பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா..!!

SHARE

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, கடந்த 2019 ஜூலை 26ம் தேதி பாஜக ஆட்சி அமைத்தது.

எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். இவருக்கு 78 வயதாகி விட்டதால், பாஜக கட்சியின் கொள்கைப்படி பதவியில் இருந்து விலக வேண்டும்.

அவரை பதவி நீக்கம் செய்யும்படி கர்நாடக பாஜக எம்எல்ஏ.க்கள், அமைச்சர்களில் ஒரு பிரிவினர் பல மாதங்களாக போர்க்கொடி தூக்கி வந்தனர்.

இன்றுடன் தனது 2 ஆண்டு ஆட்சி காலத்தை எடியூரப்பா நிறைவு செய்கிறார். இதற்கிடையே கடந்த வாரம் டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். பின்னர், கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டால் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் எடியூரப்பா அறிவித்தார்.

இந்நிலையில், தனது பதவியை ராஜானாமா செய்வதாக அறிவித்துள்ளார் எடியூரப்பா. கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்ற அதேநாளில் தனது ராஜினாமாவை அறிவித்தார் எடியூரப்பா. இவரின் இந்த அறிவிப்பு கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது: அமித் ஷா பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்

Nagappan

அனுமதி பெறாமல் விளம்பரம்: செல்போன் செயலிக்கு எதிராக பொங்கிய சசி தரூர்

Admin

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

உச்ச நீதிமன்றத்திற்கு 9 நீதிபதிகள் பரிந்துரை.. நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

Admin

மஞ்சள் பூஞ்சை எனும் மரண தூதுவன்!.

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

Admin

மீண்டும் வெளிநாட்டுப் பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி

Admin

பதஞ்சலிக்கு 5 ஆண்டுகள் வரிச் சலுகை… மத்திய அரசு தாராளம்…

Admin

பணிந்தது பேஸ்புக் – இந்தியாவின் புதிய விதிகளை ஏற்பதாக அறிவித்தது!

ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது “மேஜர் தயான்சந்த் விருது” எனப் பெயர் மாற்றம்..!!

Admin

சர்வதேச யோகா தினம் ..திருக்குறளை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி

Admin

Leave a Comment