நீட் தேர்வில் விலக்கு…புதிய சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல்..

SHARE

தமிழகம் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வகையில் புதிய சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் பல மாணவர்களின் மருத்துவர் கனவு நனவாகி போனது தான் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக நீட் தேர்வால் தமிழகத்தில் மட்டும் இதுவரை 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

கொரோனா காரணமாக தாமதமாக இந்தாண்டு நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் கோழையூர் மாணவர் தனுஷ் தேர்வு எழுத செல்வதற்கு முன்பே தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடப்பு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளார். இந்த தீர்மானம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஏற்கனவே தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவனுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைத்து உத்தரவிட்டார்.

அந்த குழுவானது கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை டுவிட்டரில் புகழ்ந்த பவன் கல்யாண்.!!

Admin

பிளஸ்டூ மதிப்பெண் கணக்கீட்டு முறை அனைவருக்கும் திருப்தி அளிக்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

Admin

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.

முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கல

Admin

ஜெயலலிதா மரணம் விவகாரம்: 90% விசாரணை முடிந்துவிட்டது – ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

Admin

ஓபிஎஸ், உதயநிதி வெற்றியை எதிர்த்த வழக்குகள் தள்ளிவைப்பு.!!

Admin

வருமான வரித்துறை அதிரடி: சசிகலாவுக்கு சொந்தமான ரூ100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

Admin

சுஷில்ஹரி பள்ளி ஆசிரியை முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்

Admin

ஸ்டூடண்ஸ் மனமோ நந்தவனமே .. பள்ளி, கல்லூரிகள் திறப்பு ..மாணவர்கள் உற்சாகம்!

Admin

மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

காளைகளைக் காப்பாற்றினோம்… யானைகளை?: அழிவின் விளிம்பில் தமிழர் செல்வம்!.

Admin

Leave a Comment