போலி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எல்லா வேட்பாளர்களையும் தோற்கடிப்போம்: ஓ.பி.எஸ் சூளுரை

SHARE

பிப்ரவரி 24ஆம் தேதி அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான செல்வி.ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா தேனியில் கொண்டாடப்பட்டது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் ஆகியோர் பங்குபெற்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைகள் அனல்பறந்து வரும் நிலையில், அதிமுகவை திடுக்கிட வைக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

அவர் பேசியதாவது, “அதிமுக-வின் உண்மை தொண்டர்கள் எல்லோரும் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டும். எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி விதிகளை மீறி போலி பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமி கட்சியை கபளீகரம் செய்தார்.

நான்கரை ஆண்டுகள் கொள்ளையடித்த பணத்தை சுற்றி இருப்பவர்களுக்கு கொடுத்து பொதுச்செயலாளர் பதவியை பெற்றவர். பழனிசாமியை அரசியலை விட்டே விரட்டியடிக்க வேண்டும். அதற்காக தான் டிடிவி அமமுகவை தொடங்கினார்.

நாங்களும் அதே கொள்கையோடு மாவட்டம் வாரியாக கூட்டம் நடத்துகிறோம். எடப்பாடி பழனிசாமி நிறுத்தம் வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்யவோம். அவரை எந்த தேர்தலிலும் வெற்றி அடையவிடமாட்டோம். ராஜ துரோகி பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும்”

File Pic

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் தேர்வில் விலக்கு…புதிய சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல்..

Admin

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை…

Admin

போதை ஏறிபோச்சு.. ஊரடங்கில் ஒயின் குடித்த எலிகள்

Admin

பாஜகவின் எந்த பெண்ணாவது பாலியல் புகார் கொடுத்துள்ளாரா? – குஷ்புவின் பேச்சால் சர்ச்சை

Admin

போராடும் தாயின் நீதிக்கு இது நீண்ட காலம்…அற்புதம்மாளுக்கு கார்த்திக் சுப்புராஜ் ஆதரவு

Admin

‘’மதனுக்கும் அந்த பெண்ணிற்கும் டி.என்.ஏ சோதனை நடத்துங்க ’’ – கொந்தளித்த இந்து முன்னணி தலைவர்!

Admin

எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு!: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!.

Admin

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பா? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

Admin

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 4,867 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Admin

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் .. கொங்கு நாடுவிவகாரம் குறித்து ஜெயக்குமார் கருத்து!

Admin

உள்ளாட்சி தேர்தல் எப்போது ? முதல்வர் ஆலோசனை

Admin

Leave a Comment