கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதா? – இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை

SHARE

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சில் கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம்  அலைகளுக்கு நடுவே உள்ள வேறுபாடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையின் போது அடுத்தடுத்து கொரோனாவின் புதிய அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வாசனையை உணர முடியாமல் போவது, தலைவலி, தொடர் இருமல், மூட்டு வலி ,தொண்டை வலி, தசை வலி, உடல் அசதி போன்ற அறிகுறிகள் பரவலாக ஏற்பட்டன. அயல்நாடுகளில் உடலில் சிகப்புப் புள்ளிகள் தோன்றுவது உள்ளிட்ட இன்னும் சில அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால் இப்படிப்பட்ட அறிகுறிகள் எதுவும் இரண்டாவது அலையில் அதிகம் வெளிப்படவில்லை என்கிறது இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிக்கை. அதே சமயம் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நபர்களில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனால்தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது என்கிறது அறிக்கை.

மூச்சுத் திணறலால் கொரோனாவின் இரண்டாவது அலை முதல் அலையைவிட தீவிரமாக இருப்பது போல தோன்றினாலும், இரண்டாவது அலைக்கும் முதல் அலைக்கும் நடுவில் அதிக வேறுபாடுகள் இல்லை. அதீத உயிர் இழப்புகளையும் இரண்டாவது அலை ஏற்படுத்தவில்லை. எனவே இரண்டாவது அலை அதிக தீவிரத்தன்மையோடு இல்லை என்கிறது இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிக்கை.

கொரோனா வைரஸ் வகைகளையும் அதன் அறிகுறிகளையும்போல, அதன் தாக்கங்களும் மாறுபடக் கூடியது என்பதால் கொரோனா விவகாரத்தில் மக்கள் ஒருபோதும் முன்னெச்சரிக்கையைக் கைவிடாமல் இருப்பது நல்லது.

  • பிரியா வேலு.

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

கட்சி தொடங்கிய ஆந்திர முதல்வரின் சகோதரி..!

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

இந்தியாவில் சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாகக் காரணமான சுந்தர்லால் பகுகுணா மறைந்தார் – யார் இவர்?

வீட்டிலிருந்து வெளிவர தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: சவுதி அரசு

ஒரே ஒரு வீடியோ தான்.. மீண்டும் மீண்டும் டுவிட்டருக்கு நோட்டீஸ்…

Admin

பூசாரி உரிமையாளராக முடியாது .. கோவில் சொத்து விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு

Admin

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா..? எய்ம்ஸ் தலைமை மருத்துவர் விளக்கம்

Admin

வருகிறது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் அனுமதி!

தமிழகத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம்!

Admin

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

6 முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

Admin

Leave a Comment