பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா..!!

SHARE

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, கடந்த 2019 ஜூலை 26ம் தேதி பாஜக ஆட்சி அமைத்தது.

எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். இவருக்கு 78 வயதாகி விட்டதால், பாஜக கட்சியின் கொள்கைப்படி பதவியில் இருந்து விலக வேண்டும்.

அவரை பதவி நீக்கம் செய்யும்படி கர்நாடக பாஜக எம்எல்ஏ.க்கள், அமைச்சர்களில் ஒரு பிரிவினர் பல மாதங்களாக போர்க்கொடி தூக்கி வந்தனர்.

இன்றுடன் தனது 2 ஆண்டு ஆட்சி காலத்தை எடியூரப்பா நிறைவு செய்கிறார். இதற்கிடையே கடந்த வாரம் டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். பின்னர், கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டால் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் எடியூரப்பா அறிவித்தார்.

இந்நிலையில், தனது பதவியை ராஜானாமா செய்வதாக அறிவித்துள்ளார் எடியூரப்பா. கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்ற அதேநாளில் தனது ராஜினாமாவை அறிவித்தார் எடியூரப்பா. இவரின் இந்த அறிவிப்பு கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிம புதுப்பித்தலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Admin

பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? : கேள்விகளால் துளைத்தெடுத்த ராகுல் !

Admin

ஆபாச வீடியோ வழக்கு… ஷில்பா ஷெட்டியிடம் இன்று மீண்டும் விசாரணை

Admin

IPL 2024: ஜடேஜாதான் கேப்டனா? hint கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

Admin

22 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது:மத்திய அரசு!

Admin

நீக்கப்படும் எடியூரப்பா… போர்க்கொடி தூக்கும் லிங்காயத்து மடாதிபதிகள்

Admin

வாட்ஸ் -அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்… புதிய வசதி அறிமுகம்

Admin

ஏன் பாஜகவில் சேர்ந்தேன்? காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

Pamban Mu Prasanth

Leave a Comment