கொடநாடு வழக்கில் புதிய திருப்பம் … என் தம்பிய திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்!

SHARE

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ்,அண்ணன் நேற்று போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், என் தம்பி விபத்தில் இறக்கவில்லை, திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர்’ என கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான் கடந்த வாரம் ஊட்டியில் போலீசார் முன் ஆஜராகி மீண்டும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய தீபு, சதீசன், சந்தோஷ்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் விஜயன், முனிரத்தினம் ஆகியோர் மனு ஒன்று தாக்கல் செய்தனர்.

athil, ‘முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, முன்னாள் கலெக்டர் சங்கர், எஸ்பி முரளி ரம்பா, அதிமுக வர்த்தகர் அணி மாநில தலைவர் சஜீவன், அவரது சகோதரர் சுனில், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ் உள்ளிட்டோரிடமும் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படும் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் அண்ணனிடம் விசாரணை மேற்கொள்ள கோத்தகிரி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

அதன்படி நேற்று காலை 11 மணியளவில் ஊட்டியில் உள்ள பழைய எஸ்பி அலுவலகத்திற்கு தனபால் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் நடந்த விசாரணையில் பல்வேறு தகவல்களை அளித்த தனபால்.

தனது தம்பியின் மரணம் திட்டமிட்ட கொலையே. விபத்து அல்ல என கூறியதாக தெரிகிறது. கனகராஜின் விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதனால்,கொடநாடு விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, கனகராஜின் விபத்து, கொலை குற்றமாக மாற்றப்பட்டு மீண்டும் விசாரணை துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

நான் நல்லா இருக்கிறேன் .. போட்டோவுடன் ட்வீட் போட்ட விஜயகாந்த்!

Admin

ஓவைசி கட்சியினர் தாலிபான்கள் போன்றவர்கள் – பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

Admin

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

பெட்ரோல், டீசல் வரி குறைப்பது தற்போது சாத்தியம் இல்லை: பி.டி.ஆர்

Admin

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

காவலர் தாக்கியதில் போதையில் இருந்தவர் பலியான விவகாரம் – தவறு செய்தோர் மீது நடவடிக்கை என முதல்வர் உறுதி!

Admin

நாங்க காந்தியா இருக்கணுமா ? சுபாஷ் சந்திரபோஸா இருக்கணுமா : பிரேமலதா ஆக்ரோஷம்!

Admin

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பில் குளறுபடி? சிங்காரவேலருக்கு புறக்கணிப்பா?

Admin

சர்க்கரை என்று காகிதத்தில் எழுதினால் இனிக்காது : பேரவையில் கடுப்பான அமைச்சர் செந்தில் பாலாஜி

Admin

விசிகவுக்கு 2 தொகுதிகள்தான்… ஏன் ஒப்புக்கொண்டேன்? மனம் திறக்கும் திருமா

Admin

தொலைக்காட்சி நிரூபரை ஓட ஓட விரட்டி தாக்கும் ஐஏஎஸ் அதிகாரி… வைரல் வீடியோ!

Admin

Leave a Comment