”எங்கள் நாடு இந்தியாதான்… நான் மலாலா அல்ல” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை

SHARE

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சங்கல்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசிய பெண் பத்திரிகையாளர் ’யானா மிர்’ ஆற்றிய உரை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நான் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டு பேசத்தொடங்கினார்.

மேலும், பாகிஸ்தானில் பெண் கல்விக்கான கட்டுப்பாடுகளை எதிர்த்ததற்காக 2012-ஆம் ஆண்டு தலிபான்களால் சுடப்பட்டவரும், இளம் வயதிலேயே அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற கல்வி ஆர்வலரான மலாலா யூசுப்சாய் குறித்துதான் யானா மிர் அந்த காணொளியில் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, ” நான் மலாலா யூசுப்சாய் அல்ல. ஏனெனில் நான் என் தாயகமான இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரில் சுதந்திரமாகவும் , பாதுகாப்பாகவும் இருக்கிறேன். ஒருபோதும் ஓடிப்போய் உங்கள் நாட்டில் அடைக்கலமும் தேட மாட்டேன். ஆகவே நான் மலாலா யூசுப்சாய் ஆக முடியாது. முன்னேறி கொண்டிருக்கும் என் தாயகத்தினை ஒடுக்கப்பட்டதாக கூறும் மலாலாவின் கருத்துகளை நான் முற்றிலும் எதிர்க்கிறேன்.

சமூக ஊடகங்களில் மூலம் பரவும் இது போன்ற கருத்துகளை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். அதனை பரப்புகிறவர்கள் எங்கள் நாட்டிற்கு வருவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் அடக்குமுறை குறித்தான கட்டுக்கதைகளை மட்டும் உருவாக்குகிறீர்கள். எனவே இந்தியாவை மதத்தின் அடிப்படையிலே பிரித்து பிரிவினையை ஏற்படுத்தாதீர்கள்.

பத்திரிகையாளர் யானா மிர்

இந்த நிகழ்ச்சியின் மூலம் இங்கிலாந்து , பாகிஸ்தானின் உள்ள அதவாது எங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் சர்வதேச மனித உரிமை மன்றங்களில் எங்களின் நாட்டை இழிவுப்படுத்துவதை நிறுத்துவீர்கள் என்று நம்புகிறேன். எனவே இங்கிலாந்தில் அமர்ந்து கொண்டு இந்தியாவை பிளவுப்படுத்தும் முயற்சியை நிறுத்துங்கள். பயங்கரவாதம் போன்ற காரணங்களால் எங்களின் தாய்மார்கள் தங்களின் மகன்களை இழந்து ஏற்கெனவே வாடுகிறார்கள். ஆகவே எங்கள் காஷ்மீரை நிம்மதியாக வாழவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இவரின் அனல்பறக்கும் பேச்சு பலரின் கவனத்தினை பெற்றுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விரைவில் முதலமைச்சராகிறாரா உதயநிதி? – சட்டப்பேரவையில் அமைச்சர் எவ. வேலு சூசகம்

Admin

எச்.ராஜா மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்படும்.. பாஜக மாநில தலைவர் எல்.முருகன்..சிக்குவாரா எச் ராஜா?

Admin

கொடநாடு வழக்கில் புதிய திருப்பம் … என் தம்பிய திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்!

Admin

மனைவியை கடித்த பக்கத்து வீட்டு நாய்… கடுப்பான கணவன்… துப்பாக்கியால் சுட்டுக்கொலை

போலி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எல்லா வேட்பாளர்களையும் தோற்கடிப்போம்: ஓ.பி.எஸ் சூளுரை

Pamban Mu Prasanth

வேலுமணி வீட்டு ரெய்டு பத்தி நான் எதுவுமே சொல்லவில்லை.. ட்விட்டர் பதிவுக்கு விளக்கமளித்த பாண்டியராஜன்!

Admin

இயல் இசை நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்!

Admin

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழும் இளம்பெண்… கணவன் பிடியிலிருந்து நழுவிய மனைவி

Admin

பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து செய்தி வெளியிட்ட 2 பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்

Admin

ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? வெளியானது தகவல்

Admin

பெட்ரோல் விலை குறைப்பு … நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த பிடிஆர்

Admin

ஜப்பானிய மொழி பெயர்ப்பு நூல் ‘பூனைகள் நகரம்’ – மதிப்புரை.

Leave a Comment