குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

SHARE

குஜராத்தில் கடும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கும் டவ்தே புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, 1000 கோடி ரூபாய் நிவாரண உதவியை அறிவித்து உள்ளார்.

குஜராத்தில் நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்த டவ்தே  புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் மற்றும் வெள்ளத்துக்கு பலர் பலியாகி உள்ளதாகவும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

ராணுவத்தினர் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றி, போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் பணியிலும், அரசு அதிகாரிகள் புயல் சேத விபரங்களை கணக்கெடுக்கும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக, பிரதமர் மோடி இன்று காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் குஜராத் மாநிலம் பாவ்நகர் சென்ற பின்னர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி ஆய்வு செய்தார். பிரதமருடன் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு முடிந்தபோது குஜராத்துக்கு இடைக்கால நிவாரணமாக 1000 கோடி ரூபாயை பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் டவ்-தே புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை நிலவரப்படி குஜராத்தில் புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது.

  • கெளசல்யா அருண்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் 40 கோடி பேரை பாகுபலியாக மாற்றிய தடுப்பூசி.. பிரதமர் மோடி

Admin

கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதா? – இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

இந்த கொரோனா காலத்திலும் அதிகார வெறியா? பாஜக மீது சீறும் உத்தவ் தாக்ரே

Admin

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்து… காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்…

Admin

Factcheck: அதிமுகவால் தான் சிஏஏ சட்டம் நிறைவேறியதா? உண்மை என்ன தெரியுமா?

Admin

என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

Admin

ஒரே உதவி எண்: ரயில்வே அறிவிப்பு!

Admin

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்… குடியரசுத் தலைவர் அறிவிப்பு

Admin

இங்கிலாந்து பிரதமரின் மாமியார்… இந்தியாவின் யார் இந்த சுதா மூர்த்தி?

Admin

பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா..!!

Admin

பெகாசஸ் விவகாரம் ..பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் !

Admin

Leave a Comment