எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு!: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!.

SHARE

மே.வங்கத்தில் இன்று தொடங்கிய முதற்கட்ட தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையத்தின் முன் வைத்துள்ளது.

ஐந்து மாநில தேர்தல்கள் மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் முதற்கட்டத் தேர்தலோடு இன்று தொடங்கின. மேற்கு வங்கத்தில் இன்று 30 தொகுதிகளின் முதற்கட்ட தேர்தலோடு தொடங்கும் பேரவைத் தேர்தலானது ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் எட்டாம் கட்ட தேர்தலோடு நிறைவடையும்.

இந்நிலையில் முதற்கட்ட தேர்தலை எதிர்கொண்டுள்ள மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாக்குப் பதிவில் முறைகேடுகள் நடப்பதாக அடுத்தடுத்த புகார்களைத் தெரிவித்து உள்ளது.

காந்தி தக்ஷின் என்ற தொகுதியில் நடைபெற்ற வாக்குப் பதிவின் போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொத்தானை அழுத்தினாலும், ஓட்டு பாஜகவுக்கே விழுகின்றதாக விவிபாட் எந்திரம் காட்டியது என்று அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் குற்ரச்சாட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் சில தொகுதிகளில் வாக்குப் பதிவு சதவிகிதம் திடீரென குறைக்கப்பட்டு உள்ளதாகவும் புகைப்படங்களோடு திரிணமூல் காங்கிரஸ் டுவிட்டரில் குற்றம் சாட்டியுள்ளது. முதற்கட்ட தேர்தலின் போதே வாக்குப் பதிவு எந்திரத்தின் மீது புகார்கள் எழுந்துள்ளதால் தேர்தல் களம் தற்போது மேலும் சூடாகி உள்ளது.

நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்… கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..

Admin

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

Admin

50 பேருக்கு மேல் கூட கூடாது.. குர்பானி கிடையாது.. யோகி போட்ட அதிரடி தடை..

Admin

வயிறு எரிவதால் அகழாய்வினை எதிர்த்து எழுதுகிறார்கள் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Admin

கொரோனா 3ம் அலை வருமா என தெரியாது :எய்ம்ஸ் தகவல்!

Admin

அஞ்சிஅடிபணிவது தமிழர் பரம்பரைக்கே கிடையாது துணிந்து நில் தம்பி: விஜய்க்கு சீமான் அட்வைஸ்!

Admin

தந்தை திட்டியதால் பிரதமர் மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த இளைஞர்

Admin

மணிகண்டனை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை ? பொங்கி எழுந்த புகழேந்தி

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

சிறுவனைக் கொன்ற வழக்கில் குட்டியுடன் தாய் யானை கைது

Admin

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment