளைவித்த முதல் பயிர் எது?

தொல்லியல் அறிஞர்களை ஈர்க்கும் மீனவர் வீடு – யார் இந்த பிஸ்வஜித் சாஹு?

Pamban Mu Prasanth

தமிழ்த்தேசியத்துக்கான பெருந்திட்டம் – நூல் மதிப்புரை:

அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

இரா.மன்னர் மன்னன்

இதுதான் STING OPERATION ஆ? மதன் செய்த வேலைக்கு பெயர் என்ன?

Admin

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

சு.சேதுராமலிங்கம் எழுதிய பிரபாகரன் சட்டகம் – நூல் அறிமுகம்

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ – நூல் மதிப்புரை

வெளியானது மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூல்…

Leave a Comment