‘’மதனுக்கும் அந்த பெண்ணிற்கும் டி.என்.ஏ சோதனை நடத்துங்க ’’ – கொந்தளித்த இந்து முன்னணி தலைவர்!

SHARE

விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழகத்தில் கொண்டாடுவது பற்றி இந்து முன்னணியினர் கோவை ராம் நகர் பகுதியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து முன்னணி தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை உருவாக்கி உள்ளதாக கூறினார்.

மேலும், இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து வருவதால் ரமலான், பனிமயமாதா திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களும் கொண்டாடப்பட்டன. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை படுஜோராக நடைபெற்றுவருகிறது.

ஆகவே இந்த ஆண்டு அரசு அனுமதியுடன் விநாயகர் சதுர்த்திக்கு தமிழகத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் விநாயகர் சிலை வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு ஊர்வலம் நடத்த அரசு அனுமதி வழங்கவேண்டும் என கூறினார்.

தொடர்ந்து பா.ஜ.க பிரமுகர் கே.டி.ராகவன் விவகாரத்தில் வீடியோ வெளியிட்ட நபர் மதன்ரவிச்சந்திரன் குறித்து பேசிய சுப்பிரமணியம், ”மதன் மன நலம் சரியில்லாத நபர், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தொகுப்பாளராக வரும் பெண்ணை மதன் பல ஊர்களுக்கு கூட்டிக்கொண்டே சுற்றியுள்ளார். எனவே அந்த பெண்ணிற்கும், மதனுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும்” எனக் கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி… டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு

Admin

வேளாண் பட்ஜெட் 2024: `ஒரு கிராமம் ஒரு பயிர்` – ம.பியில் வென்ற திட்டம் தமிழ்நாட்டில் வெல்லுமா?

Pamban Mu Prasanth

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்… கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..

Admin

7 பேர் விடுதலையை காங்கிரஸ் ஆதரிக்காது – கே.எஸ்.அழகிரி

மேற்கு வங்க அரசியல்: 42 தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை அறிவித்த மமதா பானர்ஜி

Admin

சாதியை ஒழிக்க உதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ 10 லட்சம் : முதல்வர் அதிரடி அறிவிப்பு

Admin

தாலிபான்கள் தான் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் .. பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

Admin

கோ பேக் ராமர்… நாடகமாடினாரா பெண் துறவி? நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

2 ஆவது நாளாக போராட்டம்… ஆசிரியர்களை மிரட்டும் பெரியார் பல்கலைக்கழகம்… முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

பாஜகவுக்கு இதே வேலை தான்..கே.டி.ராகவன் விவகாரத்தில் போலீசுக்கு போன ஜோதிமணி எம்.பி.

Admin

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் – அதிரவைக்கும் அரசின் வெள்ளை அறிக்கை

Admin

1 comment

இதுதான் STING OPERATION ஆ? மதன் செய்த வேலைக்கு பெயர் என்ன? - Mei Ezhuththu August 28, 2021 at 7:04 pm

[…] ‘’மதனுக்கும் அந்த பெண்ணிற்கும் டி.என…ஸ்டிங் ஆப்பரேஷன்கள் என்றால் என்ன என்பதை எளிமையாக விளங்கிக் கொள்வோம். சமூகத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய அல்லது ஒரு சட்டவிரோத குற்றச் செயலைக் கையும் களவுமாக ஆவணப்படுத்தும் நோக்கில், மறைமுகமாக நடத்தப்படும் இரகசிய திட்டங்களுக்கு ஸ்டிங் ஆபரேஷன்கள் என்று பெயர். தமிழில் இதனை புலனாய்வு என்றும் சிலர் சொல்வதுண்டு. அது தவறு. எந்த ஒளிவு மறைவுகளோ, கூடுதல் ஆய்வு முடிவுகளோ இல்லாத, குற்றத்தை மட்டும் ஆவணப்படுத்தும் ஆதாரத்தை திரட்டும் நிகழ்வுதான் ஸ்டிங் ஆப்பரேஷன். அதாவது குற்றவாளியால் குற்றத்தை மறுக்கமுடியாத அளவுக்கான வலுவான ஆதாரத்தை ஸ்டிங் ஆப்பரேஷன்கள் மூலம் திரட்டலாம். ஆனால், அந்த ஆதாரங்கள் எதுவும் துளி கூட மாற்றப்பட்டோ, திருத்தப்பட்டோ இருத்தல் கூடாது. மார்ஃபிங் செய்தல், வெட்டி ஒட்டுதல் என எந்தவிதமான மனிதவேலைப்பாடுகளுமற்று இருந்தால்தான் அது சந்தேகத்துக்கிடமில்லாத ஆவணம். அதுபோக, ஆதாரத்தை திரட்டும் இந்த இரகசிய நபர் மூன்றாவது நபராக இருக்க வேண்டும். மாறுவேடத்தில் குற்றச் செயல்புரியும் கும்பலோடு இருந்தாலும் (இரகசிய போலீஸ் மாதிரி) ஆவணம் வெளிவரும்போது இவர் செய்தவற்றில் நல்நோக்கம் இருந்தால் மட்டுமே இவர் மன்னிப்புக்குரியவர். இல்லாவிட்டால் இவரும் குற்றமிழைத்தவராகவே கருதப்படுவார். ஏனெனில், ஒருவருக்குத் தெரியாமல் அவரது செயல்களை பதிவு செய்யும் முறை என்பது சட்டவிரோதமானதுதான். இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21 வழங்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை எல்லா தனிமனிதர்களுக்கும் வழங்குகிறது. இது மீறப்படும்போது அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது என்பதுதான் பொருள். […]

Reply

Leave a Comment