பிப்ரவரி 24ஆம் தேதி அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான செல்வி.ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா தேனியில் கொண்டாடப்பட்டது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் ஆகியோர் பங்குபெற்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைகள் அனல்பறந்து வரும் நிலையில், அதிமுகவை திடுக்கிட வைக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அவர் பேசியதாவது, “அதிமுக-வின் உண்மை தொண்டர்கள் எல்லோரும் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டும். எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி விதிகளை மீறி போலி பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமி கட்சியை கபளீகரம் செய்தார்.
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2024/02/image-40-1024x683.png)
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2024/02/image-40-1024x683.png)
நான்கரை ஆண்டுகள் கொள்ளையடித்த பணத்தை சுற்றி இருப்பவர்களுக்கு கொடுத்து பொதுச்செயலாளர் பதவியை பெற்றவர். பழனிசாமியை அரசியலை விட்டே விரட்டியடிக்க வேண்டும். அதற்காக தான் டிடிவி அமமுகவை தொடங்கினார்.
நாங்களும் அதே கொள்கையோடு மாவட்டம் வாரியாக கூட்டம் நடத்துகிறோம். எடப்பாடி பழனிசாமி நிறுத்தம் வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்யவோம். அவரை எந்த தேர்தலிலும் வெற்றி அடையவிடமாட்டோம். ராஜ துரோகி பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும்”
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2024/02/image-41-1024x768.png)
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2024/02/image-41-1024x768.png)