சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பா? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

SHARE

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றியை தழுவி மு.க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றார். பதவியேற்று கொண்ட அதே நாளில் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வாகினர். இந்நிலையில் தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 21-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கலைவாணர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.சபாநாயகர் அப்பாவு இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பிற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, சட்டப்பேரவை கூட்டத் தொடரை நேரடியாக ஒளிபரப்புவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அது நிறைவேற்றப்படும். ஜனநாயக முறைப்படி விருப்பு வெறுப்பின்றி அனைவருக்கும் பேச நேரம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆளுநரை சபாநாயகர் சட்டபேரவைக்கு அழைப்பது வழக்கம். அதன் படி, ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தேன் என்றும் கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இனி அசைவ உணவகங்களிலும் அரசுப் பேருந்தை நிறுத்தலாம்! – உத்தரவைத் திருத்தியது தமிழக அரசு!.

பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை

Admin

‘‘அவர்களுக்கு ஒன்றிய அரசு என்றால் எங்களுக்கு பாரத பேரரசு ’’- குஷ்பு

Admin

பாஜக இரட்டை வேடம் போடுகிறது : ம.நீ.மய்ய தலைவர் கமல்ஹாசன்

Admin

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து… மதிப்பெண் இப்படித்தான் வழங்கப்படும்… முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

Admin

ஹைட்ரோ கார்பனுக்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதிகளை வழங்காது – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Admin

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

Admin

வணிக வரித்துறை புகார்களுக்கு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை : அமைச்சர் மூர்த்தி தகவல்

Admin

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

போலி மதுவை தடுக்கவே டாஸ்மாக் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Admin

சிற்ப இலக்கணம் தொடர் – நாளை முதல் வெளியாகின்றது.

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு!

Admin

Leave a Comment