தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை…

SHARE

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான காரணத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுக்கும் அவா் அனுப்பிய சுற்றறிக்கையில், ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் தாக்கம் அடுத்த சில நாள்களில் தான் தெரியும் என்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடா்ந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும் , மக்கள் கூடும் இடங்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில மாவட்டங்களில் வழக்கமானதை விட குறைவான மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தும், கடந்த இரு நாள்களை விட அதிகமான எண்ணிக்கையில் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே தஞ்சாவூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புக்கு காரணம் என்ன, எந்த இடத்தில் இருந்து கொரோனா பாதிப்பு அதிகமாக பரவுகிறது என்பன குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட ஆட்சியா்கள் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காய்ச்சல் முகாம்களைத் தொடா்ந்து நடத்துவதையும், குறைந்தபட்சம் அதில் 100 பேரையாவது பங்கேற்க வைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரடங்கில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…!

Admin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை டுவிட்டரில் புகழ்ந்த பவன் கல்யாண்.!!

Admin

‘‘அணில் ஓடுறதால பவர் கட்டா என்ன விஞ்ஞானம்’’ – ராமதாஸ் கிண்டல்!

Admin

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

Admin

இன்று திட்டமிட்டபடி நீட் தேர்வு..நாளை நீட்டுக்கு எதிராக தீர்மானம்…

Admin

3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது

Admin

பாஜக இரட்டை வேடம் போடுகிறது : ம.நீ.மய்ய தலைவர் கமல்ஹாசன்

Admin

ரவுடிகளுக்கு எதிரான சட்டம்… பேரவையில் நிறைவேறிய சுதர்சனத்தின் கோரிக்கை…

அரசு வேலை வேண்டாம்… தனியார் வேலையாவது கொடுங்கள்… மு.க.ஸ்டாலினை கவர்ந்த இளம்பெண் கடிதம்…

Admin

தவறாகப் பரப்பப்படுகிறதா… சீமான் பேசியது என்ன?

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு: தமிழக அரசு அறிவிப்பு

Admin

Leave a Comment