இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

SHARE

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொழும்பில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 50 ரன்களும் விளாச 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது.

இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா மற்றும் சமீரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் அசலங்கா 44 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். இதனால் 18.3 ஓவர்களில் இலங்கை அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

காதல் சுகமானது.. மைதானத்தில் இணைந்த இதயங்கள்.. வைரலாகும் வீடியோ!

Admin

இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

சே.கஸ்தூரிபாய்

போட்டி களத்துல மட்டும் தான்… மனசுல இல்ல.. ஒலிம்பிக்கில் தங்கத்தை தாண்டி மின்னிய நட்பு

Admin

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது காரணம் என்ன?

Admin

மேட்சா முக்கியம்… கிரிக்கெட் மைதானத்தில் காதல் சொன்ன சி.எஸ்.கே. வீரர்!.

கோபா அமெரிக்கா கால்பந்து: கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

Admin

இந்திய கிரிக்கெட் வீரரை 2வது முறையாக விவாகரத்து செய்த மனைவி…!!

Admin

இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர் திடீர் ஒத்திவைப்பு

Admin

ஐபிஎல் தொடரின் ஃபார்முலாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்…

Admin

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா – இலங்கை இன்று மோதல்

Admin

ஒரே ஒரு ரன்னில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு… பட்டியலில் மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment