அழகிப்போட்டி மேடையில் மியான்மருக்கு உதவி கேட்ட அழகி: துணிச்சலை வியந்த அரங்கம்!.

SHARE

உலக அளவிலான அழகிப் போட்டி ஒன்றில் மியான்மர் நாட்டு அழகி அந்நாட்டில் நடந்துவரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக பேசியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

‘மிஸ் கிராண்ட் இண்டர்நேஷனல்’ என்ற சர்வதேச அழகிப்போட்டி கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் ஏற்கனவே பல்வேறு நாடுகளிலும் வெற்றி பெற்றவர்களின் இறுதிச் சுற்று தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகின்றது.

இதில் மியான்மர் நாட்டின் சார்பில் கலந்து கொண்ட 22 வயது கல்லூரி மாணவி ஹான் லே என்பவர் நிகழ்வின் மேடையில் ஆற்றிய உரை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. அந்த உரையில் அவர், மியான்மன்ர் நாட்டில் இராணுவம் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து மக்களைக் கொன்று குவித்துவருவதாகவும், மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் வீதிக்கு வந்து போராடி வருவதாகவும் கூறினார். அத்தோடு சர்வதேச அளவில் உதவிகள் தேவைப்படும் நிலையில் மியான்மர் உள்ளதால் அனைவரும் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஹான் லேவின் இந்த துணிச்சலான பேச்சுக்கு நிகழ்ச்சியின் தலைவர் உட்பட அரங்கத்தில் இருந்த பலரும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக கைத்தட்டினர். இந்த ஹான் லே கடந்த மாதம் இராணுவ ஆட்சிக்கு எதிராகத் தெரிவில் இறங்கிப் போராடியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்… உலக சாதனை படைத்த பெண்..

Admin

காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு மோசடி வழக்கில் சிறை! – நடந்தது என்ன?

Admin

தங்கப்பதக்கம் வென்ற எலி… பணியில் இருந்து ஓய்வு

Admin

சீனாவை ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம்: ஜின் பிங் ஆவேச பேச்சு

Admin

மழையால் ரத்தான டிஎன்பிஎல் முதல் ஆட்டம்: ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

Admin

ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்!

Admin

தாலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு… யாருக்கு என்ன பதவி?

Admin

அமெரிக்காவில் பற்றி எரியும் காடுகள் – திணறும் தீயணைப்பு படை வீரர்கள்

Admin

காதல் சுகமானது.. மைதானத்தில் இணைந்த இதயங்கள்.. வைரலாகும் வீடியோ!

Admin

வெடித்த மேகன் மார்கல்… விளக்கம் கொடுக்கும் இங்கிலாந்து ராணி… நடந்தது என்ன?

Admin

ஜடேஜாவை அணியில் சேர்த்தது மிகப்பெரிய தவறு – சஞ்சய் மஞ்சரேக்கர் விளாசல்

Admin

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

Leave a Comment