கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

SHARE

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட இடைவெளியில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

முந்தைய படமான அயலான் ‘அறிபுனை’ (அறிவியல் புனைவு – Science Fiction) கதையாக வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், தற்போது டீசருக்கே கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது அடுத்த படமான அமரன்.

சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். இராணுவ வீரராக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த படத்தின் டைட்டிலும், டீசரும் வெளியானது. காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

பிரச்சினை என்ன?

இந்த நிலையில், இந்த படத்தில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகவும், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாகவும் கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் வெடித்துள்ளது.

திருநெல்வேலியில் கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயனின் உருவ பொம்மை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருவதால் அமரன் படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

படக்குழு சொல்வது என்ன?

படமே ரிலீசாகாத நிலையில், படத்தை முடிவு செய்வது தவறாகும் என்றும், முழு படத்தை பார்த்தால் தான் புரியும் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்படுவதோடு கமலஹாசனுக்கு இந்தியா கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கக் கூடாது என்றும் கோரிக்கைகள் வைத்து போராட்டங்கள் தொடங்கியுள்ளன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகின்றாரா ஜாக்கி சான்?

Admin

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 4,867 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Admin

குத்துப் பாட்டு மூலம் பாடகியாக அறிமுகமான லாஸ்லியா!

Admin

பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை

Admin

உயிர் பெறும் தமிழ் நாகரிகம் : அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு

Admin

இங்கிலாந்து பிரதமரின் மாமியார்… இந்தியாவின் யார் இந்த சுதா மூர்த்தி?

Admin

அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? – நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

Admin

நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி காரணம் என்ன?

Admin

நான் நல்லா இருக்கிறேன் .. போட்டோவுடன் ட்வீட் போட்ட விஜயகாந்த்!

Admin

2 ஆவது நாளாக போராட்டம்… ஆசிரியர்களை மிரட்டும் பெரியார் பல்கலைக்கழகம்… முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

காசிமேடு, திருவொற்றியூரில் கடற்கரையை அழகுபடுத்தும் பணி: தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

Admin

கேரள முதல்வராக வரும் 20ஆம் தேதி பதவி ஏற்கிறார் பினராயி விஜயன்

Leave a Comment