இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

SHARE

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொழும்பில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 50 ரன்களும் விளாச 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது.

இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா மற்றும் சமீரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் அசலங்கா 44 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். இதனால் 18.3 ஓவர்களில் இலங்கை அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தோனியோட 7 ஆம் நம்பர் ஜெர்சி ரொம்ப முக்கியம் பாஸ் :முன்னாள் வீரர் வேண்டுகோள்.

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி… ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி!.

சே.கஸ்தூரிபாய்

அப்போது மல்யுத்த வீரன் ..இன்னைக்கு ஈட்டி எறிதலில் தங்க மகன்.. யார் இந்த சுமித் அண்டில்?

Admin

கண்ணீருடன் விடைபெற்ற லியோனல் மெஸ்சி – வைரலாகும் வீடியோ!

Admin

டோக்கியோ ஒலிம்பிக்கில் அதிரடி…வில்வித்தையில் இந்தியா அசத்தல் வெற்றி

Admin

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

ஒலிம்பிக் போட்டியிலிருந்து ஃபெடரர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லர் விலகல்

Admin

சூப்பர் சண்டேவில் சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி…

இரா.மன்னர் மன்னன்

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

இந்தியா – இலங்கை மோதும் ஒருநாள்,டி20 தொடர்: தேதி அறிவிப்பு

Admin

Leave a Comment