போதை ஏறிபோச்சு.. ஊரடங்கில் ஒயின் குடித்த எலிகள்

SHARE

ஊரடங்கு தளர்வினால் நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் எலிகள் ஒயினை குடித்சம்பவம் அரேங்கேறியுள்ளது.

உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் இயற்கைக்கு நன்மை செய்பவைதாம். மரங்களின் விதைகள் பல்வேறு இடங்களில் பரவுவதற்கு எலிகளின் பங்கு மிகவும் அவசியம்.

உலகின் உணவுச்சங்கிலி நிச்சயம் எலிகளின்றி முழுமை பெறாது. அதே சமயம் எலிகள் சில சமயம் தனது சேட்டைகளால் மனித குலத்துக்கு அவ்வப்போது தொந்தரவு கொடுத்து வருகிறது.

அந்த வகையில் தான் , நீலகிரி மாவட்டம் கூடலூர் காலம்புழா பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இன்று (ஜூலை 05) காலை மேற்பார்வையாளர் செந்தில்குமார், விற்பனையாளர் நித்தியாநந்தன் ஆகியோர் திறந்தனர்.

அப்போது, கடையில் இருந்த 12 குவாட்டர் பாட்டில்களின் மூடியை சேதப்படுத்தி இருந்ததுடன், அதிலிருந்த ஒயின் காலியாக இருப்பதை கண்டு, ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடையில் நடந்தது என்ன என்பது குறித்து ஊழியர்கள் சோதனை செய்தபோது எலிகள் பாட்டில்களை கீழே தள்ளி, மூடிகளை சேதப்படுத்தி அதிலிருந்த ஒயினை குடித்து சென்றது தெரியவந்தது.

இதன் மதிப்பு ரூ.1,900 ஆகும்.இச்சம்பவம், ஊழியர்கள் மட்டுமின்றி குடிமகன்களையும் கோபபடுத்தியுள்ளது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

செப்1. அங்கன்வாடிகள் திறப்பு… ஆனால், இப்படித்தான் இயங்க வேண்டும் : அரசு அறிவிப்பு

Admin

ஒரே நாளில் 1000 சிறார்களுக்கு கொரோனா!.

இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம். அமலுக்கு வருகின்றன கட்டுப்பாடுகள்.

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் …. கமல்ஹாசன்

Admin

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Admin

பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார் : கடுப்பான கே.எஸ். அழகிரி!

Admin

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

அதிகரிக்கும் கொரோனா காரணமாக சென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை

Admin

ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

சவுக்கு சங்கர் விபத்தில் இறந்தாரா?…கடைசியா என்னையே கண்டெண்ட் ஆக்கீட்டீங்களேடா!

Admin

ட்விட்டரைக் கலக்கும் புறக்கணிப்போம் புதியதலைமுறை

Pamban Mu Prasanth

Leave a Comment