Factcheck: அதிமுகவால் தான் சிஏஏ சட்டம் நிறைவேறியதா? உண்மை என்ன தெரியுமா?

SHARE

குடியுரிமை திருத்தச் சட்டம் ( சி.ஏ.ஏ) நிறைவேறியதற்கு அதிமுகதான் காரணம் என்று நாடு முழுக்க ஒரு செய்தி பரவி வருகிறது. தொடர்ச்சியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிய திமுகவினர் இதை தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

முதலில் பரப்படும் செய்தி என்ன என்பதை புரிந்து கொள்வோம். மொத்தம் பதிவான வாக்குகளில் ஆதரவாக 125, எதிர்ப்பாக 105 வாக்குகள். இதில் அதிமுகவின் 10 வாக்குகள் ஆதரவாக பதிவானதால் தான் இந்த சட்டம் நிறைவேறியது என்று செய்தி பரவி வருகிறது.

இந்த செய்தியின் பின்னணியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் பலரும், அதிமுகதான் இதற்கு காரணம் என்று பேசி வருகின்றனர்.

உண்மை என்ன?

எளிமையாக புரிந்து கொள்வோம். இந்திய மாநிலங்களவையில் 245 இடங்கள் உள்ளன. இதில் 50%க்கு மேல் வாக்குகள் பெற்றால் ஒரு மசோதா, சட்டாமாக நிறைவேற்றப்படுவதற்காக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அல்லது, அன்றைய தினம் அவையில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து வாக்குகளின் எண்ணிக்கை மாறுபடும். அதாவது 122.5 பேர் என்பது நிலையான எண்னிக்கை அல்ல, குறையலாம்.

குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களையில் விவாதத்துக்கு வந்த அன்று நடந்தது இதுதான். மொத்தம் பதிவான வாக்குகளே 224 தான். எனில் 112 வாக்குகள் பெற்றாலே ஒரு மசோதா நிறைவேற்றப்படலாம்.

மாநிலங்களவையில் நடந்தது என்ன?

அன்று, அதிமுகவுக்கு ராஜ்யசபாவில் இருந்த இடங்கள் 10.

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு  ஆதரவாக இருந்த வாக்குகள் 125. எதிர்ப்பாக விழுந்த வாக்குகள் 99. இதுதான் உண்மையான தகவல்.

எதிர்ப்பாக விழுந்த வாக்குகள் 105 என்பது உண்மையல்ல. அது மக்களவையில் விழுந்த வாக்குகளின் எண்ணிக்கை. அதைத்தான் சில ஊடகங்கள் தவறாக வெளியிட்டு விட்டன.

இப்போது, கொஞ்சம் சிற்றறிவு கொண்டு சிந்தித்து பார்த்தால், நமக்கே புலப்படும். அதிமுகவின் 10 வாக்குகள் ஆதரவு  அளிக்காமல், எதிர்த்து வாக்களித்ததாக வைத்துக் கொள்வோம்.

ஏற்கனவே, எதிர்ப்பாக பதிவான 99 வாக்குகளுடன் 10 வாக்குகள் சேர்ந்தாலும் 109 வாக்குகள்தான் எதிர்ப்பாக இருக்கும். அப்போதும் 115 வாக்குகள் ஆதரவாக பதிவாகி மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறியிருக்கும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று – 236 பேர் உயிரிழப்பு

Admin

“அப்பா அரசியல் ..மகன் விளையாட்டு” – ஆல்ரவுண்டராக கலக்கும் உதயநிதி குடும்பம்

Admin

மார்ச் 31 – ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

Admin

சென்னையில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் செயல்பட புதிய நிபந்தனை

Admin

பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை

Admin

கொரோனா வார்டில் செவிலியரிடம் அத்துமீறிய வாலிபர் … ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

Admin

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி… மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Admin

மணமகனின் நண்பர்கள் கொடுத்த சர்ஃப்ரைஸ் GIFT..கடுப்பான மணமகள்.. வைரலாகும் வீடியோ

Admin

ஒன்றிய அரசு என சொல்வதன் நோக்கம் என்ன? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Admin

நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம் – அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு!

Admin

வன்னியர், சீர்மரபினர் பிரிவினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு…அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Admin

Leave a Comment