ஒரே உதவி எண்: ரயில்வே அறிவிப்பு!

SHARE

நமது நிருபர்

ரயில் பயணம் தொடர்பான விசாரணைகள், புகார்கள் அனைத்துக்கும் ஒரே உதவி எண்ணை இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது.

தற்போது ரயிலில் பயணிப்பவர்கள், பயணம் குறித்த தங்கள் குறைகளை தெரிவிப்பதற்கும், விசாரணைக்கும் பல்வேறு தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இதற்கு பதிலாக அனைத்து குறைகளுக்கும், விசாரணைகளுக்கும் ‘139’ என்ற ஒரே எண்ணைத் தொடர்பு கொள்ளும் வசதி ரயில்வேயில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

இந்த எண்ணுக்கு அழைத்தால் இதில் உள்ள தானியங்கி சேவை மூலம் உரிய நிவாரணத்தைப் பெற இயலும். 139 என்ற எண்ணுக்கு அழைப்பவர்கள் அதன் பின்னர் பிற எண்களை அழுத்தி உரிய சேவைகளைப் பெறலாம். அந்த எண்கள்:

1 என்ற எண்ணை அழுத்தி கால் சென்டர் அலுவலருடன் உடனடியாக நேரடி இணைப்பில் பேசலாம்.

2 என்ற எண்ணை அழுத்தி பி.என்.ஆர். நிலை, ரெயில் வருகை, புறப்பாடு, கட்டணம், டிக்கெட் முன்பதிவு, ரத்து, விழிப்பு அலாரம், உணவு, சக்கர நாற்காலி முன்பதிவு போன்றவை குறித்த விசாரணைகளை மேற்கொள்ளலாம்.

4  என்ற எண்ணை அழுத்தி பொதுப் புகார்களைத் தெரிவிக்கலாம்

5 என்ற எண்ணை அழுத்தி லஞ்சம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம்.

6 என்ற எண்ணை அழுத்தி  பார்சல் மற்றும் சரக்கு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளலாம்.

7 என்ற எண்ணை அழுத்தி ஐ.ஆர்.சி.டி.சி.யால் இயக்கப்படும் ரெயில்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளலாம்.

9 என்ற எண்ணை அழுத்தி ஏற்கனவே அளித்த புகாரின் நிலை குறித்து அறியலாம்.

* என்ற பொத்தானை அழுத்தி கால் சென்டர் அலுவலருடன் நேரடியாக பேசலாம்.

‘ஒரே ரெயில், ஒரே தொலைபேசி உதவி எண் 139’ என்ற பெயரில் இந்த எண்ணுக்கான விளம்பரங்களை ரயில்வேதுறை செய்து வருகின்றது.

#139 #ரயில்வே #உதவிஎண்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…!!

Admin

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது காரணம் என்ன?

Admin

தாயார் மறைவுக்கு உருக்கமாக டிவிட்டரில் பதிவிட்ட தமிழிசை சௌந்தரராஜன்

Admin

பட்டா கத்தியுடனசத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்..

Admin

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

பணிந்தது பேஸ்புக் – இந்தியாவின் புதிய விதிகளை ஏற்பதாக அறிவித்தது!

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

Admin

எங்கள் திட்டத்தில் தமிழக கிராமங்கள் கிடையாது: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

Admin

அங்கு கிருஷ்ணன் கோயிலே கிடையாது… கடலுக்கடியில் மோடி செய்தவை எல்லாம் தேர்தல் ஸ்டண்ட்டா?

Pamban Mu Prasanth

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 27 நாளில் தூக்குதண்டனை

Admin

பஞ்சாப்பை வென்ற டெல்லி… பட்டியலில் முதல் இடம்!.

ராகுல் காந்திக்கு பேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ்.!!

Admin

Leave a Comment