Factcheck: அதிமுகவால் தான் சிஏஏ சட்டம் நிறைவேறியதா? உண்மை என்ன தெரியுமா?

SHARE

குடியுரிமை திருத்தச் சட்டம் ( சி.ஏ.ஏ) நிறைவேறியதற்கு அதிமுகதான் காரணம் என்று நாடு முழுக்க ஒரு செய்தி பரவி வருகிறது. தொடர்ச்சியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிய திமுகவினர் இதை தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

முதலில் பரப்படும் செய்தி என்ன என்பதை புரிந்து கொள்வோம். மொத்தம் பதிவான வாக்குகளில் ஆதரவாக 125, எதிர்ப்பாக 105 வாக்குகள். இதில் அதிமுகவின் 10 வாக்குகள் ஆதரவாக பதிவானதால் தான் இந்த சட்டம் நிறைவேறியது என்று செய்தி பரவி வருகிறது.

இந்த செய்தியின் பின்னணியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் பலரும், அதிமுகதான் இதற்கு காரணம் என்று பேசி வருகின்றனர்.

உண்மை என்ன?

எளிமையாக புரிந்து கொள்வோம். இந்திய மாநிலங்களவையில் 245 இடங்கள் உள்ளன. இதில் 50%க்கு மேல் வாக்குகள் பெற்றால் ஒரு மசோதா, சட்டாமாக நிறைவேற்றப்படுவதற்காக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அல்லது, அன்றைய தினம் அவையில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து வாக்குகளின் எண்ணிக்கை மாறுபடும். அதாவது 122.5 பேர் என்பது நிலையான எண்னிக்கை அல்ல, குறையலாம்.

குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களையில் விவாதத்துக்கு வந்த அன்று நடந்தது இதுதான். மொத்தம் பதிவான வாக்குகளே 224 தான். எனில் 112 வாக்குகள் பெற்றாலே ஒரு மசோதா நிறைவேற்றப்படலாம்.

மாநிலங்களவையில் நடந்தது என்ன?

அன்று, அதிமுகவுக்கு ராஜ்யசபாவில் இருந்த இடங்கள் 10.

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு  ஆதரவாக இருந்த வாக்குகள் 125. எதிர்ப்பாக விழுந்த வாக்குகள் 99. இதுதான் உண்மையான தகவல்.

எதிர்ப்பாக விழுந்த வாக்குகள் 105 என்பது உண்மையல்ல. அது மக்களவையில் விழுந்த வாக்குகளின் எண்ணிக்கை. அதைத்தான் சில ஊடகங்கள் தவறாக வெளியிட்டு விட்டன.

இப்போது, கொஞ்சம் சிற்றறிவு கொண்டு சிந்தித்து பார்த்தால், நமக்கே புலப்படும். அதிமுகவின் 10 வாக்குகள் ஆதரவு  அளிக்காமல், எதிர்த்து வாக்களித்ததாக வைத்துக் கொள்வோம்.

ஏற்கனவே, எதிர்ப்பாக பதிவான 99 வாக்குகளுடன் 10 வாக்குகள் சேர்ந்தாலும் 109 வாக்குகள்தான் எதிர்ப்பாக இருக்கும். அப்போதும் 115 வாக்குகள் ஆதரவாக பதிவாகி மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறியிருக்கும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜூன் 4 ஆம் தேதி ரிசல்ட் : தமிழ்நாட்டுக்கு தேர்தல் எப்போது? வெளியானது தேர்தல் தேதி

Admin

தற்கொலைக்கு முயன்ற நபர்… காப்பாற்றிய பேஸ்புக்…

Admin

டெல்லி கேப்பிடல்ஸ்சை சிதறடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

சே.கஸ்தூரிபாய்

சிக்கிய முன்னாள் அமைச்சர்.. வங்கிக் கணக்கு முடக்கப்படுமா?

Admin

இந்த பட்ஜெட் டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் பட்ஜெட் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Admin

தந்தை திட்டியதால் பிரதமர் மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த இளைஞர்

Admin

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்

Admin

இந்த கொரோனா காலத்திலும் அதிகார வெறியா? பாஜக மீது சீறும் உத்தவ் தாக்ரே

Admin

மீனவர்களிடையே மோதல்.. 3 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு

Admin

ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ் ரீடெய்ல்..!!

Admin

இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரை!

Admin

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Admin

Leave a Comment