உயிர் பெறும் தமிழ் நாகரிகம் : அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு

SHARE

சிவகங்கை மாவட்டம் அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு சான்றாக விளங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடி, அகரம்,  மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் இதுவரை 6 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. 7ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் அகரத்தில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு ஏராளமான பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அகரம் அகழாய்வு தளத்தில் 8 அடி ஆழத்தில் புதிதாக மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஒரு குழியில் 15 சுடுமண் உறைகள் கொண்ட 15 அடி உறைகிணறும், மற்றொரு குழியில் 8 சுடுமண் உறைகள் கொண்ட 8 அடி உறைகிணறும் கண்டுபிடிக்கப்பட்டன.

தற்போது 3வது உறைகிணற்றை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் இது பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு சான்றாக விளங்குவதாக தெரிவித்துள்ளனர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. எடியூரப்பா

Admin

தோண்டத் தோண்டஅதிசயம்..கீழடி ஆய்வில் பழமையான கல் தூண் புதிதாக கண்டுபிடிப்பு!

Admin

சிவசங்கர் பாபாவின் இ-மெயில் முடக்கம்… சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை…

Admin

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

சிற்ப இலக்கணம். பகுதி 4. தொழிற் கை முத்திரையின் வகைகள் (5 – 8)

85 நாடுகளில் டெல்டா கொரோனா – உலக சுகாதார அமைப்பு கவலை!

Admin

ராஜீவ்காந்தி விருதை மாற்றியது அரசியல் காழ்ப்புணர்ச்சி: காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள். ஆட்டிசம் என்றால் என்ன?.

Admin

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு.. தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும் : பேரவையில் ஸ்டாலின் முழக்கம்

Admin

Leave a Comment