மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

SHARE

ஆப்கானிஸ்தான் நடந்துவரும் வன்முறைகளைசேகரிக்க சென்ற இந்திய புகைப்பட செய்தியாளர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலுள்ள மும்பையில் வளர்ந்தவர் டேனி சித்திக் பிரபல செய்தி நிறுவனமான ராய்டர்ஸ் நிறுவனத்தில் புகைப்பட செய்தியாளராக பணிபுரிந்தார்.

இவர் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிய போது மக்கள் சந்தித்த துயரங்களை தனது புகைப்படத்தின் மூலமாக உலகிற்கு தெரிவித்தார்.

குறிப்பாக கங்கை கரைகளில் எரிக்கப்பட்ட பிணங்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.

இதனால் உலக சுகாதார மையம் தொடங்கி அனைத்து சர்வதேச ஊடகத்தின் பர்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பியது .

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான்களினால் நடக்கும் அரசியல் மாற்றங்களை செய்தியாக சேகரிப்பதற்கு அங்கு சென்றுள்ளார் டேனி சித்திக்

அதிலும் குறிப்பாக தாலிபான்கள் கந்தகார் பகுதிகளை கட்டுக்குள் கொண்டு வருவதை மிகவும் நெருக்கமாக படம் பிடித்து உள்ளார்.

அதில் மூன்று நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் பகுதியில் இராணுவத்தின் மீட்பு மிஷன் ஒன்றில் அவர்களோடு கலந்துகொண்டு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் டேனிஷ் சித்திக் இருந்த வாகனம் தாலிபான்களால் தாக்கப்பட்டது மேலும் இதனை தொடர்ந்து ஆப்கான் படைகள் எவ்வாறு செயல்படுகின்றது , என்பதை உலகிற்கு வெளிச்சம் காட்டுவதற்காக உருக்கமான செய்தி ஒன்றை காட்டினார்.

இந்த நிலையில் ஆப்கான் ராணுவத்தின் மீது தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சித்திக் அந்த தாக்குதலில் பலியாகியுள்ளார்.

இந்த சம்பவமானது உலகம் முழுவதும் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Admin

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் புதிய அரசு.!!

Admin

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விடுதலையாகும் வாய்ப்பு!

Admin

வருகிறது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் அனுமதி!

வடக்கு கூட்டணி படையினருடனான சண்டையில் 350 தாலிபான்கள் பலி?

Admin

பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா..!!

Admin

ஆம்புலன்ஸ் சைரன் வேண்டாம்!: மணிப்பூர் அரசு உத்தரவு.

கேஜிஎஃப் – 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Admin

மேதகு – தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டிய பெருமிதம்!

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

Admin

உங்கள் தகவலை பேஸ்புக்கிடம் கொடுக்கமாட்டோம் இறங்கிவந்த வாட்ஸ்அப் !நிறுவனம்

Admin

என்ன நேருவின் படம் இல்லையா ? – கொந்தளித்த காங்கிரஸ்

Admin

Leave a Comment