டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

SHARE

டெல்லியில் தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டிய நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

டெல்லி

கொரோனானாவின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பூசிகளை  இந்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யதது மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. 

அதற்கு அடிப்படையாக அமைந்தது இந்தியாவில் இருந்து 95 நாடுகளுக்கு 6.63 கோடி தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தளத்தில் அரசே வெளியிட்ட ஒரு பதிவுதான். அதன் படி 

வங்கதேசத்துக்கு103 லட்சம் தடுப்பூசிகள், மொராக்கோ வுக்கு 70லட்சம் தடுப்பூசிகள், பிரிட்டனுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள்,  சவுதி அரேபியாவுக்கு 45 லட்சம் தடுப்பூசிகள், மியான்மருக்கு 37 லட்சம் தடுப்பூசிகள், நேபாளத்துக்கு 24.48 லட்சம் தடுப்பூசிகள் என இந்தியா வாரி வழங்கி உள்ளது.

அந்தத் தடுப்பூசிகளை இந்தியர்களுக்கு அளித்திருந்தால் இந்தியாவில் இரண்டாவது அலை இப்படி கோர தாண்டவம் ஆடி இருக்காது என்றும், கிடைத்த இடைவெளியை இந்தியா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத காரணத்தால்தான் கொரோனா பரவலில் இந்தியா உலகிலேயே இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டதாகவும் அறிவியலாளர்கள் இந்திய அரசை விமர்சித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களும், இந்தியாவில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு எப்படி வந்தது? நம் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்? என்ற கேள்விகளை எழுப்பினர். இதே கேள்விகளை டெல்லியில் சிலர் போஸ்டர்களாகவும் ஒட்டினர். 

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல் துறையினர் விசாரணை நடத்தி போஸ்டர்களை ஒட்டியதாக 25 பேரைக் கைது செய்து, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்தனர்.

உரிய ஆதாரத்தின் அடிப்படையில், மக்கள் நலனுக்காக கேள்விகளைக் கேட்டவர்கள் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் பிரதீப் குமார் யாதவ் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். டெல்லி காவல்துறையினரின் செயலுக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக பிரதமரை விமர்சித்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி “என்னையும் கைது செய்யுங்கள்” (ArrestMeToo)எனத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பலரும் அந்தப் போஸ்டரையும், இது தொடர்பான செய்திகளையும் பதிவிட்டும் பகிர்ந்தும் வருகின்றனர். தமிழகத்தில் நடிகை ஓவியாவும் ‘என்னையும் கைது செய்யுங்கள்’ என்று பதிவிட்டு உள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர், நடிகை ஓவியாவின் முகநூல் பதிவு, டெல்லி போஸ்டரின் தமிழ்ப்படுத்தப்பட்ட போஸ்டர் ஆகிய மூன்றுமே சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஏசி வசதியோடு இயங்கும் அரசு பள்ளி… தலைமை ஆசிரியையின் முயற்சிக்கு குவியும் பாராட்டு

Admin

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: நாளை முக்கிய ஆலோசனை

கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

Admin

கட்டணமின்றி பயணம்… மகளிரை இழிவாக நடத்தக் கூடாது… வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

Admin

“நான் கடன்காரனா இருக்க விரும்பல” – ரூ.2.63 லட்சத்தை செலுத்த வந்த “நவீன காந்தி”

Admin

இறக்குமதி வரியை குறைத்தால் போதும் : மதன்கெளரிக்கும் விளக்கம் கொடுத்த எலான் மஸ்க்

Admin

Justice for Fernanda: கூட்டுப்பாலியல் கொடுமை – தேசிய அவமானத்துக்கு தீர்ப்பு என்ன?

Pamban Mu Prasanth

அடுத்த 5 மாதத்திற்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ இலவசம் – அதிரடி அறிவிப்பு

Admin

காளைகளைக் காப்பாற்றினோம்… யானைகளை?: அழிவின் விளிம்பில் தமிழர் செல்வம்!.

Admin

கருப்புப் பூஞ்சைக்கான மருந்து மே 31 முதல் விநியோகம்!.

இயல்புக்கு நிலைக்குத் திரும்பிய பிரான்ஸ்

இனி அசைவ உணவகங்களிலும் அரசுப் பேருந்தை நிறுத்தலாம்! – உத்தரவைத் திருத்தியது தமிழக அரசு!.

Leave a Comment