அடுத்த ஆண்டிலும் சி.எஸ்.கே..?தோனி சூசகம்… ரசிகர்கள் மகிழ்ச்சி…

SHARE

ஐபிஎல் லின் 14 வது சீசன் நேற்று நடந்த இறுதிப் போட்டியுடன் கோலாகலமாக நிறைவடைந்தது.  போட்டியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் கோப்பையை பெற்ற போது அளித்த பேட்டியில் தோனி சொன்ன ஒரு பதிலால் ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்…

அப்படி என்னதாங்க சொன்னார் தோனி?

அடுத்த ஆண்டு விளையாடுவீர்களா? – என்ற கேள்விக்கு, ’அடுத்த வருடம் புதிதாக இரண்டு அணிகள் வரவுள்ளன. பிசிசியின் முடிவில் தான் என்னுடைய ஐபிஎல் பயணம் தொடர் அமையும்’ என்று தோனி கூற, அதற்கு வர்ணனையாளர், ’இது பிசிசிஐயின் பொறுப்பில் இல்லை, நீங்களும், சிஎஸ்கேவும் எடுக்க வேண்டிய முடிவு’ என்று கேட்டார்.

அதற்கு தோனி சிரித்துக்கொண்டே, ’நான் என்னை பற்றி யோசிப்பதை விட, சிஎஸ்கே பற்றிதான் யோசிக்க வேண்டும். இந்த அணி இன்னும் 10 ஆண்டுகள் சிறப்பாக அமைய வேண்டும். 2008 இல் இருந்து 2021 வரைக்கும் எப்படி சிறப்பா செஞ்சிருக்கோமோ, அதே மாதிரியான ஒரு அணியை உருவாக்கணும், என்னை விட 3 முக்கிய வீரர்களை தக்க வைத்துக் கொள்வதே நல்லது’ என்று கூற, வர்ணனையாளர் பேட்டியை நிறைவு செய்யப்போக, தோனி சிரித்துக் கொண்டே ’நான் இன்னும் பின் வாங்கவில்லை’ என்று கூறிச்சென்றார். 

இந்த வார்த்தைகளில் ’நான் இன்னும் விலகவில்லை என்றும் மீண்டும் விளையாடுவேன்’ என்று சூசகமாக தோனி கூறி உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

‘இந்திய அணியில் மீண்டும் தோனி’ – டி20 உலக்கோப்பைக்கான வீரர்கள் அறிவிப்பு

Admin

யெஸ்.பாலபாரதி நூலுக்கு பாலபுரஸ்கார் விருது… முதல்வர் வாழ்த்து

Admin

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது காரணம் என்ன?

Admin

ட்விட்டரில் கணக்கு தொடங்கிய “ஒன்றிய உயிரினங்கள்”… காரணம் இதுதான்…!

Admin

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

பாலியல் வன்கொடுமை குற்றவாளியை சுட்டுப்பிடித்த சென்னை போலிஸ் – நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழக நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்

Admin

திருஷ்டி பூசணிக்காயாக சன்னி லியோன்… சோகத்தில் ரசிகர்கள்…!

Admin

இந்திய கிரிக்கெட் வீரரை 2வது முறையாக விவாகரத்து செய்த மனைவி…!!

Admin

கப்பு முக்கியம் பிகிலே ..டோக்கியோவிற்கு புறப்பட்ட இந்திய வீரர்களை வாழ்த்தி அனுப்பிய இந்தியா!

Admin

அப்போது மல்யுத்த வீரன் ..இன்னைக்கு ஈட்டி எறிதலில் தங்க மகன்.. யார் இந்த சுமித் அண்டில்?

Admin

Leave a Comment