இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

SHARE

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொழும்பில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 50 ரன்களும் விளாச 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது.

இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா மற்றும் சமீரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் அசலங்கா 44 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். இதனால் 18.3 ஓவர்களில் இலங்கை அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அழகிப்போட்டி மேடையில் மியான்மருக்கு உதவி கேட்ட அழகி: துணிச்சலை வியந்த அரங்கம்!.

ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் ஓய்வை அறிவித்தார் :கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

Admin

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

இங்கிலாந்தை ஓட ஓட விட்ட இந்திய அணி – ஓவல் டெஸ்டில் அபார வெற்றி

Admin

ஐபிஎல் தொடருக்காக 5வது டெஸ்ட் போட்டி ரத்து ? – சர்ச்சையில் சிக்கிய இந்திய அணி

Admin

தங்க மகனுக்கு எஸ்யுவி கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா

Admin

முதல் ஐ.பி.எல். போட்டி: வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

சே.கஸ்தூரிபாய்

சூப்பர் சண்டேவில் சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி…

இரா.மன்னர் மன்னன்

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

சே.கஸ்தூரிபாய்

புதிய தோற்றத்தில் தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Admin

ரத்த தானம் செய்த கிரிக்கெட் ஜாம்பவான்… வைரல் வீடியோ

Admin

மயங்கி விழுந்த நட்சத்திர வீரர்..நிறுத்தப்பட்ட யூரோகால்பந்து போட்டி!

Admin

Leave a Comment