எனது பிரச்சினையை தீர்த்து வைத்தவர் இவர்தான் – உண்மையை போட்டுடைத்த வடிவேலு

SHARE

தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் நடிகர் வடிவேலு தனது பிரச்சனையை தீர்த்து வைத்தது யார் என தெரிவித்துள்ளார்.

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர் – நடிகர் வடிவேலு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவருக்கு கடந்த 4 வருடங்களாக சினிமாவில் நடிக்க ரெட் கார்டு போடப்பட்டது. இந்த பிரச்சனை சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தால் தீர்த்து வைக்கப்பட்டது .

இதனை தொடர்ந்து நடிகர் வடிவேலு மீண்டும் முழுவீச்சில் சினிமாவில் நடிக்க உள்ளார். அவர் இயக்குநர் சுராஜ் இயக்கவுள்ள நாய் சேகர் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார். இதனை தமிழ் திரையுலகே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இதனிடையே வடிவேலு நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனது புதிய படம் குறித்து நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இந்த பிரச்சினையை முடித்து வைத்தது தமிழ் குமரன்தான்.இவர் பாமக ஜி.கே.மணியின் மகன் ஆவார்.

தமிழ்குமரன் லைக்காவில் சி.இ.ஓ உள்ளார்.சுபாஷ்கரன் சார், நான் மற்றும் தமிழ் குமரன் சேர்ந்து பிரச்னையை தீர்த்து இயக்குநர் சுராஜிடம் புதிய படம் குறித்து பேசினோம்.

”வடிவேலு நீங்கள் நல்லா வரணும். மேலும் பல படங்கள் செய்ய வேண்டும்” என்று சுபாஷ்கரன் சார் என்னை வாழ்த்தினார். அவர் வாழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என வடிவேலு கூறினார்.

மேலும் இந்த படத்தில் ஒரு பாடல் பாடுகிறேன். சந்தோஷ் நாராயணன் தான் புதிய படத்தில் இசையமைக்கிறார். இந்த படத்தில் அவர் இசையமைக்க வேண்டும் என்று முதலிலேயே ஆசை இருந்தது.

இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, சந்தோஷ் நாராயணண் கூறிய முதல் வார்த்தை ” தலைவன் வடிவேலு எங்கே.. அவர் படத்துக்கு மியூசிக் போடாம இருப்பேனா என்பது தான். மேலும் இந்த படத்தில் நீங்கள் கண்டிப்பாக ஒரு பாடல் பாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாகவும் வடிவேலு தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த படங்கள் எவை? – பட்டியல் இதோ…

ஜகமே தந்திரம் படத்திற்கு சிறப்பு சேர்த்த ட்விட்டர் நிறுவனம்…!

Admin

வழியெங்கும் வாக்குவாதம்… சென்னை கொண்டு வரப்பட்டார் மீரா மிதுன்…

Admin

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி… ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

“இசையுலகின் இளம் புயல்” ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் இன்று…!

Admin

போதை பொருள் கடத்திய திமுக நிர்வாகி நீக்கம் – யார் இந்த ஜாபர் சாதிக்?

Pamban Mu Prasanth

இயல் இசை நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்!

Admin

இரண்டாவது வழக்கில் மீண்டும் மீராமிதுன் கைது.!!

Admin

கொஞ்சம் காதலால் : வைரலாகும் கியரா அத்வானி வீடியோ!

Admin

சிரிக்க வைக்கிறதா அமேசானின் ‘எங்க சிரி பார்ப்போம்’ ரியாலிட்டி ஷோ?

ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன்… குவியும் எம்ஜிஆர் ரசிகர்கள்…

Admin

விஜய் இந்த ஜாதி தான்… கோபத்தில் பள்ளியை மிரட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர்…

Admin

Leave a Comment