Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the ads-for-wp domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/vgcsilru/meiezhuththu.com/wp-includes/functions.php on line 6121
தீர்ந்தது இம்சை பிரச்சனை - மீண்டும் திரையுலகில் களமிறங்கும் வடிவேலு..! – Mei Ezhuththu

தீர்ந்தது இம்சை பிரச்சனை – மீண்டும் திரையுலகில் களமிறங்கும் வடிவேலு..!

SHARE

‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படம் தொடர்பான விவகாரத்தில் இயக்குநர் ஷங்கர் – வடிவேலு இருவருக்கும் இடையே சுமூகதீர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’. இதன் 2 ஆம் பாகம் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி என்ற பெயரில் உருவாக உள்ளதாக இரு வருடங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

ஆனால் ஆரம்பத்திலிருந்தே கதையில் வடிவேலு தலையிடுவதாகவும், இயக்குனர் சிம்புதேவனுடன் மோதல் போன்ற தகவல்கள் நிலவி வந்த நிலையில் வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.

அதனைத் தொடர்ந்து அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு புகார் அளித்தது. பிறகு வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

இதனால் வடிவேலுவால் பிற படங்களில் நடிக்க முடியாமல் போனது.நடுவில் கத்திச்சண்ட, மெர்சல் ஆகிய படங்களில் வடிவேலு நடித்தாலும் அவரால் முன்பு போல் பிரகாசிக்க முடியவில்லை.

கிட்டதட்ட 10 ஆண்டுகள் வடிவேலு இல்லாத படங்களே வெளியானதால் அவரது ரீ-எண்ட்ரி எப்போது என ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இதனிடையே இந்த தயாரிப்பாளர்கள் சங்கம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் ஷங்கர் – வடிவேலு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், எந்தவொரு சுமுகமான முடிவுமே எட்டப்படவில்லை.

இந்நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ’23-ம் புலிகேசி 2′ திரைப்படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார்.

மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி மேற்கண்ட பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வடிவேலு மீண்டும் முழுவீச்சில் இனி திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். இந்த செய்தி சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தி ஃபேமிலி மேன் 2 தொடரை உடனே தூக்குங்க: அமேசானுக்கு கடிதம் எழுதிய சீமான்

Admin

ஆட்டத்துக்கு வந்த அண்ணாத்த… மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு.

Admin

யுவன் பிறந்தநாள் கொண்டாட்டம்… பாடல் பாடி அசத்திய சிம்பு, தனுஷ்..

Admin

ஃபேமிலி மேன் தொடரை நீக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை – அமைச்சர் தகவல்

Admin

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் குறித்து விக்னேஷ் சிவன் அப்டேட்ஸ்

Admin

அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்… வலிமை’ பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வந்தாச்சு!

Admin

நடிகை சனம் ஷெட்டி அடையாறு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்

Admin

நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு… வேறு அமர்வுக்கு மாற்றம்

Admin

‘நீ ஜெயிச்சிட்ட மாறா’…அமிதாப்பச்சனை கதறி அழவைத்த சூர்யா பட பாடல்

Admin

ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன்… குவியும் எம்ஜிஆர் ரசிகர்கள்…

Admin

ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு – இந்த தீபாவளி ட்ரிபிள் ட்ரீட்

Admin

ஜகமே தந்திரம் படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடல்… எங்கே ..? எப்போ தெரியுமா?

Admin

Leave a Comment