ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்!

SHARE

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தின்போது இனவெறி தாக்குதல் நிகழ்த்தப்பட்டதால் சக வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிய பரபரப்பு சம்பவம் அரேங்கேறியுள்ளது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளதுஇந்த போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டி பயிற்சி ஆட்டத்தின்போது, ஜெர்மனி அணி ஹோண்டுராஸ் அணியை எதிர்கொண்டது.

ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருந்த போது இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன.அப்போது திடீரென ஜெர்மனி அணி வீரர்கள் திடீரென மைதானத்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் பேசுபொருளானது

இந்த சூழ்நிலையில் தாங்கள் ஏன் வெளியேறினோம் என்பதற்கான காரணத்தை கூறிய ஜெர்மனி அணி கூறியுள்ளது.

அதாவது ,தங்கள் அணியைச் சேர்ந்த ஜோர்டன் டொரனாரிகா என்ற வீரர், இனவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதால் மைதானத்தை விட்டு ஜெர்மனி வீரர்கள் வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ஒலிம்பிக் நிர்வாகத்திற்கு கோரிக்கைகள் வலுத்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த யூரோ கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள், இனவெறி தாக்குதலுக்கு உள்ளானது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

’காற்றோட கலந்தாலும் அதுதான் நம் அடையாளம்…’ – பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சங்ககாலக் கால்வாய் கண்டுபிடிப்பு

Admin

மழையால் ரத்தான டிஎன்பிஎல் முதல் ஆட்டம்: ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

Admin

போட்டியின் போது மழை அதிகமானதால் டேக் ஆஃபில் சிரமப்பட்டேன்: மாரியப்பன் தங்கவேலு

Admin

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக்..!!!

Admin

ஐபிஎல் தொடருக்காக 5வது டெஸ்ட் போட்டி ரத்து ? – சர்ச்சையில் சிக்கிய இந்திய அணி

Admin

இந்தியா – இலங்கை மோதும் ஒருநாள்,டி20 தொடர்: தேதி அறிவிப்பு

Admin

கரும்பூஞ்சை மருந்தை கொள்முதல் செய்ய ரூ. 25 கோடி ஒதுக்கீடு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு

Admin

இந்திய கிரிக்கெட் வீரரை 2வது முறையாக விவாகரத்து செய்த மனைவி…!!

Admin

தலைவரும் நானே… பொதுச் செயலாளரும் நானே… மநீம கட்சியில் மாற்றங்களை அறிவித்த கமல்!

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Admin

கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்… மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Admin

Leave a Comment