கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதா? – இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை

SHARE

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சில் கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம்  அலைகளுக்கு நடுவே உள்ள வேறுபாடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையின் போது அடுத்தடுத்து கொரோனாவின் புதிய அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வாசனையை உணர முடியாமல் போவது, தலைவலி, தொடர் இருமல், மூட்டு வலி ,தொண்டை வலி, தசை வலி, உடல் அசதி போன்ற அறிகுறிகள் பரவலாக ஏற்பட்டன. அயல்நாடுகளில் உடலில் சிகப்புப் புள்ளிகள் தோன்றுவது உள்ளிட்ட இன்னும் சில அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால் இப்படிப்பட்ட அறிகுறிகள் எதுவும் இரண்டாவது அலையில் அதிகம் வெளிப்படவில்லை என்கிறது இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிக்கை. அதே சமயம் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நபர்களில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனால்தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது என்கிறது அறிக்கை.

மூச்சுத் திணறலால் கொரோனாவின் இரண்டாவது அலை முதல் அலையைவிட தீவிரமாக இருப்பது போல தோன்றினாலும், இரண்டாவது அலைக்கும் முதல் அலைக்கும் நடுவில் அதிக வேறுபாடுகள் இல்லை. அதீத உயிர் இழப்புகளையும் இரண்டாவது அலை ஏற்படுத்தவில்லை. எனவே இரண்டாவது அலை அதிக தீவிரத்தன்மையோடு இல்லை என்கிறது இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிக்கை.

கொரோனா வைரஸ் வகைகளையும் அதன் அறிகுறிகளையும்போல, அதன் தாக்கங்களும் மாறுபடக் கூடியது என்பதால் கொரோனா விவகாரத்தில் மக்கள் ஒருபோதும் முன்னெச்சரிக்கையைக் கைவிடாமல் இருப்பது நல்லது.

  • பிரியா வேலு.

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இது வரை ரூ.238 கோடி செலவு: மத்திய அரசு தகவல்!

Admin

ஆம்புலன்ஸ் சைரன் வேண்டாம்!: மணிப்பூர் அரசு உத்தரவு.

குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்து… காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்…

Admin

எம்.எல்.ஏ.வா இருந்தா எனக்கென்ன? – கழிவு நீரில் நடக்க வைத்த மக்கள்

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

ஆபாச வீடியோ வழக்கு… ஷில்பா ஷெட்டியிடம் இன்று மீண்டும் விசாரணை

Admin

இன்று மட்டும் திடீரென்று அதிகரித்த கொரோனா இறப்பு விகிதம் ? காரணம் என்ன?

Admin

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடுவேன்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது

Admin

விதிகளின்படி தான் கைது நடவடிக்கை…ஷில்பா ஷெட்டியின் கணவர் அனுப்பிய மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

Admin

என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

Admin

Leave a Comment